Saturday, March 25, 2017

அசோகமித்திரனும் திராவிட இயக்க வெறியர்களும்

அசோகமித்திரன் பிறப்பால் பிராமணர். இது ஊரறிந்த செய்தி. அமி பிராமணர்கள் நாஜி ஜெர்மனியில் யூதர்கள் ஒடுக்கப்பட்டது போல் ஒடுக்கப் படுகிறார்கள் என்று சொன்ன போது அதை வண்மையாகக் கண்டித்துப் பதிவிட்டேன். நாஜி, யூத மற்றும் யூத அழிப்பின் வரலாறுகளைத் தொடர்ந்து படித்து வரும் என்னால் அத்தகைய ஒப்புமையை ஏற்க முடியாது. சமீபத்தில் சர்ச்சிலை ஹிட்லரோடு ஒப்பிட்டதை எதிர்த்த என் பதிவுகளும் அக்காரணத்தாலேயே எழுதப்பட்டது. 

அமி இறந்து தகனமும் நடந்துவிட்டது இப்போது சில விஷயங்களை நான் சுதந்திரமாகச் சொல்ல முடியும். 

அமியின் புனைவிலக்கிய ஆளுமை பற்றி எல்லோரும் எழுதி தள்ளிவிட்டார்கள். நான் அவரின் 'இன்று', 'ஒற்றன்', 'புலிக் கலைஞன்' ஆகியவற்றையும் கட்டுரைத் தொகுப்புகள் சிலவும் சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் சிலவும் தான் நான் படித்தவை. அவர் அப்பளம் விற்றார், எழுத்தையே நம்பி வாழ்ந்தார், நல்ல மனிதர், அங்கீகாரமில்லாமல் இறந்தார், பிராமணர் என்பதாலேயே அங்கீகாரம் இல்லை என்பன போன்ற உணர்ச்சி ததும்பல்களை விடுத்து அவர் எழுதிய புனைவுகளை மதிப்பிட பலர் தயாராக இல்லை. ஒரேயொரு ஆறுதல் யாரும் அவர் கட்டுரைகளைப் பற்றிப் பேசாதது. அவர் கட்டுரைகைள் மிக மிக சாதாரணமானவை.



