Wednesday, October 4, 2017

பா.ரஞ்சித் பேசியது சரியா? நான் கண்ட பிராமணர்கள். கலையுலகில் ஜெயகாந்தன். அதிகாரப் படி நிலைகளும் எதேச்சாதிகாரமும்.

தமிழ் நாட்டில் பேச்சிலும் எழுத்திலும் அறிவு ஜீவியாய் மிளிர்வதற்கு இரண்டு விஷயங்களைச் செய்தால் போதும். ‘பெரியார்’ என்று அவ்வப்போது மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும். பெரியாரை படிக்காமலோ, படித்ததும் புரிந்துக் கொள்ளமலோ, புரிந்தாலும் புரியாதது போல் நடித்தாலோ மிகச் சிறப்பு. அதைச் செய்யத் தவறினாலும் தவறக் கூடாதது ‘இன்று சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் பார்ப்பணீயமும் மனு தர்மமும்’ என்று நரம்பு புடைக்கக் கூவுவது. அறிவு ஜீவியாவதோடு கொஞ்சம் வைரலாகவும் வேண்டும் என்றால் அம்பேத்கரியம், தலித்தியம் என்று சில ஈயங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேற் சொன்ன எதிலும் வரலாறோ, உண்மைகளோ, நுட்பங்களோ கொஞ்சமும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நீங்கள் பேரறிஞர். 

Pa. Ranjith (Image Courtesy Pa-Ranjith-380.jpg)
திருச்சி BHEL (பெல்) நிறுவனத்திற்கு நான் அடிக்கடி வேலைச் சம்பந்தமாகச் சென்றதுண்டு 1995-98-இல். அப்போது நான் பார்த்த ஒரு காட்சி. ஓர் உயர் அதிகாரி (Sr. DGM), பிராமணர், தன் அறையில் இருந்து வெளியே வந்து நடக்கும் போது இரு பக்கத்திலும் இருக்கும் அலுவலர்கள் உட்கார்ந்திருப்பதற்கும் நிற்பதற்குமான இடை நிலையில் ஒரு கோமாளித்தனமான போஸை பாவித்து ‘குட் மார்னிங்’ என்பார்கள். உயரதிகாரியோ ஒரு மனுஷ ஜீவன் தன்னருகே வணக்கம் தெரிவிப்பதைக் கூடக் கண்டு கொள்ளாமல் ஏதோ ஏகாந்தத்தை அனுஷ்டித்தப்படி வான் நோக்கியப் பார்வையோடு கடந்து செல்வார். ‘ஆஹா பார்ப்பணீயம் பாரீர்’ என்று குதூகலிப்பதற்கு முன் மேலும் படியுங்கள். இந்த வணக்கம் போடுவதில் இருவர் பிராமணரல்லாதோர் அதில் ஒருவர் இன்னொருவரின் கீழ் பணி புரிபவர். அந்த இருவரில் மேலதிகாரியானவர் இன்னொருவரை மனிதராகக் கூட மதித்து நான் பார்த்ததில்லை. 

நான் வேலைப் பார்த்த சென்னை கம்பெனியின் மேலாளர் (MD) பிராமணர். வேலையில் சேர்ந்த முதல் நாள் அவர் என்னைக் கடந்து சென்ற போது எழுந்து நின்று “Good Morning Sir” என்றேன். என் தோளில் சிநேகமாய்க் கை வைத்து நான் எப்போதும் அப்படிச் செய்யத் தேவையில்லை என்றார். அங்கு வேலைப் பார்க்கும் கடை நிலை ஊழியரிடம், பிராமணரல்ல, அந்த மேலாளர், கம்பெனி பார்ட்டிகளின் போது, மிகத் தோழமையோடு சகஜமாக உரையாடுவார். அவருடைய தனிப்பட்ட பண்பும் அந்தக் கம்பெனி ஒரு ஆங்கிலேய கம்பெனியின் அங்கம் என்பதாலும் அந்த வழக்கங்கள் கைக்கொள்ளப்பட்டன. பிரிட்டன் என்றில்லை மேலை நாட்டுக் கம்பெனிகளில் மேலாளரும் அவர் கீழ் வேலைச் செய்பவர்களும் சக மனிதர்களாகப் பழகுவதைக் காணலாம். அதற்காக அதிகாரப் படி நிலைகளே இல்லை என்று சொல்லவில்லை ஆனால் கூழைக் கும்பிடு போட்டு ‘எஜமான்’ என்று மறுகுவதும் இல்லை. நான் அமெரிக்கா வந்த பிறகும் அந்த மேலாளருக்குத் தொடர்பிலிருந்தேன். அவரை ‘Sir’என்றும் அவர் மனைவியை ‘madam’ என்றும் ஈமெயிலில் குறிப்பிட்டேன். உடனே பதில் வந்தது ‘நீ இன்றிருக்கும் இடத்தில் இத்தகைய பழக்கங்கள் இல்லை நீ என்னையும் என் மனைவியையும் பெயரிட்டே அழைக்கலாம்’ என்றார். என்னை விட 15-20 வயது மூத்தவர். என்னை விடப் படித்தவர், ஒரு கம்பெனியை நிர்வகித்தவர். 20 ஆண்டுகள் கழித்தும் நாங்கள் நண்பர்களே. 

நான் படித்த கல்லூரி பிராமணர்களால் நடத்தப்பட்ட ஷன்முகா பொறியியல் கல்லூரி (இன்று சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக் கழகம்). காருண்யாவில் முதலில் தெரியாமல் சேர்ந்துவிட்டு வீட்டுச் சாப்பாட்டிற்காகவும் அங்கிருந்த சூழலும் பிடிக்காமல் தஞ்சைக் கல்லூரியில் சேர வந்தேன். தாளாளர் அறைக்குள் நானும் அப்பாவும் நுழைந்தோம். இருவரும் ஒவ்வொரு சேரில் அமர்ந்தோம். தாளாளர், வயதானவர், கொதித்து விட்டார். “குருவுக்கு முன் மாணவன் உட்காரலாமா” என்று சினந்தார். பின்னர்த் தெரியவந்தது அவர் மிகக் கண்டிப்பான, காந்தியவாதியும் எளிமையானவரும் மிக நேர்மையானவரும் என்று. அக்கல்லூரியில் ஓர் ஆங்கிலப் பேச்சுக் கலை கிளப் ஒன்றை ஆங்கிலப் பேராசிரியர் அந்த வருடம் தான் ஆரம்பித்திருந்தார். அதன் முதல் கூட்டத்தில் என் பேச்சு மிகக் கவனம் ஈர்த்தது. அது முதல் அந்தக் கிளப்பின் அடையாளம் ஆனேன். கல்லூரிக்கு மாநில அளவில் பல பரிசுகளை வென்றேன். கடைசி வருடம், கடைசிக் கூட்டத்தில் பேசி விட்டு சபையோரை நோக்கி அது என் கடைசி உரையென்றும் ஒரு நிமிடம் எல்லோரும் ஆசைத் தீரப் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லி விடைப்பெற்று இறங்க எத்தனித்த போது அங்க்கிருந்த தாளாளர் என்னை மேடையிலேயே நிற்கச் சொன்னார். அடுத்ததாகக் கூடியிருந்த சபையோரை, பல பேராசிரியகளும் இருந்தனர், எழுந்து நின்று எனக்குக் கரவொலி எழுப்பச் செய்தார். நான்கு வருடம் முன் தனக்கு முன் ஒரு மாணவன் உட்காரக் கூடாது என்று சொன்னவர் இன்று கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் இருக்கும் அரங்கில் எனக்கு “standing ovation” கொடுத்தார். அவருக்கு என் குலம் கோத்திரம் தெரியாது ஆனால் நான் பிராமணனில்லை என்பது நிச்சயமாகத் தெரியும். இன்று அந்தக் கல்லூரி இந்துத்துவக் கூடாரமாகியிருப்பது வருத்தம். அந்த மேலாளர் இறந்துப் பல வருடங்கள் ஆகின்றது. 

+2-வில் நான் டியூஷன் படித்த ஆசிரியர்களில் இயற்பியல்-வேதியியல் கற்றுக் கொடுத்தவர்கள் பிராமணத் தம்பதியர், கணிதம் கற்பித்தவர் பிராமணரல்லாதவர் (கள்ளர்?). மூவரிடமும் நிறைய மாணவர்கள் பயின்றனர். அதில் பலர் பிராமணரல்லாதவர்கள். மூவரும் கடின உழைப்பாளிகள் தங்களிடம் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் 95%, 100% வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள். என்னையும், அப்பாவையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் கூட. நான் அப்போதும் மிக வெளிப்படையாகப் பேசுபவனே. இயற்பியல் ஆசிரியை முதலில் எனக்குத் தலைக் கணம் உள்ளதென்றார் பின்னர் “அப்படி நினைத்தது தவறு. ஒன்று நீ வெளிப்படையானவன். இரண்டு உன் போல் பாடத்தைக் கவனமாகக் கேட்பவர்கள் குறைவு”. 