நான் பலமுறை சொல்வது தான், புனைவிலக்கிய எழுத்தாளர்களுக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும், உலக வரலாறு, பண்பாட்டு வரலாறு ஆகியனக் குறித்துச் சராசரியை விடக் கொஞ்சமாவது அதிகமாகத் தெரிந்திருக்க வேண்டும். அமியின் கட்டுரைகளை வைத்துப் பார்த்தால் அவருக்கு உலக வரலாறு ஞானம் லேது. அவர் தனிப்பட்ட முறையில் எதைப் படித்தார், எவ்வளவு படித்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது, தேவையுமில்லை. எழுத்தில் அப்படிப் படித்தற்கான அடையாளம் இல்லை. நூல்களின் பட்டியலைத் தரவில்லையென்றோ, நூல்கள் பற்றி எழுதவில்லை என்றோ, மேற்கோள்கள் இல்லை என்ற காரணங்களுக்காகவோ இதைச் சொல்லவில்லை. பிலிப் ராத்தும் மிலன் குந்தேராவும் நடத்திய உரையாடலில் அவர்களின் வரலாறு பிரக்ஞை மிளிரும். நைபாலும் ஹெர்மேன் ஹெஸ்ஸும் வரலாறில் திளைப்பவர்கள். அமி அப்படிப்பட்டவர் அல்ல. 
ஒற்றன் கதை சராசரி நடுத்தர வர்க்கத்து இந்தியன் அமெரிக்கா சென்றால் என்னென்ன மனப் பதிவுகள் இருக்குமோ அது தான் இருக்கும். அதில் அந்தப் பாத்திரம் ஒற்றன், இந்தப் பாத்திரத்தின் வழியாக அமெரிக்க வாழ்க்கையைப் படம் பிடித்தார், எழுத்தாளனே வெளியில் தெரியாமல் அமெரிக்காவிலும் சாதாரணர்களின் வாழ்வியலை அலங்காரமில்லாமல் சொல்கிறார் என்றெல்லாம் களிப்படைபவர்கள் ஞானவான்கள். 
அவர் தமிழ் நாட்டில் பிராமணர்கள் நடத்தப்படும் விதத்தை யூதர்கள் ஐரோப்பாவில் நடத்தப்பட்டதோடு ஒப்பிட்டது வரலாறின் அறியாமையே காரணம். யூதர்கள் 2000 ஆண்டுகளாக ஐரோப்பாவில் அடக்கு முறையையும் அதீத வெறுப்பின் வலியையும் உணர்ந்தவர்கள். ஒரு பேட்டியில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அவருக்கு இருக்கும் ஏமாற்றத்தைப் பற்றிச் சொல்லியிருப்பது மிகவும் குறிப்பிடத் தக்கது ஏனெனில் அது அமியின் உலகுக்கு ஒரு திறப்பு. 
அமி பற்றி எழுதிய பலரும், கிட்டத்தட்ட எல்லோரும், அவர் அலங்காரமில்லாத நடையில் சாதாரான மனிதர்களைப் பற்றி எவ்விதமான வார்த்தை அலங்காரமோ கருத்தியல் அலங்காரமோ இல்லாமல் வாசகன் எவ்விதத்திலும் எழுச்சியடைந்துவிடக் கூடாது என்று எழுதியதாகச் சொன்னார்கள். ஜெயமோகன் ஒருமுறை "அமி அக எழுச்சியே கூடாது என்று எழுதுபவர்" என்றார் எனக்கெழுதிய கடிதத்தில். நான் அயன் ராண்டை ஆராதிப்பவன் எனக்கு அமியின் புனைவுலகம் என்றும் ஒவ்வாதது அவ்வளவு தான். உடனே "அஹா அயன் ராண்ட் ஒரு குப்பை அதைப் படித்தவன் இப்படித்தான் இருப்பான், உனக்கு இலக்கியமே தெரியாது" என்றெல்லாம் பாய வேண்டாம். என் உலகம் வேறு அவர் உலகம் வேறு என்பதற்காகச் சொல்கிறேன் அவ்வளவு தான். 
ஷேக்ஸ்பியர் பற்றி அமி சொல்வனம் பேட்டியில் சொன்னது (http://solvanam.com/?p=31404) : 

"சொ.வ: கவிதை எந்தகாலத்திலயும் உங்களைக் கவர்ந்ததில்லையா?
அ.மி: இல்லே இல்லே இந்தப் பொயட்ரி.. சமீப காலத்துலே எனக்குக் கவிதை மேலே ரொம்ப ஒரு ஏமாற்றமாத்தான் இருக்கு. சொன்னா சண்டைக்கு வந்துடுவாங்க இப்போ – எனக்கு இந்த ஷேக்ஸ்பியரே ஹி வாஸ் மோர் எ க்ளெவர் பெர்ஸன் தேன் எ க்ரேட் பெர்ஸன். அவர் எல்லாத்தயுமே புத்திசாலித்தனமா வேறே மாதிரி சொல்லிடுவார். இந்தப் புத்திசாலித்தனமா வேறே மாதிரி சொல்றது இருக்கே அந்த வேறே மாதிரி சொல்றதுலே ஒரு முயற்சி இருக்கு. அவரோட எண்டர், எக்ஸிட் அதுதான் நார்மலா இருக்கும். ஹேம்லெட் அவரோட ரொம்பப் புகழ் பெற்ற நாடகம். அதுல க்ளாடியஸ் ”பைத்தியம்னாலும் அவனைக் கவனிச்சுண்டு இருக்கணும் ஒரு கண் வெச்சுண்டு இருக்கணும்”னு சொல்வான். இதை அவன் நார்மலா “யூ ஷுட் கீப ஏன் ஐ ஆன் ஹிம், ஆர் யூ ஷுட் வாச் ஹிம்’னு சொல்லலாம். இவன் என்ன சொல்லுவான், “பட் மேட்னெஸ் அண்ட் க்ரேட்னெஸ் மஸ்ட் நாட் அன்வாச்டு கோ’ [1]
(பெரிதாய் சிரிக்கிறார்)
ஷேக்ஸ்பியர்லே இது மாதிரி நெறைய இன்ஸ்டன்ஸஸ் இருக்கு. இப்போ எனக்குத் தோண்றது இதுதான். Madness and greatness must not unwatched go.
(மீண்டும் பெரிதாய் சிரிக்கிறார்)
எனக்கு ரொம்பக் கெட்டிக்காரத்தனமா செய்யறதே கொஞ்சம் பயம்மா இருக்கும்… கெட்டிக்காரங்க கிட்டே நாம என்ன பண்ண முடியும்? பேசாமே வெளில போயிடணும். அதான், கவிதைலெ இப்ப அந்த மாதிரி ஒரு மனநிலை வந்துடுத்து. ஆனா எனக்குதான் இது. மத்தவங்களைப் படிக்காதீங்கன்னு சொல்லலை, ரசிக்காதீங்கன்னு சொல்லலை." 

அமியின் எழுத்தை மட்டுமல்ல அவரின் உள்ளார்ந்த உலகத்தைப் படம் பிடித்துக் காட்டும் வரிகள் அவை. "எனக்கு ரொம்பக் கெட்டிக்காரத்தனமா செய்யறதே கொஞ்சம் பயமா இருக்கும்...கெட்டிக்காரங்க கிட்டே நாம என்ன பண்ண முடியும்? பேசாம வெளியில போயிடனும்". எனக்கு அமியின் உலகம் எப்படி அந்நியமாகவே இருக்குமோ அப்படி அவருக்கு ஷேக்ஸ்பியரின் உலகம் அந்நியம் தான். கவிதைகளில் வார்த்தையின் தேர்வு பற்றி ஏ.சி. பிராட்லியின் புகழ்பெற்ற பேருரைகளின் தொகுப்பில் அவர் Lochinvar எனும் கவிதையில் "Through all the wide border his steed was the best" என்பதை "through all the wide border his horse was the best" என்று எழுதினால் நயம் சிதைவதை சொல்லியிருப்பார். "You should keep an eye on him" என்பதற்கும் "madness and greatness must not unwatched go" என்பதற்கும் இருவேறு உலகாயதமான அறிவு இடைவெளி இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நாடகத்தை அதன் பண்பாட்டுப் பிண்ணனியில் இருந்து பிய்த்து எடுத்து 21-நூற்றாண்டின் மினிமலிஸம் எனும் கண்ணாடி கொண்டு பார்ப்பது ஒரு புறம் இன்னொரு பக்கம் அவ்வாக்கியத்தைச் செதுக்கியதில் ஷேக்ஸ்பியரின் புத்திசாலித்தனம் வெளி வந்துவிட்டதால் குறையுடையதாகக் கருதும் அவர் விழுமியம் அவருக்கு அறிவுத் தளத்தின் மீதிருக்கும் காழ்ப்பு அல்லது அவ நம்பிக்கை தெரிகிறது. 
எழுத்தாளர்காளை சராசரிகளாக்கிப் பார்க்கும் சமூகத்தின் நோய்மையை ஜெயமோகன் சமீபத்தில் சாடியிருந்தார். அமி சராசரித்தனத்தை மட்டுமே கொண்டாடுவதோடல்லாமல் சராசரிக்கும் மேலானதை சந்தேகிக்கிறார். ஏ.எல். பாஷமை குறித்து அமி சொன்னதாக ஜெயமோகன் எழுதியது: "அவர் ஹிஸ்டரியில் பர்ஸனல் கிரியேட்டிவிட்டியைக் கொண்டு வந்து விடுகிறார்". பேஸ்புக்கில் இன்னொருவர் அதற்குக் காரணம் அமி அலங்காரமில்லாத எழுத்தை விரும்புபவர் என்றார். நான், "அமி ஸ்டைலில் வரலாறு எழுதினால், வந்தான், வென்றான், செத்தான்னு தான் எழுத முடியும்". 
ஷேக்ஸ்பியரின் இன்னொரு மிகப் புகழ் பெற்ற நாடகமான 'மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ்' கதையில் வரும் ஷலைக்கை பலரும் வெறும் வில்லனாகவே புரிந்துக் கொள்வார்கள். ஆந்நாடகம் வெனிஸில் அன்று யூதர்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டும். அதில் ஷைலக்கின் 'monologue' ஒன்று மிக ஆழமானது. யூதர்களின் நிலைப் பற்றி ஷைலக் சொல்வான்: 