பிராமணர்களில் மோசமானவர்கள் இல்லையா? இருக்கிறார்கள். நிச்சயமாக. நான் படித்த மேல்நிலைப் பள்ளியின் தாவரவியல் ஆசிரியர் வெண்ணிற ஆடை மூர்த்தியை விட மிகக் கேவலமாகவும் அருவருப்பாகவும் பேசுவார். இன்னொரு வாத்தியார் பச்சை ரவுடி. மெல்லிய இனவாதத்தை அவ்வப்போது காட்டுபவர்களும் உண்டு. ஆனால் இதெல்லாம் இல்லாத இனங்களை எனக்குக் காட்டுங்கள்!! பிராமணரல்லாதவர்களில் மகத்தான அறிவு ஜீவிகளைப் பார்த்து இருக்கிறேன், பிராமணர்களிடையே சராசரிகளும், மூடர்களையும் பார்த்து இருக்கிறேன். 

டைரக்டர் முன்பு அசிஸ்டண்ட் டைரக்டர் உட்கார்ந்துவிட்டால் துணுக்குறுவது பார்ப்பணீயம், அப்படிச் செய்பவர்கள் பார்ப்பணர்களாக இல்லாத போதும், என்பது பச்சையான இனவாதம். அப்படிப்பட்ட மனோநிலையைச் சித்தரிக்கப் பிரபுத்துவ மனோ நிலை (feudal mindset), எதேச்சாதிகாரம், மேட்டிமைத் தனம், அகங்காரம் என்று எத்தனையோ சொற்கள் இருக்க அதைக் குறிப்பாக ‘பார்ப்பணீயம்’ என்று அழைத்துவிட்டு அது ஒரு இனத்தைக் குறிப்பதல்ல மாறாக ஒரு ஆதிக்க மனோபாவத்தை மரபாகக் கொண்டிருந்தவர்களால் அப்படிப்பட்ட மனோபாவத்தைக் குறிப்பது மட்டுமே என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இன்று வன்னியர்கள் முதல் பட்டியல் இனத்தவர் வரை எல்லோரும் ஏதோ ஒரு ஆண்டப் பரம்பரை கதையைச் சொல்கிறார்கள் அதில் சிலர் தங்கள் ஜாதிப் பெயரோடு ‘ஷத்திரிய’ என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள். எந்த ஷத்திரியன் அடக்க ஒடுக்கமாக இருந்தான்? அவர்கள் அடக்கமாக இல்லாத அதிகார மரபினர் என்பதற்காகவே அப்படிப்பட்ட ‘ஆண்ட பரம்பரை’ கதைகளும் உருவாக்கப் படுகின்றன என்பதை மறுக்க முடியாது. 

ரஞ்சித்துக்குக் கொஞ்சமாவது இலக்கியம் அல்லது சமூகவியலில் உள்ள ஆராய்ச்சிகளின் பரிச்சயமாவது இருந்திருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டார். 

ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘மிருகப்பண்ணை’ கதை அதிகாரம் எப்படிச் சுபாவங்களை மாற்றி அதிகாரத்தை அடந்தவர்கள், முன்பு படி நிலையில் கீழிருந்தவர்கள், எதேச்சாதிகார மனோ நிலைக்கு ஆட்படுகிறார்கள் என்பதை மிகச் சுவாரசியமாகப் படிமங்களின் வாயிலாகச் சொன்னதற்காக இன்றும் வாசிக்கப்படும் புதினம். 

ஸ்டான்பர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சி ஒன்று மிகப் பிரசித்தமானது. சிறையில் கைதிகாளகவும் ஜெயலர்களாகவும் பல்கலைக் கழக மாணவர்கள் நடிக்க வைக்கப்பட்டனர். ஆறே நாளில் கைவிடப்பட்ட ஆராய்ச்சியின் போது ஆரம்பத்தில் நடிக்கிறோம் என்ற நினஒவோடு செயல்பட்டவர்கள் மிக விரைவில் கொடுங்கோல் ஜெயலர்களாகவும், அதிகாரத்துக்குக் கீழ் படிகிற கைதிகளாகவும், ஜெயலர்களால் ஏவப்பட்ட சக கைதியை வதைப்பவர்களாகவும் மாணவர்கள் மாறினர். 

அமெரிக்கக் கறுப்பு இனத்தவரிடையே ஆசியர்களை வெறுக்கும் போக்கு உண்டு. வாஷிங்டன் டி.சி. நகரின் கறுப்பு மேயர் ஆசியர்கள் நடத்தும் கடைகளைக் குறித்து மிகக் கேவலமாகப் பேசினார். பால்டிமோரில் நடந்த கலவரத்தின் போது ஆசியர்களின் கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. யூத வெறுப்பும் அமெரிக்கக் கறுப்பினத்தவரிடையே உண்டு. உலகத்தின் எல்லா மூலைகளிலும் யாரோ யாரையோ அவர்களின் நிறம், இனம், மொழி, மதம் என்று ஏதோ ஒரு காரணத்துக்காக வெறுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் எல்.டி.டீயினர் முஸ்லிம்களைத் துரத்திய போது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது மனித இயல்பு. தலித்துகளிடையே கூடத் தீண்டாமை உண்டே!!! 

உலக வரலாற்றின் மிகப் பெரிய அழித்தொழிப்பில் இருந்து மீண்டு தங்களுக்கென்று ஒரு நாட்டையும் உருவாக்கிக் கொண்ட இஸ்ரேலின் ராணுவப் பயிற்சி மையத்தில் ஒரு பேராசிரியர் “உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் அரேபியர்களைக் கொலைக்களனுக்கு அனுப்புவீர்களா?” என்று கேட்டதற்கு மானவர்களில் பலர் “ஆமாம்” என்று கைத் தூக்கினார்களாம். ஆசிரியர் அதிர்ந்து விட்டார். (இஸ்ரேலின் இன்றைய பிரச்சினைகள், பாலஸ்தீனம் எல்லாம் மிகச் சிக்கலானவை. இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுவதன் நோக்கம் அதிகாரம் மானுட இயல்பை மாற்றுவதைச் சுட்டிக் காட்டத்தான்). 

அன்றாட வாழ்வில் அதிகாரப் படி நிலைகளில் உயர்ந்தாரோடு சராசரி மனிதர்கள் பாவிக்கும் உறவு முறையை ஒரு சமன்பாடாய் உருவகித்து அமெரிக்கக் கலாசாரத்தில் இரு வேறு நிலைகளில் இருப்பவரிடையே இருக்கும் தூரச் சமன்பாடு (power distance equation) மற்ற கலாசாரங்களை விடக் குறுகலான தூரம் உடையது என்கிறார் மால்கம் கிளாட்வெல். இதை என் 19 வருட அமெரிக்க வாழ்வில் கண் கூடாய்க் கண்டிருக்கிறேன். மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மேலதிகாரியை ‘ஹெல்லோ’ என்பார் அலுவலக உணவகச் சிப்பந்தி. செனட்டர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தத்தம் தொகுதி மக்களோடு மிகச் சகஜமாகப் பழகுவார்கள். மக்கள் பிரதிநிதிகள் தொகுதிவாசிகளைச் சந்திக்கும் கூட்டங்களில் கேள்விகள் சரமாரியாக வந்து விழும். கீழிருக்கும் ஒரு காணொளியைப் பாருங்கள் (சுட்டி https://www.youtube.com/watch?v=_TDkgIEn5Ac )



நவீனப் பல்கலைக்கழகங்களின் பிறப்பிடம் ஜெர்மனி ஆனால் இன்று உலகத்தின் பிரசித்திப் பெற்ற பல்கலைக் கழகங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில். இது குறித்த எழுதப்பட்ட புத்தகத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு வந்த ஜெர்மானியர்கள் அங்குப் பேராசிரியராக இருந்த நோபல் பரிசு வாங்கிய மார்கனை (Thomas Hunt Morgan) அவர் மாணவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்தார்களாம். ஹார்வர்டை மாணவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற கட்டுரைல் லாரி ஸம்மர்ஸ் (Larry Summers) தன் பல்கலைக் கழகத்தில் நோபல் பரிசுப் பெற்ற ஆசிரியரை மாணவன் கேள்விக் கேட்கும் சுதந்திரம் உண்டு என்றார். தாமஸ் பிக்கெட்டியின் பல மில்லியன் விற்பனையான பொருளாதாரம் குறித்த புத்தகத்தைக் கேள்விக் கேட்டு பிரசித்தியான கட்டுரையை எழுதியவர் முனைவர் படிப்பை முடிக்காதவர். 

தமிழ் சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினை அடிப்படையான மனிதப் பண்புகளைக் குழித் தோண்டிப் புதைத்த தனி மனித துதியும் அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்ட ஜனநாயகப் பண்புகளும். இதன் முழு முதல் காரணக் கர்த்தா திராவிட இயக்கம். அலங்காரப் பட்டங்கள், போதாக் குறைக்கு மேடைகளில் கிரீடங்களைச் சூட்டிக் கொள்வது, ‘போர்ப்படை தளபதி’ என்று எதற்கெடுத்தாலும் நகைக்கத் தகுந்த சுயத் தம்பட்டங்கள். 