To bait fish withal: if it will feed nothing else,
it will feed my revenge. He hath disgraced me, and
hindered me half a million; laughed at my losses,
mocked at my gains, scorned my nation, thwarted my
bargains, cooled my friends, heated mine
enemies; and what's his reason? I am a Jew. Hath
not a Jew eyes? hath not a Jew hands, organs,
dimensions, senses, affections, passions? fed with
the same food, hurt with the same weapons, subject
to the same diseases, healed by the same means,
warmed and cooled by the same winter and summer, as
a Christian is? If you prick us, do we not bleed?
if you tickle us, do we not laugh? if you poison
us, do we not die? and if you wrong us, shall we not
revenge? If we are like you in the rest, we will
resemble you in that. If a Jew wrong a Christian,
what is his humility? Revenge. If a Christian
wrong a Jew, what should his sufferance be by
Christian example? Why, revenge. The villany you
teach me, I will execute, and it shall go hard but I
will better the instruction. 

அந்த ஒரு monologue போதும் 2000-ஆண்டு வரலாறைச் சொல்ல. அத்தகைய படைப்புலகம் அமிக்கு கைவராதது மட்டுமல்ல அதைப் புரிந்துக் கொள்ளுதலும் அவருக்கு இயலாததே. 
யூத வரலாறு மிகச் சிக்கலானது. யூதப் பேரழிவைக் குறித்துச் சமீபத்தில் வெளி வந்த மருதனின் "ஹிட்லரின் வதை முகாம்கள்" தவிர வேறு நூல்கள் தமிழில் இல்லை. வாசித்தவர்கள் பலர் அப்புத்தகம் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழில் அப்படியொரு புத்தகம் வெளி வந்திருப்பதே மகிழ்ச்சி. வரலாறைப் படித்துப் புரிந்துக் கொண்டவர்கள் யாரும் "ஹிட்லரைப் போல்", "யூதப் பேரழிவைப் போல்" என்பதைச் சீரியஸாகச் சொல்ல மாட்டார்கள். இன்னொரு ஹிட்லரோ, இன்னொரு யூதப் பேரழிவுப் போன்றதோ நிகழாதது வரலாறின் கருணை. 
அமி சாதாரணர் அல்லர். வார்த்தைகளின் தேர்வில் கவனமிருந்திருக்கலாம். பிராமணர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் நிலைக் குறித்து யூதர்ளை வம்புக்கு இழுக்காமல் பேசியிருக்கலாம். வார்த்தைகளின் தேர்வின் குறைபாடு என்பதை விட வரலாறின் அறியாமை தான் அவரை அப்படிப் பேச வைத்தது. 
'ஹிட்லரைப் போல்', 'யூத பேரழிவைப் போல்' என்று பேசாமல் தமிழ் நாட்டில் அண்ணாதுரையும், ராமசாமி நாயக்கரும் முன்னெடுத்த பிராமணத் துவேஷம் நாஜித்தனத்தின் உட்கூறுகளை ஒத்தது என்று சொன்னால் அது மிகச் சரியான வாதம். அண்ணாதுரையின் "ஆரிய மாயை" பச்சையான நாஜித்தனமான பிரச்சார நூல். விடுதலை பத்திரிக்கையை எடுத்தால் நாயக்கர் கால்ம் தொட்டு இன்றைய அரசியல் தரகரான வீரமணியின் காலம் வரை நாஜித்தனம் தான். 
தான் எழுதிய கதைகளில் பெரும்பாலும் பிராமணக் கதாபாத்திரங்களை வைத்தே எழுதியவர் ஜெயகாந்தன் ஆனால் அமியை நோக்கி வசை மழை வருகிறது அவர் பிராமணக் கதா பாத்திரங்களை வைத்தே எழுதினார் என்று. ஒன்று, அது அவர் வளர்ந்த சூழல். இரண்டு, எதை எப்படி எழுத வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது எழுத்தாளன். அமியின் எழுத்துகளை ஆழ்ந்துப் படித்தவர்கள் சிலர் இந்த வசையில் உண்மையில்லை என்கிறார்கள். அது முக்கியமல்ல. ஜெயகாந்தனை நோக்கி வீசப்படாத வசை ஏன் அமி நோக்கி மட்டும் வீசப்படுகிறது. அது தான் நாஜித்தனம். 
அமியை பிராமணர் என்பதாலேயே பரிந்துரைக்க மறுத்த அரசு இயந்திரங்களை நாஜித்தனம் என விளிக்காமல் வேறென்ன சொல்வது. பிராமணர்கள் என்பதாலேயே ஒரு காலத்தில் சராசரிகளும் கொண்டாடப்பட்டது உண்மை. இன்று இது குறைந்து விட்டாலும் சோ, எஸ்.வி,சேகர், ஒய்.ஜி, மகேந்திரன், கிரேஸி மோகன் ஆகியோர் விஷயத்தில் இது உண்மை. தமிழ் நாட்டில் நாடக கலையை சீரழித்ததில் மேற் சொன்ன எல்லோருக்கும், குறிப்பாக கடைசி மூவருக்கும் பெரும் பங்குண்டு. ஆனால் இன்று பிராமணன் என்பதாலேயே சராசரிக்கு மேலாக இருந்தாலும் புறக்கணிக்கப் படுவது நாஜித்தனம் தான். 
பிராமணக் கதா பாத்திரங்களை வைத்து எதை வேண்டுமானாலும் எழுதலாம் அதையே வேறு சமூகத்தினரை வைத்து எழுதினால் எழுத்தாளரின் உயிருக்கு உத்தரவாதமில்லை. பெருமாள் முருகனை கேட்டுப் பாருங்கள். 'தனம்' போன்ற ஒரு சினிமாவை இன்று எடுத்து வெளியிடலாம் ஆனால் 'மாதொரு பாகன்' எழுதியவர் 'எழுத்தாளன் செத்து விட்டான்' என்று ஆறிக்கை விட வைத்துவிடுவார்கள். பல்லாயிரம் முறை சொல்லி அலுத்துப் போனாலும் இன்னொரு முறை சொல்ல வேண்டிய உதாரணங்கள் இரண்டு. 
ஜெயகாந்தன் 'ரிஷி மூலம்' கதையைப் பிராமணரல்லாத வேறெந்தச் சமூகத்தை வைத்து எழுதியிருந்தாலும் கொலை செய்யப்பட்டிருப்பார். சுஜாதா பிராமணரல்லாத (தேவர்? கவுண்டர்?) வேறொரு ஜாதிப் பெண் கதாபாத்திரம் ஓடி வரும் போது மார்பகங்கள் முயல் குட்டியை போல் துள்ளியதாக எழுதியதற்காக அத்தொடரையே நிறுத்த வேண்டியிருந்தது. ஒரு வேளை அச்சமூகத்தின் பெண்களின் மார்பகங்கள் துள்ளாதோ என்னமோ. சராசரி தமிழன் வடக்கத்தியான மனீஷாவின் துள்ளலை ரசிக்கும் பரந்த மனம் படைத்தவன் என்பது வரலாறு. 
எழுத்தாளன் தான் பிறந்த சமூகத்தைத் தாண்டி மற்ற சமூகங்களை முன் வைக்கும் ஆக்கங்களை இயற்றுவது மேன்மையான ஒன்று. தன் சமூகத்தின் கீழ்மைகளையாவது எழுதினால் நலம். பிராமணச் சூழலை வைத்து எழுதிய தி.ஜாவின் 'இசை' பிராமணச் சமூகத்தின் ஜாதியத்தை இடித்துரைக்கும், எள்ளலோடு. இ.பாவின் 'குருதிப்புனல்' தன் சமூகம் சாராத இன்னொரு சமூகத்தில் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான சம்பவத்தைத் தன் மேட்டிமைக் கண்ணாடிக் கொண்டு சமைத்துக் கொடுக்கப்பட்ட ஆக்கம். இந்த விவாதங்கள் நிகழ்த்தப் பட வேண்டிய தளம் இலக்கிய ஆய்வு, இலக்கிய விமர்சனம் எனும் தளம். ஆனால் இங்கே நிகழ்த்தப்படுவதோ "செத்தவன் பாப்பான், பாப்பார கதைகளை எழுதி பாப்பான்களால் கொண்டாப்படுபவர்" என்று காறி உமிழும் நாஜித்தனம். 