எழுத்தாளர் சமஸின் “எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா” என்ற கட்டுரை இணையத்தில் இந்தக் கட்டுரைக்காகத் தரவுகளைத் தேடியபோது கிடைத்தது. மிகச் சுவாரசியமானதும், நேர்மையானதுமான கட்டுரை. அக்கட்டுரையில் எனக்கு ஏற்க முடியாத பகுதிகள் உள்ளன ஆனால் அதைத் தாண்டி அவர் முன் வைத்த முக்கியமான கேள்விகள் உண்டு. 

சமஸைப் போல் நானும் தஞ்சையில் வளர்ந்த காலத்தில் கீழ் வெண்மணி பற்றிக் கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் திராவிட இயக்கங்கள் தயாரித்த எந்தப் பாட நூலிலும் அது பற்றிப் படித்ததில்லை. கீழ் வெண்மணி படுகொலைக்குப் பிறகு அங்குப் பெரும் பணியாற்றிய காந்தியவாதியான (பெரியாரிஸ்ட் அல்ல) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைச் சமஸ் சந்திதிக்கிறார்.

சமஸ் “‘பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; அது என்னையும் உள்ளடக்கியிருக்கிறது; நானும் எனக்குக் கீழ் ஒரு பெருங்கூட்டத்தை மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறேன்’ என்பதை உணர்ந்த நாள் அது” என்கிறார். 

கிருஷ்ணம்மாள் அவரிடம் சொல்கிறார்: 

“தமிழ்நாட்டோட விவசாயத் தொழிலாளர்கள்ல அஞ்சுல மூணு பேர் தலித்துகள். நிலம் வெச்சிருக்குற தலித்துகளை எடுத்துக்கிட்டா, தொண்ணூறு சதவிகிதம் பேர் ஒரு ஹெக்டேருக்கும் கீழ நெலம் வைச்சிருக்குறவங்க; இவ்வளவு ஏன், தலித்துகள்ல நால்ல ஒருத்தருக்குக் கையெழுத்துப் போட தெரிஞ்சா அதிகம். ஆனா, இன்னமும் ஒரு நாளைக்குச் சராசரியா மூணு தலித் பெண்கள் பலாத்காரத்தை எதிர்கொள்றாங்க, ரெண்டு பேர் தாக்கப்படுறாங்க; எங்க? சமூகநீதியில நாட்டுலேயே முன்னேறுன மாநிலமான தமிழ்நாட்டுல. அப்படின்னா, நம்ம நாடு முழுக்க உள்ள நிலை எப்படி இருக்கும்? சுதந்திரம் அடைஞ்சு 50 வருஷங்களுக்கு அப்புறமும் இதுதான் நிலைமைன்னா, முன்னாடி எப்படி இருந்திருக்கும்? சாதி ஒழிப்பைப் பத்திப் பேசுறவங்க எல்லாரும் இதெல்லாம் எங்கேயோ யாராலேயோ நடத்தப்படுறதாவும், தங்களுக்கு இதுல எந்தச் சம்பந்தமும் இல்லைன்னும் நெனைக்கிறாங்க. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் இதுல ஏதோ ஒரு வகையில தொடர்பு இருக்குங்கிறதுதான் உண்மை.” 

கிருஷ்ணம்மாளின் பேச்சைக் கேட்ட சமஸ், “ ‘பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; அது என்னையும் உள்ளடக்கியிருக்கிறது; நானும் எனக்குக் கீழ் ஒரு பெருங்கூட்டத்தை மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறேன்’ என்பதை உணர்ந்த நாள் அது” என்கிறார். 

தனக்குள் இருக்கும் ‘பார்ப்பனரை’ அடையாளம் கண்டு கொண்ட சமஸ் கைர்லாஞ்சியில் தலித் குடும்பம் மிகக் கொடூரமாகக் கொலைச் செய்யப்பட்டது தன்னை வாட்டியது என்றும் அதன் பின்னனியில் நண்பர்களோடு “அவரவர் சாதிகளின் அயோக்கியத்தனங்களை மனம் திறந்து பேச முயன்றால் என்ன?” என முயன்றிருக்கிறார். “பார்ப்பனர் அல்லாதவர் என்கிற கூரையின் கீழ் வசதியாக அதுவரை ஒன்றுபட்டிருந்த எல்லோரும் மிக விரைவில், அவரவர் சாதியின் கீழ் பதுங்க இடம் தேடினார்கள். விவாதம் சண்டை ஆனது.” என்கிறார். “அவர்களைப் பொறுத்தவரை பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே சாதி எதிர்ப்பு” 

அக்கட்டுரையில் இருந்து மேலும் சில பகுதிகள் கீழே: 

“இந்து மதத்தின் 10-ல் ஒரு பங்கு மக்கள்தொகையைக்கூடத் தொட முடியாத ஒரு சாதியின் குற்றங்களை மட்டுமே பேசிக்கொண்டு, ஏனைய 9 பங்கு சாதிக்காரர்கள் வசதியாக, நம்முடைய சுயசாதி விமர்சனங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதும், நம்முடைய சாதிகளை அவற்றின் அநீதிகளிலிருந்தும் கொடுஞ்செயல்களிலிரு ந்தும் மறைத்துவிடுவதும் ஒருபோதும் சாதி ஒழிப்புக்கு உதவாது என்று நினைக்கிறேன். மேலும், இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றும் நினைக்கிறேன்”. 

“இன்றைக்கு மிக அரிதாக, விரல் விட்டு எண்ணிவிடத் தக்க அளவில் பொதுத் தளத்தில் வலுவாக ஒலிக்கும் சுயசாதி விமர்சனக் குரல்கள் பார்ப்பனர்களுடையவை என்பதை  ஒப்புக்கொள்வதில் நமக்குத் தயக்கம் இருக்க முடியாது”. 

“பார்ப்பனர் அல்லாத ஏனைய சாதிகளையோ எதிர்த்துப் பொதுத் தளத்தில் இன்றைக்குப் பேசவோ, எழுதவோ முடியுமா? எங்கேனும் அதற்கான இடம் இருக்கிறதா? அப்படிப் பேசினாலோ, எழுதினாலோ குறைந்தபட்சம் அது சகித்துக்கொள்ளவாவதுபடுமா?” 

வேறு எந்தச் சாதியின் பெயரையும் சொல்லத் திராணியில்லாததால் தான் ரஞ்சித் சவுகரியமாக எல்லாவற்றையும் ‘பார்ப்பணீயம்’ என்கிறார். 

ஒரு பேட்டியில் ‘கபாலி’ என்று ரஜினியின் பாத்திரத்திற்குப் பெயர் வைத்தது ஒரு ஸ்டீரியோடைப்பை உடைப்பதற்காக என்கிறார் சமூக விஞ்ஞானி ரஞ்சித். இவரின் ரஜினி என்ன கதையில் பெரிய அறிவு ஜீவியாகவோ, மருத்துவராகவோ, விஞ்ஞானியாகவோ, சமூகச் சேவகராகவோ, ஆசிரியராகவோவா வந்தார்? கோட்டு, சூட்டைப் போட்டாலும் ரவுடி ரவுடி தானே? ரவுடி, அதுவும் ரவுடிகள் ரவுடிகளுக்காகவே நடத்தப்படும் பார்ட்டியில் கலந்து கொண்டு, “காந்திப் போட்ட டிரஸ்ஸூம், அம்பேத்கர் போட்ட டிரஸ்ஸுக்கும் அரசியல் இருக்கு” அப்படீன்னு டயலாக் பேசினா ஸ்டீரியோடைப் உடையுமா? இது என்ன அறிவிலித்தனம். தமிழ் சினிமாவில் எத்தனையோ ஸ்டீரியோடைப். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிராமணர்கள் பற்றிச் சொல்லப்படாத எதிர்மறை ஸ்டீரியோடப்பா? 

ரஞ்சித்தின் பேச்சு உண்மையில் சாரமற்ற பேச்சு. எனக்கு உண்மையில் கொண்டாடப்படுவதற்கு அதில் என்ன இருக்கிறது என்பது விளங்கவில்லை. வெறும் உணர்ச்சிக் குவியலான பேச்சு. வீடுகளில் சகோதரர்கள் சகோதரிகளை ‘டீ’ போட்டுப் பேசுவது பார்ப்பனியம் கற்றுக் கொடுத்தது என்கிறார். எந்தச் சுவற்றில் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. சகோதரிகள் சகோதரர்களை ‘டா’ போட்டு பேசுவதைப் பெரியாரா கற்றுக் கொடுத்தார்? இதில் வேடிக்கை இந்த உரையைத் திராவிட இயக்க உடன் பிறப்புகள் மிக மகிழ்ச்சியாகப் பகிர்ந்தது தான். ‘பாப்பானை திட்டுறான்யா, உடனே ஷேர் பண்ணு’ என்று பகிர்ந்தார்கள். பாவம். அதில் ரஞ்சித் திட்டியது 50-ஆண்டுக் காலத் திராவிட இயக்க ஆட்சியினை. ‘சமூக நீதியற்ற தமிழ் நாடு’ என்கிறார். எங்கும் சாதி மறையவில்லை என்கிறார். இடை நிலைச் சாதியினர் தங்களை விலக்குகிறார்கள் என்றார். என்ன இதையெல்லாம் பட்டியலிட ஆரம்பித்தவர் அப்புறம் யூ-டர்ன் அடித்து எல்லாத்தையும் போடு பாப்பான் தலையில் என்று போட்டுவிட்டுச் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டார். போகிற போக்கில் தமிழ் தேசியம் என்ற சித்தாந்தத்தை வெற்றுக் கோஷம் என்று நிறுவியதும் உடன் பிறப்புகள் மனம் குளிர வைத்த ஒன்று. இந்த ரஞ்சித்தே பேச்சுகளில் அனிதாவை ‘அவள்’ என்று தான் குறிப்பிடுகிறார். 