தமிழ் நாட்டில் மட்டும் தான் சுஜாதா பிராமணச் சங்கத்துக் கூட்டத்திற்குச் சென்றார் என்று அறச் சீற்றத்தோடு, கண்மனி குணசேகரன் பா.ம.க மேடைகளில் தோன்றியதை சவுகரியமாக மறந்து விட்டு, கொந்தளிக்க முடியும். சுஜாதா தன்னை நாத்திகர் என்று எங்கும் முன்னிறுத்தியவர் அல்ல. அவரின் விஞ்ஞானம் பற்றியப் கதைகளில் போர்னோ தன்மை தான் அதிகம் விஞ்ஞானத்தை விட. சுஜாதாவுக்குத் தொழில்நுட்பம் பற்றிய ஞானம் இருந்த அளவு அறிவியலை தத்துவார்த்தமாகப் புரிந்துக் கொண்டவரல்ல. அது அவரது எழுத்துகளை வைத்துச் சொல்வது. கார்ல் பாப்பரை பற்றித் தமிழில் அதிகம் எழுதியவர் ஜெயமோகனாக இருப்பார். தொழில் நுட்பம் வேறு, அறிவியல் என்பது வேறு என்று எழுதியது பி.ஏ. கிருஷ்ணன். மீண்டும், இந்த விமர்சணங்கள் வைக்கப் படத் தளங்கள் வேறு ஆனால் தமிழகப் பெரியாரிய நாஜிக்களுக்குச் 'சுஜாதா பாப்பான்' என்று நிறுவுவதில் தான் முனைப்பு. ஜெயகாந்தனும் பிராமணச் சங்கத்தில் பேசியுள்ளார், அதுவும் 'யார் பிராமணன்' என்று. காண்க, "ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்". வேடிக்கை என்னவென்றால் அங்கே இருந்த நிர்வாகி முதலில் ஜெயகாந்தனை பிராமணர் என்று அறிவித்து விடுவார், "அவர் இங்கு இருக்கலாமா" என்ற கேள்வி எழுந்த போது. தான் பிராமணன் அல்ல என்று தெளிவுப் படுத்தி மாலையில் நடக்கும் Open Forum-இல் மேற்கொண்டு பேசுவதாகச் சொல்லி ஜெயகாந்தன் வெளியேறினார். அந்த நிர்வாகி எழுத்தாளரெல்லாம் பிராமணர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணும் சாதாரனராக இருந்திருக்கக் கூடும். 
அமியின் இந்தச் சர்ச்சை குறித்து வெளிவந்த கட்டுரை ஒன்றில் திராவிட இயக்கத்தின் பிராமணத் துவேஷத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இன்றி, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ நடக்கிறது, யூதர்கள் போல் என்று சொல்வது தவறு என வாதிட்டுச் சரவணக் கார்த்திக்கேயன் என்பவர் எழுதியுள்ளார் (http://www.writercsk.com/2017/03/blog-post_25.html) . அது தவறு. மேலும் போகிற போக்கில் இட ஒதுக்கீட்டினால் பிராமணர்கள் பாதிக்கப் படவேயில்லை என்று சால்ஜாப்பு. இது தவறு. இன்று இட ஒதுக்கீட்டினால் கிட்டத்தட்ட மருத்துவத் துறை படிப்பை விட்டுப் பிராமணர்கள் விலகி விட்டார்கள் என்பதே நிஜம். அவர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் என்று சொல்வது நாஜித்தனம். நுழைவுத் தேர்வு வேண்டும் என்று கபில் சிபல் சொன்ன போது இனி பிராமணர்கள் கல்வி அமைச்சராகவே ஆகக் கூடாது என்று வீரமணி கொக்கரித்தார். நுழைவுத் தேர்வு என்பதே ஆரிய சதி என்றெல்லாம் பேசினார்கள். தமிழகத்தில் ஊடுறுவியிருக்கும் நாஜித்தனமான பிராமணத் துவேஷம் பற்றி எழுதியெழுதி சலித்து விட்டது. 
ஜெயமோகன் ஒரு முறை சுராவிடம் தான் மலையாளி என்று வசைப் பாடப்படுவதாகக் கூறிய போது "விடுங்கள் நான் எழுதி இருந்தால் 'பாப்பாரப் பயலே' என்று சொல்வார்கள்" என்றாராம் சுரா. பி.ஏ.கிருஷ்ணன் இன்று பெரியாரை விமர்சிக்கும் போதேல்லாம் அவரை நோக்கி 'பாப்பான்' என்ற வசை வந்து விழும். தான் நாத்திகர் என்று சொல்லும் ஞானியை திட்ட வேண்டுமென்றாலும் அவர் ஜாதி தான் கையில் கிடைக்கும். 