மேடை மேடையாக ரஞ்சித் அநீதிகள் பற்றிக் கொதிக்கிறார் ஆனால் ஓரிடத்தில் கூட பிரச்சினைகள் குறித்தோ அதற்கான தீர்வுகள் குறித்தோ முறையான எந்த அலசலும் இல்லை. நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்களுக்கெதிரானது என்று காது கிழிய கத்தினார்கள். இந்த ஆண்டு ஐந்தே அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க அட்மிஷன் கிடைத்தது. இதற்கு முன் “சராசரியாக 30 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க” அனுமதிக் கிடைத்தது என்கிறது விகடன் கட்டுரை ஒன்று. கிட்டத்தட்ட 3000 இடங்களில் 30 தான். 1% தான். இது தான் தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளின் லட்சணம். அனிதாவே தனியார் பள்ளியில் தான் +1, +2 படித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு அமர்ந்த 95% விண்ணப்பதாரர்கள் பெயில் தமிழ் நாட்டில். (‘நீட் விவகாரம்: பேசப்படாத கல்வியின் தரம், பேசப்பட்ட நாஜித்தனம்’ என்று இன்னொரு கட்டுரை எழுத திட்டம் அப்போது இது குறித்து விரிவாக எழுதுகிறேன். இன்ஷா அல்லா) 

ஏதாவது பள்ளிக்குச் சென்று மாணவர்களின் தேவைகள் என்ன என்று எட்டியாவது பார்த்தாரா ரஞ்சித்? எத்தனை பள்ளிகளில் நூலகங்கள் இருக்கின்றன? எத்தனை மாணவர்களால் தங்கள் பாடப்புத்தகம் அல்லாத எந்தப் புத்தகத்தையாவது படிக்க முடிகிறது? கிராமத்து அரசுப் பள்ளிகளில் இருந்து கல்லூரிக்கு வருபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எத்தனை? 

இந்தியை திணிக்கிறது என்று சொல்லி நவோதயாவை எதிர்த்தார் என்று திருமாவளவனின் வலைப் பக்கம் சொன்னது. இது துரோகம். தலித் மாணவர்கள் இந்தியையும், ஆங்கிலத்தையும் நன்றாகப் பயின்றால் அதனால் வரும் லாபங்கள் நிறைய. கருணாநிதியின் குடும்பத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் ரஞ்சித். அவர் பிள்ளைகள், பேரன்கள் எல்லாம் ஆங்கிலக் கான்வெண்டுகளில் தான் படித்தார்கள். கருணாநிதி அளவுக்குக் காந்தி நல்ல தகப்பன் இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமிழ் நாட்டு மாணவனுக்குச் சொந்தம். “அறிவை விரிவுச் செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று சொல்லிக் கொடுங்கள். கருணாநிதியைப் பாருங்கள் ஒரு மகனை மாநிலத்தில் துணை முதல்வராக்கினார், இன்னொரு மகனை டில்லியில் மந்திரியாக்கினார். கற்றுக் கொள்ளுங்கள் ஐயா. மாணவர்களை உலகுக்குத் தயார் செய்யும் கல்வியைத் தருமாறு கல்வியாளர்களோடு பேசுங்கள். சும்மா மிஷ்கின், அமீர் இவர்களோடு கூட்டம் போட்டால் ஒன்றுக்கும் உதவாது. 

இன்று ரஞ்சித் இருக்கும் உயரத்தில் இருந்து அவர் செய்யக் கூடியது அநேகம். ஆனால் இது போன்ற உணர்ச்சி மயமான பேச்சுகள் பேஸ்புக் ஷேர்களைத் தாண்டி எதையும் செய்யாது. அவனவன் இதைப் பகிர்ந்துவிட்டு “ஆஹா பெரியார்”, ‘பாரீர் ரஞ்சித்’ என்றெல்லாம் சொல்லிவிட்டுத் தத்தம் பிள்ளைகளைக் கான்வெண்டுகளுக்கும், நகரில் விலையுயர்ந்த டியூஷனுக்கும் அனுப்பப் போய் விடுவார்கள். 

கடந்த கருணாநிதி ஆட்சியின் போது சென்னையில் இருக்கும் ஆதி திராவிடர்கள் நல விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள் அவர்கள் விடுதியின் அவல நிலையை அரசுக்குக் கவனப்படுத்த. ஒவ்வொரு ஊரிலும் அந்த விடுதிகள் மிருகங்கள் கூட வாழ லாயக்கில்லாதவை என்பது தானே நிஜம். பார்ப்பனீயம் பேசுவது எளிது ரஞ்சித்துக்கு. இதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கும் ஆனால் மேடையில் பாஜக, பார்ப்பனீயம், 20 வருடங்களுக்குப் பாஜக ஆட்சி வந்து விடுமோ, என்றெல்லாம் பேசுவது கரகோஷமும் திராவிட இயக்க உடன் பிறப்புகளிடம் ‘சமூகப் போராளி’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தரும். அமெரிக்காவில் கறுப்பு விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், நடிகர்கள் அநேகம் பேர் குழந்தைகள் நலன், கல்வி ஆகியவற்றுக்கு மிகப் பெரும் உதவிகள் செய்கிறார்கள். ரஞ்சித் கற்றுக் கொள்ளலாம். அவர்களெல்லாம் நிச்சயமாக இனவாதத்துக்கு எதிராகவும் தேவைப் படும் போது பேசுகிறார்கள், தத்தம் வழியில் போராடுவார்கள் ஆனால் அதைத் தாண்டி ஆக்கப் பூர்வமான உதவிகளைச் செய்கிறார்கள். 

துணை இயக்குனர் உட்கார்ந்தால் வரும் எரிச்சல் பற்றி ரஞ்சித் குறிப்பிட்ட போது எனக்கு ஜெயகாந்தனின் ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ புத்தகத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. 

ஜெயகாந்தனும் ஏ.எல். நாரயணனும் ஒரு ‘முக்கியப் புள்ளி’யை சந்திக்கப் போனார்கள். சினிமா உலகுக்கே உரித்தான ‘கூஜா’ ஒருவரும் வந்ததாக ஜெயகாந்தன் சொல்கிறார். நால்வரும் அமர்ந்துப் பேசும் போது ஜெயகாந்தன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துவிட்டார். மேலும், அந்த முக்கியப் புள்ளி தான் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டு சிகரெட் பாக்கெட்டை ஏ.எல். நாராயணனிடம் நீட்ட அவரும் எடுத்துக் கொள்கிறார் ஆனால் ஜெயகாந்தன் தனக்கும் அளித்த முக்கியப் புள்ளியிடம் ‘தாங்க்ஸ்’ என்று சொல்லிவிட்டு தன் சட்டைப் பையில் இருந்து தன் சொந்த சிகரெட்டை எடுத்துப் புகைத்தாராம். கூஜாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வெளியில் வந்த பிறகு ஜெயகாந்தன் மரியாதைக் கெட்டு நடந்து கொண்டார் என்று கடிந்துக் கொண்டாராம். 

‘பேண்ட்’ போட்டால் “கால் மீது கால் போட்டு உட்கார்ந்தால் தான் கம்பீரமாயும் அழகாயும் இருக்கும்” என்பது தன் அபிப்பிராயம் என்றும் அப்படி அமர்வதே தன் வழக்கம் என்கிறார். “இந்தத் தேசத்தின் மேலான மரியாதைக்குரிய பல உன்னதமான மனிதர்களோடு கம்யூனிஸ்ட் கட்சியில் சமத்துவமாகப் பழகி வளர்ந்தவன். எங்கள் அகராஇயில் மரியாதை என்பதற்கு எழுந்து நிற்பது, சிகரெட்டை மறைத்துக் கொள்வது என்ற அர்த்தங்களே கிடையாது. ஒரு அடிமையின் மரியாதைப் பண்புகளை நான் எப்போதுமே அறியாதவன்’ என்கிறார். கவனிக்கவும் அவர் ‘அடிமையின் மரியாதைப் பண்பு’ என்றாரே தவிர ‘பார்ப்பனீயம்’ என்று பசப்பவில்லை. அது சரி, அவர் ஜெயகாந்தன் ஆயிற்றே, அவர் என்ன ரஜினிகாந்தை ‘சார்’ என்று அழைத்தவரா? 

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த வந்த இளையராஜா நிகழ்ச்சியின் நடுவே, ஆயிரம் பேருக்கு மேல் கூடியிருந்த அரங்கில், அதில் பலரும் கைப்பேசி மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார்கள், பிழையாக வாசித்த இசைக் குழு அங்கத்தினர் ஒருவரை ‘அறிவிருக்கா’ என்றார். கூட்டம் கைத்தட்டி மகிழ்ந்து, புல்லரித்தது. அடுத்த நாள் பலரும் மிகச் சிலாகித்து ‘அவர் பிழைப் பொறுக்க மாட்டார்’ என்று புல்லரித்தார்கள். அற்பர்கள். சரியாகப் பயிற்சிகள் நடத்தி மேடையேறியிருக்க வேண்டிய பொறுப்பு ராஜாவுடையது. பிழை நடந்ததும் சபையிடம் அவர் தான் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். ஒரு ஸிம்பனி நிகழ்வில் தவறு நடந்தால் நடத்துனர் தான் மன்னிப்புக் கேட்பார், நடத்துநரைத் தான் குறைச் சொல்வார்கள். ஆனால் நம் அடிமைச் சமூகத்தில் பாவப்பட்ட அந்த வாத்தியக்காரர் வசையை வாங்கிக் கொண்டார். நினைத்துப் பாருங்கள், அந்த மனிதரின் மனைவி, பிள்ளைகள் என்ன பாடுபட்டிருப்பார்கள். இது முதல் முறையல்ல ராஜா இது போன்ற எதேச்சாதிகாரங்களுக்குப் பிரசித்தம். ராஜா தலித். (விநாயக முருகனைக் கேட்டால் ‘கன்வர்ட்டட் பார்ப்பான்’ என்பார்) 


பிரச்சினைகளை நேர்மையாகப் பேசாவிடில் பிரச்சினைகள் தீராது. எதெற்கெடுத்தாலும் பிராமணர்களைத் திட்டித் தீர்த்துவிட்டல் பிரச்சினைகள் தீரவும் தீராது இன்னும் சொல்வதானால் இந்த மன நோய் பல சமயங்களில் உண்மையான காரணங்களைப் பதுக்கத்தான் உதவுகிறது.


References:

Sunday, October 1, 2017

Martin Luther King Jr. and the Shadow of Gandhi. Rhetoric of MLK Jr. and EVR, Poles Apart.

P.A. Krishnan’s article on E.V. Ramasamy, the patron saint of Tamil Nadu and a merchant of hate, has invited eager defenders who, typically, range from being silly to downright intellectually dishonest. A so-called rebuttal sweepingly, without basis, seeks to justify the inflammatory and venomous rhetoric of E.V.R by asserting that his rhetoric about Brahmins was akin to the rhetoric of Martin Luther King Jr. That’s unadulterated nonsense.



The charlatans who wrote the rebuttal to Krishna’s article justified E.V.R’s habitual tarring of an entire community and conveniently using the words ‘Brahminism’ and ‘Brahmins’ interchangeably by arguing:

“This is not a racialist tainting of a persecuted community, but questions posed to power structures. It is a discursive strategy of oppressed groups to identify the nature of oppression with those who are beneficiaries of the system of oppression. In the civil rights movement in the US, not just radicals like Malcolm X, but even pacifists like James Baldwin and Martin Luther King Jr often used “white people” in lieu of “white racism”.”

Biographer David J. Garrow quotes a speech of King during the Montgomery bus boycott:

“There are those who would try to make of this a hate campaign. This is not a war between the white and the Negro but a conflict between justice and injustice.  This is bigger than the Negro race revolting against the white”

At this point King was only familiar with the name of Gandhi. Glenn Smiley, a white Texan and a ‘devout believer in Gandhian non-violence, wrote to his friends that “King can be a Negro Gandhi”. Smiley wrote to King a quote of Gandhi, “If one man could achieve the perfect love it is enough to neutralize the hatred of millions” and concluded “who knows? Maybe in Montgomery someone may achieve this perfect love”.

King’s adoption of non-violence was gradual and a journey. Bayard Rustin, King’s trusted confidante, said King “is developing a decidedly Gandhi-like view…He is eagerly learning all that he can about non-violence”. 

Addressing a 2500 strong congregation at Brooklyn’s Concord Baptist Church King spoke of ‘passive resistance’ and said Gandhi had used it “to break loose from the political and economic domination by the British and brought the British Empire to its knees…Let’s now use this method in the United States”. To a newspaper interviewer King traced his path to Gandhi, “I have been a keen student of Gandhi for many years. However, this business of passive resistance and non-violence is the gospel of Jesus. I went to Gandhi through Jesus”. 

After recovering from an assassination attempt MLK Jr., visited India in February-March 1959. Earlier Nehru during his visit to US had tried to meet King but could not and nevertheless reached out to King to arrange a visit to India.

Martin Luther King Jr., Jawaharlal Nehru, Coretta Scott King

Writing for the magazine Ebony King gave an enthusiastic account of his trip to India.

“Virtually every door was open to us…We were looked upon as brother with the color of our skins as something of an asset”. “Thanks to the Indian papers, the Montgomery bus boycott was already well known in that country. Indian publications perhaps gave a better continuity of our 381-day bus strike than did most of our newspapers in the United States.”

“I left India more convinced than ever before that non-violent resistance is the most potent weapon available to oppressed people…The way of acquiescence leads to moral and spiritual suicide. The way of violence leads to bitterness in the survivors and brutality in the destroyers. But the way of non-violence leads to redemption and the creation of the beloved community”.

King commends India for “greater progress in the fight against caste ‘untouchabliity’ than we have made here in our own country against race segregation”. He also notes how “the leaders of India have placed their moral power behind their law. From the Prime Minister down to the village councilmen, everybody declares publicly that untouchability is wrong”. He then contrasts with how public officials in US “decline to render a moral judgment on segregation and some from the South publicly boast of their determination to maintain segregation. This would be unthinkable in India”.

Recalling how Gandhi ‘took untouchables by the hand and led them into temples’ King observed ’to equal that President Eisenhower would take a Negro child by the hand and lead her into Central High school in Little Rock”.

Returning from India King, Garrow writes, addressed a congregation at Dexter identifying three qualities of Gandhi that he admired most. “First was his great capacity for self criticism. Second was his all but total avoidance of material possessions. Third was the ‘absolute self-discipline’ that Gandhi had exhibited in his private as well as in his public life, so that ‘there was no gulf between the private the public’”. Gandhi, inspired by John Ruskin’s ‘Unto the Last’, gave up his possessions. King, inspired by Gandhi, ‘speaking of unsolicited funds’, said “I’m not going to take this money for myself”.

A popular quote of E.V. Ramasamy, that his followers parrot, is one where he asks that no one should take his word merely because he said but test it against their own reason and only then accept. This, we are told, is evidence that E.V.R. accords each man’s intellect the unfettered freedom. Unlike Gandhi E.V.R. rarely believed in practicing what he preached. Yet another quote, little referred to, tells clearly “you can question or debate my principles with me prior to joining my party but once you join the party you need to blindly follow the directives and set aside and independent reasoning or conscience of your own”. 

The charlatans who wrote the rebuttal will demur that I’m misinterpreting or misquoting E.V.R. No. E.V.R spoke in unadorned prose because he was intellectually incapable of wooly formulations. His speeches were typically written in layman terms because he was incapable of being anything else and as such there is no room for misinterpretation. E.V.R was not only not an abstruse Kant but he was not Gandhi either who had a tendency to tie himself up in knots at times trying to thread an issue through the complex philosophies he held dear. 

Throughout E.V.R’s long life there is no recorded instance of him allowing dissent in his party or his publications unlike Gandhi who published contrarian opinions of himself in his newspaper and tried to answer them. Gandhi never lacked naysayers in his own disciples. Jawaharlal Nehru wrote to Gandhi that his economic ideas were atavist.

When four ministers of the Souther Christian Leadership Conference faced a libel lawsuit for an advertisement they had placed in New York Times to solicit funds to defend King against a perjury case King, advised by a New York attorney, decided to form a trust for fundraising. Launched on 17th May 1962 the trust was called ‘Gandhi Society for human rights’. 

King faced criticism that the name of the society was “un-Christian”. King defended Gandhi, “I believe that in some marvelous way, God worked through Gandhi, and the spirit of Jesus Christ saturated his life. It is ironic, yet inescapably true that the greatest Christian of the modern world was a man who never embraced Christianity”. 

Only charlatans who are unfamiliar with the preachings of Rev. Dr. Martin Luther King Jr., would utter nonsense that he spoke of Whites as E.V.R. spoke of Brahmins. Let us for a moment consider how E.V.R. spoke of Brahmins.

E.V.R. in a very notorious quote said that if a Brahmin and a snake were to be seen together one should kill the Brahmin first. Asked if he can clarify whether he hates Brahminism or Brahmins the every blunt E.V.R says, “Who do you hate? The Brahmin or Brahminism? What is Brahminism?’ – for questions such as these, my reply is Brahminism came from Brahmins and hence it is the Brahmins who should be annihilated. It is like asking whether you hate thievery or the thief. It is because one is a thief, one indulges in thievery. When someone says he hates thievery, it means he hates the thief, too, doesn’t it? Thus, [my stand is] Brahminism grew out of the Brahmin and I am striving to annihilate the root.” The charlatan duo malign P.A. Krishnan as one who ‘misinterprets’ but what is there to misinterpret in such plain neo-nazi language? Nor do the charlatans demonstrate what was misinterpreted. Calumny is not rebuttal but alas it qualifies for one amongst the Periyar herd.