பிராமணப் பெண்கள் கிண்டல் செய்யப்படுவது கல்லூரிகள் முதல் வீதிகள் வரை நடக்கும் ஒன்று தான். சரவணக் கார்த்திகேயன் கேட்கிறார் "எந்தப் பிராமணர் வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றியிருக்கிறார்கள்" என்று. தமிழ் நாடு எனும் மூடர் கூடத்தில் தான் சமூகப் போராளியாவதற்கு எளிய வழி "தெருக் கூட்டும் பாப்பாத்தியைப் பார்த்தது உண்டா" என்று கேட்பது. தாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இட ஒதுக்கீடுக்காக அலைந்து, மரத்தை வெட்டிய எந்த ஜாதியினரின் வாயிலும் மலம் ஊற்றபடவில்லை என்பதோடு தலித்துகள் வாயில் மலம் ஊற்றிய யாரும் பிராமணரில்லை என்பது தான் நிஜம். இந்த மொண்ணைத்தனங்கள் எல்லாம் தான் தமிழ் நாட்டில் பிராமணர்கள் நாஜித்தனத்தோடு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கான சான்று. 
சு.வெங்கடேசனின் நாவலை களவை நியாயப்படுத்துகிறது என்று வேளாளச் சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர் 'வேளாள மரபில் வந்த எனக்கு அது ஒரு நெருடல். ஏனெனில் விதை நெல்கள் களவுப் போவதால் உண்டாகும் வலி உணர்ந்தவன். ஆனால் அந்நாவல் முக்கியமானது' என்று மேடையில் சொல்ல முடியாமல் தனிப் பேச்சில் தான் சொல்ல முடிகிறாது. அவராவது அப்படிச் சொல்ல முடியும். எந்தப் பிராமண எழுத்தாளராவது பிராமணர்களின் சித்தரிப்பு பற்றி அப்படிச் சொல்லி விட முடியுமா? அதுவும் மேடையில்? வெங்கடேசனும், குணசேகரனும் அவரவர் சமூகம் பற்றி எழுதுவது சரி ஆனால் அமிக்கு அந்தச் சுதந்திரம் கிடையாது. இதைத் தான் நாஜித்தனம் என்கிறேன். 
அப்புறம் இந்தக் 'கல்வி மறுப்பு' வாதம். பிராமணர்கள் கல்வியை மறுத்தார்கள் என்பது தான் ஆகப் பெரிய நாஜி பிரச்சாரம். பிராமணர்கள் மட்டுமா கல்வி மறுப்பாளர்கள்? எந்தளவு கல்வி உண்மையில் மறுக்கப் பட்டது? வரலாறைப் புரட்டினால் உண்மைகள் தெரியும். ஒரு சமூகத்தை மட்டுமே சமூகத்தில் நிலவிய எல்லாக் குறைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகக் குற்றம் சாட்டி, இன்று அதையே வரலாறாக நிறுவி விட்டது, அப்பட்டமான நாஜியம். 
அசோகமித்திரனின் மறைவுக்குத் திராவிட இயக்கத்தினர் யாரும் இரங்கல் தெரிவித்ததாகவோ நேரில் சென்று பார்த்ததாகவோ தெரியவில்லை. இதை உதாசீனம் என்று நான் நினைக்கவில்லை. அந்தத் தற்குறிகளின் இரங்கல்களால் மாசு பாடாமல் அவர் தகனம் முடிந்ததே மேன்மை. இந்நேரத்தில் ஜெயகாந்தனுக்குக் கருணாநிதி எழுதிய அருவறுப்பான இரங்கலை நினைவுக் கூறவும். நல்ல வேளை அப்படி எதுவும் அசோகமித்திரனுக்கு நடக்கவில்லை.
அசோகமித்திரனின் படைப்புலகமும் என் உலகமும் வெவ்வேறு ஆகவே தான் நான் வேறு எந்த விமர்சந்த்தின் உள்ளூம் செல்லவில்லை. நான் படித்த "ஒற்றன்", 'இன்று' ஆகியவை அவரின் முக்கியமான ஆக்கங்கள் அல்ல. அவரின் முக்கியமான படைப்புகளை முழுதுமாகப் படித்து அதன் மரபிலான மற்ற உலக இலக்கியத்தை கற்றுத் தேர்ந்தவர்கள் தான் முழுமையான விமர்சனம் செய்ய முடியும். நான், அவர் புனைவுலகைப் பொறுத்தவரை, சராசரி வாசகனே.
தமிழ் நாட்டில் பிராமணர்கள் ஒடுக்கப் படுகிறார்கள் என்று பத்ரி சேஷாரத்திரியின் கட்டுரைக்கு வந்த எதிர் வினைகளை முன் வைத்து நான் எழுதியது (ஆங்கிலத்தில்) http://contrarianworld.blogspot.com/2014/12/badri-seshadris-brahminical-angst-meets.html