The charlatan duo sheepishly add, about King and others, “The point was not that they incriminated all white people as racists, but rather that they identified who benefitted most from white racism and who ought to own greater social and political responsibility.” King did not stop with merely identifying who benefited from Jim Crow laws but his rhetoric, not out of careful design but more because of his philosophical and theological credo, spoke of justice in broad strokes eschewing any stereotyping and grounding it, always, in the spirit of reconciliation and forgiveness. 

The authors fail to supply a single quote of Martin Luther King Jr., in the same vein as the blood curdling threat issued by E.V.Ramasamy. Love and forgiveness are topics that MLK Jr., returns to again and again and again as much as E.V.R. returns again and again to the topic of hatred and extermination. The differences cannot be more stark. One can scour the voluminous output of E.V.Ramasamy and yet one will return empty handed to come up with a quote comparable to the one by MLK on forgiveness, “Forgiveness does not mean ignoring what has been done or putting a false label on an evil act. It means, rather, that the evil act no longer remains as a barrier to the relationship. Forgiveness is a catalyst creating the atmosphere necessary for a fresh start and a new beginning. It is the lifting of a burden or the cancelling of a debt. Forgiveness means reconciliation, a coming together again. Without this, no man can love his enemies. The degree to which we are able to forgive determines the degree to which we are able to love our enemies”. 

In another sermon he’s at his eloquent best, “the oceans of history are made turbulent by the ever-rising tides of revenge. Look down through history and see the fire of retaliation burning through the centuries….But Jesus decided to live by a higher law. He decided that He would meet physical force with soul force”. 

The Christian preacher reaches further, “The men who cried ‘Crucify him!’ were not bad men; they were blind men. The men who nailed Him to the cross were misguided men. They knew not what they did”. It takes chutzpah and idiocy of an exponential nature to take this man and bracket him with the addled brain of E.V.Ramasamy that knew neither such eloquence or loftiness of spirit.


Martin Luther King Jr., was more than a civil rights activist. He was an inquisitor of whether America was a force for good. Living in the dawn of Cold War and as the Vietnam War raged King flung ‘luminous words’ from pulpits that shamed the conscience of a country. His sermon ‘The drum major instinct’ decried the craving of nations to be super powers. In another sermon “Knock at midnight hour” he is unsparing of the Church too:

“In the terrible midnight of war men have knocked on the door of the church to ask for the bread of peace, but the church has often disappointed them. What more pathetically reveals the irrelevancy of the church in present-day world affairs than its witness regarding war? In a world gone mad with arms buildups, chauvinistic passions, and imperialistic exploitation, the church has either endorsed these activities or remained appallingly silent. During the last two world wars, national churches even functioned as the ready lackeys of the state, sprinkling holy water upon the battleships and joining the mighty armies in singing, "Praise the Lord and pass the ammunition." A weary world, pleading desperately for peace, has often found the church morally sanctioning war.”

Then he identifies the duty of the Church, nay, of any faith in God.

“Midnight is a confusing hour when it is difficult to be faithful. The most inspiring word that the church must speak is that no midnight long remains. The weary traveller by midnight who asks for bread is really seeking the dawn. Our eternal message of hope is that dawn will come….


Faith in the dawn arises from the faith that God is good and just. When one believes this, he knows that the contradictions of life are neither final nor ultimate. He can walk through the dark night with the radiant conviction that all things work together for good for those that love God. Even the most starless midnight may herald the dawn of some great fulfillment.”

I think of Gandhi lying too weak to speak amidst a fast unto death seeking to bring the warring members of Islam and Hinduism in Calcutta. Was Gandhi a superman who singlehandedly stopped the murder of thousands? No. But he was close enough. Gandhi’s faith in his God and that midnight will yield to a dawn of brotherhood underpinned his unshakeable tenet that to a Satyagrahi there’s no such thing as defeat.

King, like Gandhi, did not think of emancipation in unidimensional manner. To King emancipation of blacks including fighting economic injustices and injustices that he felt were structural in America’s economic system. King went to Memphis, Tennessee on March 29th 1968 to lend support to sanitation workers who were on a strike for higher wages. On April 4th 1968 while King stood on a balcony outside his room at a hotel he was assassinated by a sniper.

The night before his assassination King addressed a congregation and spoke in prophetic words and with a clear allusion to Moses in Old Testament who as liberator of Jews does not get to enter the Promised Land. King said, 

“Well, I don't know what will happen now. We've got some difficult days ahead. But it doesn't matter with me now. Because I've been to the mountaintop. And I don't mind. Like anybody, I would like to live a long life. Longevity has its place. But I'm not concerned about that now. I just want to do God's will. And He's allowed me to go up to the mountain. And I've looked over. And I've seen the promised land. I may not get there with you. But I want you to know tonight, that we, as a people, will get to the promised land. So I'm happy, tonight. I'm not worried about anything. I'm not fearing any man. Mine eyes have seen the glory of the coming of the Lord” 

E.V. Ramasamy, unlike King, was completely unsympathetic to the plight of those seeking higher wages. He counseled laborers to live within their means and that Communists were instigating them to rebel against landowners. He added that even if laborers were given a wage raise they’d spend the meager gains on religious festivals.

Gandhi had told his great-grand-niece that if he were to die a natural death she should climb a rooftop and shout out to the world that he was a false Mahatma. Men like Gandhi and King are in a orbit that is light years away from the one inhabited by ever unrepentantly crude and unintellectual E.V. Ramasamy. 

The rhetoric of Malcolm X was certainly inflammatory and radioactive but his biographer Manning Marable in a critically acclaimed biography gives an adroit comparison of Malcolm X and Martin Luther King Jr., to dispel some myths.

MLK Jr., Marable says, was “first and foremost as an American” whereas Malcolm X was “first and foremost as a black man”. Malcolm X lived a very tumultuous life on a different scale, thanks to his membership in the Nation of Islam and later expulsion from that organization. “At the end of his life he realized that blacks indeed could achieve representation and even power under America’s constitutional system”. “As Malcolm’s international experiences became more varied and extensive, his social vision expanded. He became less intolerant and more open to multiethnic and interfaith coalitions”. 

Malcolm X and Martin Luther King Jr., were both barely 40 when they were assassinated. In that short period of life when men barely mature these complex individuals signified an epochal social movement which was shaped by them and they were shaped by it in turn. E.V. Ramasamy lived to be 94 showing a singular incapability of any lofty reconciliation between sections of the society and what he showed was unrepentant and repugnant vulgarity. 

On December 19th 1973, 5 days before his death, E.V. Ramasamy said “It is written in Hinduism that barring the 3% Brahmins the remaining 97% are bastards and children of concubines for Brahmins. How was this possible? Why were they not condemned? When you see a Brahmin address him as a bastard and if he gets angry tell him that you’re calling him a bastard because according to his law you’re one and there’s nothing wrong with that”.

Martin Luther King Jr., concluded his sermon on ‘Love and forgiveness’ exhorting the congregation to “realize we have a moral responsibility to be good and conscientious but also to be intelligent. An grant that we will always reach out for that which is high, realizing that we are made for the stars, created for the everlasting, born for eternity”.

Let's recall the sublime prose and lofty spirit that King summoned to challenge America to live up to its promise and in a way challenged all humanity for all the years to come to live up a higher promise:

I have a dream today.
I have a dream that one day every valley shall be exalted, every hill and mountain shall be made low, the rough places will be made plain, and the crooked places will be made straight, and the glory of the Lord shall be revealed, and all flesh shall see it together.
This is our hope. This is the faith that I go back to the South with. With this faith we will be able to hew out of the mountain of despair a stone of hope. With this faith we will be able to transform the jangling discords of our nation into a beautiful symphony of brotherhood. With this faith we will be able to work together, to pray together, to struggle together, to go to jail together, to stand up for freedom together, knowing that we will be free one day.
This will be the day when all of God's children will be able to sing with a new meaning, "My country, 'tis of thee, sweet land of liberty, of thee I sing. Land where my fathers died, land of the pilgrim's pride, from every mountainside, let freedom ring."

PS: Amongst the many intellectual dishonesties committed by the duo S. Anandhi and Karthick Ram Manoharan is one where they claim that E.V.R sided with Dalits, notably during the Muthukulathur riots of 1957. Nothing like that happened. IN an earlier blog (in Tamil) I had debunked that. A nutshell recall here.

E.V. Ramasamy ridiculed the idea of either himself or his party men going as peacemakers to the riot torn region. (Unlike Gandhi who was eager to thrust himself into Naokhali, Calcutta and Delhi).

In the aftermath of the Keezvenmani massacre in 1968 E.V.R had happily blamed the Brahmins, as a community, despite the fact that it was Naidu landlords who had torched to death 48 Dalits, all women and children. During Muthukulathur E.V.R did not exactly welcome or advocate the arrest of the chief instigator Muthuramalinga Thevar. On the contrary he had only said “we’re not opposed”. While he did chide Muthuramalinga THevar for fomenting trouble he was careful to chide him as an individual and spared his community or members of his community. But if MUthuramalingam had been a Brahmin E.V.R would’ve most certainly acted differently. It is sheer fairy tale to claim that E.V.R was unsparing to non-brahmin dominant castes. This narrative is built on a small booket published by one Thinakaran. Contrary to what that author intended a careful perusal of the quotes only reveals that E.V.R was not only sheepish but that he was craftily navigating a minefield that required greater moral courage which he never possessed. 


References:

  1. Bearing the Cross: Martin Luther King, Jr., and the Southern Christian Leadership Conference — David J. Garrow.
  2. Malcolm X : A life of reinvention - Manning Marable
  3. MLK’s Trip to India -  http://kingencyclopedia.stanford.edu/encyclopedia/encyclopedia/enc_kings_trip_to_india/
  4. King’s article in Ebony about his trip to India http://kingencyclopedia.stanford.edu/primarydocuments/Vol5/July1959_MyTriptotheLandofGandhi.pdf
  5. Setting up of Gandhi Society (http://kingencyclopedia.stanford.edu/encyclopedia/encyclopedia/enc_gandhi_society_for_human_rights.1.html 
  6. King’s Sermon ‘Love and forgiveness’ http://www.thekingcenter.org/archive/document/love-and-forgiveness)
  7. King’s Sermon ‘Knock at Midnight’ http://kingencyclopedia.stanford.edu/encyclopedia/documentsentry/doc_a_knock_at_midnight.1.html 
  8. https://nearemmaus.wordpress.com/2013/01/15/forgiveness-and-reconciliation-a-challenge-from-martin-luther-king-jr/#_ftnref1
  9. E.V. Ramasamy on wages for laborers https://ta.wikisource.org/wiki/பக்கம்:தந்தை_பெரியார்.pdf/253 ; https://groups.google.com/forum/#!msg/vallamai/1YT4db31kNQ/QNNVS-NcBQAJ 
  10. Last speech of E.V.Ramasamy https://www.youtube.com/watch?v=STPe6EJ51Ec 
  11. Last speech of E.V.R (transcript) https://viduthalaidaily.blogspot.com/2012/02/blog-post_7822.html?m=0 
  12. P.A. Krishnan’s article https://thewire.in/179688/periyar-ev-ramasamy-dravida-nadu-brahmins-dmk/ 
  13. Rebuttal to P.A. Krishnan https://thewire.in/181972/periyar-right-liberal-critiques/ 
  14. My last blog (Tamil) refuting some earlier rebuttals http://contrarianworld.blogspot.com/2017/09/blog-post.html



Friday, September 22, 2017

பெரியார் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரையும் பிராமணத் துவேஷமும்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் ஈ.வெ.ராமசாமி பற்றி ஆங்கிலத்தில் உக்கிரமான கட்டுரை ஒன்றை எழுதப் போக இணையத்தில், வேறெங்கே, கொதித்தனர் பலர். பலரின் கொந்தளிப்புகளுக்கு ஒரு ஸாம்பிள் பூ.கொ. சரவணன் என்கிற பிரபலமான பத்திரிக்கைகளில் அவ்வப்போது எழுதுபவருமானவரின் பேஸ்புக் பதிவு. எல்லா ஈ.வெ.ரா பக்தர்களையும் போல் சரவணன் கருத்தை எதிர்கொள்ள எழுதியவரின் ஜாதியை வைத்துக் கீழ் தரமாக எழுதியுள்ளார்.



என் போன்றவர்களும் கிருஷ்ணன் போன்றவர்களும் பெரியார் வெறுப்பரசியலில் ஈடுபட்டதாக மீண்டும் மீண்டும் சொல்வது பெரியாரின் எழுத்துக்களை வைத்து மட்டுமல்ல அவரைத் தங்கள் ஆதர்சமாகக் கொண்டவர்கள் பொது வெளியில் எழுதுவதை வைத்து தான். சரவணனின் பதிவில் பிண்ணூட்டமிட ஒருவர் என்னையும் குறிப்பிட அதற்கு மறுமொழியிட்ட ஒருவர் “இங்கே அம்பிகளை ஏன் கூப்பிடுகிறீர்கள். அவர்களுக்கு மூளை உள்ளதா” என வினவினார்.

பி.ஏ.கிருஷ்ணன் எனக்கு முதலில் பரிச்சயமானது சில வருடங்கள் முன் நேரு பற்றி அவர் எழுதிய கட்டுரைக்கு இந்துத்துவரான நீலகண்டனின் மறுப்புரைக்கு நான், நேருவின் மீதுள்ள பற்றாலும் உண்மைக்குப் புறம்பானதை மறுக்க வேண்டும் என்பதற்காகவும், விரிவான எதிர் வினையாற்றிய போது. அன்று முதல் அவர் நண்பரானார். எங்களுக்குள் நேரு, காந்தி, இந்திய விடுதலைப் போராட்டம், வரலாறு என்று பல விஷயங்களில் ஒத்தக் கருத்துகள் உண்டு. ஆனால் பொருளாதாரம், மார்க்ஸியம், ஸ்டாலின் (ஜோசப்) என்று சில விஷயங்களில் எதிர் துருவங்களும். எல்லா விஷயங்களிலும் ஒத்தக் கருத்துடையவர்கள் கிடைப்பதரிது. அது சுவாரசியமாகவும் இராது. முழுவதும் எதிர் கருத்துடையவர்களுடன் நட்பு வைத்துக் கொள்வதும் சிக்கலே. வயதில் அவர் என் தந்தையின் வயதொத்தவர் ஆயினும் இளையவர்களோடு மிக நட்போடு பழகும் பண்பாளர். நான் மூர்க்கமாக எதிர்ப்பவரிடமும் நான் ஏதாவது கற்றிருக்கிறேன் பி.ஏ.கே சுட்டும் நூல்களைத் தேடிப் படித்திருக்கிறேன், சில சமயம் அவரை மறுப்பதற்காகவும்.

தமிழ் நாட்டில் இன்று மிக மனச் சோர்வைத் தரும் விஷயம் உரையாடல் என்பதே, அதுவும் எதிர் தரப்போடு, மிகவும் அருகிவிட்ட ஒன்று. வரலாற்றைப் பேசுவது கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. கோயபல்ஸே வெட்கப்படும் அளவுக்குப் பிரச்சாரம், ஓங்கி ஒலிக்கின்ற பிரச்சாரமே, ஓங்கியிருக்கிறது. ஜெயமோகன் எழுதினால் படிக்காமலே, ‘இந்துத்துவா’, ‘மலையாளி’ என்று வசைகளே பதில்கள். கிருஷ்ணன் போன்றவர்கள் எழுதினாலோ ‘பாப்பான்’ என்பதே பதில். ‘பார்ப்பன அடிவருடி’, ‘கிறிஸ்தவன்’ என்பவை என்னை நோக்கி பதில்களாக வரும். இந்துத்துவத்தையும் பிராமணத் துவேஷத்தையும் எதிர்க்கும் கிருஷ்ணனும் என் போன்றவர்களும் மாறி மாறி வசைகளை ஒவ்வொரு தரப்பிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளோம். எதைக் குறித்தும் ஒரு விலகலோடு அகடெமிக்காகப் பேசுவது தமிழ்ச் சூழலில் மிக மிகக் கடினமாகிவிட்டது. மோசமான கருத்தையும் அகடெமிக்காக எதிர் கொள்ளும் பண்பும் அறவேயில்லை பெரும்பாலோரிடம்.

சரி எத்தனையோ பேர் கிருஷ்ணனை திட்டியிருக்கிறார்களே பூ.கொ.வின் பதிவைத் தேர்ந்தெடுத்துப் பதில் சொல்வானேன்? பூ.கொ,  இளைஞர், மிகச் சாதாரணக் கிராமத்தில் இருந்து முன்னேறி சமீபத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தவர், அதிகம் படிப்பவர், நிறைய எழுதுகிறார், பல மாணவர்களோடு உரையாடுகிறார் அவருக்குள் இத்தகைய துவேஷம் இருப்பது மிகத் துரதிர்ஷ்டமானது மட்டுமல்ல பெரியாரின் நிழல் எத்தகைய தாக்கத்தை அப்படிப்பட்டவருள்ளும் ஏற்படுத்துகிறது என்பதாலேயே.

பூ.கொ.வும் நானும் சில காலம் பேஸ்புக்கில் நட்பாக இருந்திருக்கிறோம் பரஸ்பரம் நேருவின் மீதுள்ள பற்றால் இணைய முடிந்தது. ஓரிரு முறை அவரை அழைத்தும் பேசியிருக்கிறேன். சமீபத்தில் அனிதாவின் மரணத்தின் போது நான் இட ஒதுக்கீடு, கல்வியின் தரம், நான் கல்லூரிக்கு விண்ணப்பித்த வருடம் நடந்த 5 மார்க் கூத்து ஆகியவற்றைத் தொகுத்து என் பார்வையாக எழுதிய குறிப்பினால் எரிச்சலுற்று பூ.கொ பேஸ்புக்கில் என்னை நட்பு விலக்கம் செய்து விட்டாரென்று நண்பர்கள் தெரிவித்தார்கள். நேரு பற்றிய ஒற்றுமையைத் தவிரத் திராவிட இயக்கம், இட ஒதுக்கீடு, பொருளாதாரம் என்று பல விஷயங்களில் வேறுபாடு. ஓரிரு முறை பிராமண வெறுப்பு, இடை நிலை சாதியினரை மென்மையாகக் கையாளுவது குறித்துக் கேள்விக் கேட்டபோது கிடைத்த பதில்கள் இந்த நட்பு ரொம்ப நாள் நீடிக்காது என்பதை உணர்த்தியது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. நஷ்டமில்லை.