3 comments:

Unknown said...

Nairs, Bunts (Mangalore),Reddys,Naidus(FC Naidus of AP) they were also traditionally land-owning castes, but how come they could access education(modern British education) in the past and they are FCs in present -day context but land-owning castes in TN didn't get access to education? the fact is the Tamil land-owning castes were "privileged" enough to not get educated and live off their inherited wealth in British India. The Dravidian Nazis twisted this into as if Brhamins didn't allow land-downing castes to get education. A filthy rich Gounder gets "reservation" isn't that a slap on the concept of social justice. A Kamma Naidu who has no quota in Andhra, gets quota in TN. And the Dravidian Nazis call this as social Justice. the fact is EVR had swn the seeds of self-imposed "inferiority" complex, deep-seated insecurty among Tamils. This makes them a butt of jokes for Non-Tamils. Non-Tamils make fun of Tamils committing suicide for cinema stars, empty over-emotional nincompoops.

Anonymous said...

AM was just trying to draw a parallel between anti-brahminsim and anti-semitism..i think he would not have meant it literally.... Tambrahms didnt have to suffer such a fate only because TN was a part of a democrazy called india and tamils all said and done are an ancient advanced and civilized culture..If TN was a separate state , who knows the fate of tambrahms would be similar to that of kashmiri pandits, srilankan tamils or jews in Nazi germany..

Lack of recognition for AM is more to do with the anti-intellectual, philistine dravidian movement led by EVR and continued by Anna, MK MGR, Veermani etc..Tamil society doesnt respect intellectuals.. its been reduced to a vulgar cinema culture today..no respect for writers, scientists, thinkers, philosphers, classical arts etc.

Unknown said...

Both engaging and interesting. And with a leavening of good humour. As you point out AM had his limitations, But you have also indicated that did not diminish the writer. Quite a fair assessment.