ஈ.வெ.ரா யூதர்களை மற்றவர்களின் உயிரை உரிந்து வாழ்பவர்கள் என்று குறிப்பிட்டுவிட்டு பிராமணர்களும் அப்படியே என்று மார்ச் 20 1938-இல் எழுதியதைக் குறிப்பிட்ட பி.ஏ.கே அக்காலக் கட்டம் ஹிட்லரின் கொடி உயரப் பறந்த காலம் என்றும் இந்த மேற்கோளைச் சொன்னவர் ஈ.வெ.ரா என்று தெரியாமல் நாஜிக்களின் வரலாறுத் தெரிந்த யாரும் படித்தால் அந்த மேற்கோள் ஏதோ ஒரு நாஜி செய்தித்தாளில் வெளிவந்திருக்கும் என்று நினைக்கக் கூடும் என்கிறார். ஈ.வெ.ராவை ஹிட்லர் என்று சொல்லுமளவுக்குப் பி.ஏ.கே வரலாறுத் தெரியாத முட்டாளோ வன்மமம் மட்டுமே அறிவில் குடிக் கொண்டவரோ அல்லர். அந்த மேற்கோள் அப்பட்டமான நாஜித்தனம் என்பது வரலாற்றைப் படித்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.



“ஆரிய இனவாதம் பேசிய அன்னிபெசண்ட், தயானந்தர், திலகர் எனும் பெரும் குழுவிற்கு எதிர்வினையாகவே திராவிட இயக்கம் திராவிட இனவாதம் பேசியது என மூச்சு கூட விடமாட்டார்.” என்று பூ.கொ கொதிக்கிறார். 

கட்டுரையின் நோக்கம் திராவிட இயக்கத்தின் வரலாறுப் பற்றியதல்ல. ஒரே வரியில் மிகச் சிக்கலான ஒரு காலக் கட்டத்தையும் அது உருவாக்கிய சிக்கலான மனிதர்களையும், மிகுந்த முரன்களைத் தன்னகத்தே கொண்டு எழுந்த திராவிட இயக்கத்தையும் பொதுப் புரிதலில் இருக்கும் ஒற்றைப் படையான சித்திரத்தை ஒட்டிய வாக்கியத்தைப் பிஏகே ஒற்றைப்படையான பார்வையைக் கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டிவிட்டுச் செய்கிறார் பூ.கொ. பிஏகே செய்தது ஒற்றைப்படையென்றே வைத்துக் கொண்டாலும் அதற்குப் பதில் இன்னொரு ஒற்றைப்படையா?

“நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்கிற பகத்சிங் நூலையும், ரஸ்ஸல் அவர்களின் கிறிஸ்தவ மதம் மீதான விமர்சன நூலை தமிழிற்குக் கொண்டு வந்தவரும் பெரியார் என்பதோ மறந்து போயிருக்கும்.” என்கிறார் பூ.கொ. 

நாத்திகம் என்பதை இந்திய ஞான மரபுக்கு சொல்லிக் கொடுக்க ரஸ்ஸல் தேவையா? பூ.கொ கொஞ்சம் ஜெயமோகனைப் படிக்கலாமே. ஆத்திகத்தில் பல படி நிலைகள் உண்டு. சாதாரணப் பூசைகள், எளிய நம்பிக்கைகள் என்று தொடங்கி உயரியத் தத்துவங்கள் நோக்கிச் செல்ல முடியும். அது போல் நாத்திகமும் பல படி நிலைகள் கொண்டது. ‘பரிசுத்த ஆவியிலே இட்லி வேகுமா’, ‘பிள்ளையார் போன்ற பிறப்புச் சாத்தியமா?’ என்பதெல்லாம் ஆரம்பப் படி நிலை. அங்கிருந்து எத்தனையோ தத்துவார்த்தமான மேல் படி நிலைகள் நோக்கிச் செல்ல முடியும் ஆனால் தமிழ் நாட்டில் பெரியாரின் கருணையால் உண்டான நாத்திகம் பாமரத்தனமான நாத்திகத்திலேயே நின்றுவிட்டது. அதனால் தான் இன்று பெரியாரும் மடாதிபதியாகிவிட்டார். ‘தி.க.காரர்கள் நாத்திகர்களல்ல அவர்கள் கடவுள் பெரியார்’ என்றார் ஜெயகாந்தன். பெர்டிரண்ட் ரஸ்ஸல் பெரும் அறிவு வீச்சுக் கொண்டவர் அவரை ஏதோ தெரு முனை நாத்திகவாதியாகச் சுருக்கிப் புரிந்துக் கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர். இன்று எந்த மேலை நாட்டுத் தத்துவ மேதையும் ரஸ்ஸலின் அந்நூலை இடது கையால் கூடப் பொருட்படுத்த மாட்டார். இந்துத்துவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் ரிச்சர்ட் டாக்கின்ஸின் புத்தகமும் அப்படியே.

பூ.கொ பொங்குகிறார் “ராமாயணத்தை மிக மட்டமாக அணுகினார் என்கிற நீங்கள் அவர் புராணங்கள், தமிழிலக்கியங்களின் பெண்ணடிமைத்தனத்தையும் சாடினார் என மறந்தும் மூச்சுவிடாதீர்கள். புராணங்கள் புனிதப்படுத்தப்படுவதை மட்டுமல்ல கண்ணகியை புனிதப்படுத்தியதையும் பெரியார் கேள்வி கேட்டார். உங்களுக்கு வசதியானது தான் கண்ணில் படும்.” 

பிஏகே என்ன பிராமணர் என்பதாலா ஈவெராவின் ராமாயணம் பற்றிய கருத்தை மறுக்கிறார். ஜெயகாந்தன் கூடத்தான் ஈவெரா இலக்கியம் பற்றிப் பேசியதையெல்லாம் புறந்தள்ளியிருக்கிறார். இலக்கியம் மற்றும் தத்துவங்களின் புலமைக் கூட அல்ல அறிமுகம் கொண்டவர்கள் கூட ஈவெராவின் நாத்திகம் பற்றிய கருத்துகளைச் சின்னப் புண்ணகையோடு கடந்துவிடுவார்கள்.



“சவார்க்கர் மகத்தான தேசபக்தர். அவர் மன்னிப்பு கேட்டதும், வெறுப்பரசியல் செய்ததும் பி.ஏ.கிருஷ்ணன் பார்வையில் தனி அத்தியாயம். சவார்க்கர் காந்தி கொலை பற்றி உங்கள் கருத்து எனச் 'சவார்க்கர் தேசபக்தர்' என்கிற பதிவில் கேட்டதற்கு 'அது தனிக்கதை' என்ற நடுநிலையாளர் அவர்”.
 பிஏகே கட்டுரை எழுதியது பெரியார் போன்று வெறுப்பரசியல் செய்தவர் எப்படி ஏற்புடையவர் ஆனார் என்பது பற்றி. எதிர்வினையோ எங்கெங்கோ அலைகிறது பூ.கொவின் சினத்தில். எதையெல்லாம் சொல்லி அடிக்க முடியுமோ அதையெல்லாம் சொல்லி அடிக்கச் சினத்தில் தாறுமாறாக எழுதியிருக்கிறார் பூ.கொ.


பெரியாரின் பங்களிப்பை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் பிஏகே, “Periyar was a selfless and incorruptible man of considerable personal charm. He spent his long life tirelessly working in support of what he believed in and against what he detested. What he believed in were self-respect, rationalism, gender equality and his own version of social justice. What he detested were caste discrimination, Gandhi, god, religion, Brahmins and the then-prevailing idea of India.”

சவர்க்கருக்கு ஒரு நீதி பெரியாருக்கு ஒரு நீதியல்ல. பிஏகே அன்றாடம் இந்துத்துவர்களை ‘braying brigade’ என்று விளித்து அதி தீவிரமாகச் சண்டியிட்டுக் கொண்டிருப்பார் இணையத்தில். அது சரி சேறு வாரியிறைப்பது என்று முடிவானப் பின் எதற்கு உண்மைகளைச் சட்டைச் செய்ய வேண்டும்.

சவர்க்கரின் நினைவு நாளில் இந்துத்துவர்கள் களிக் கொண்டு எழுதுவார்கள் இன்னொரு பக்கம், “என்ன பெரிய வீர சவர்க்கர், மன்னிப்புக் கடிதம் எழுதி மண்டியிட்டவர்’ என்பார்கள் பெரியார் பக்தர்கள். சவர்க்கரின் தியாகம் மகத்தானது. எனக்கு அவரின் பிந்நாள் அரசியல் ஒவ்வாதது அதற்காக அவர் தேசத்துக்காகச் செய்த தியாகத்தை மறுக்க முடியாது.

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுச் சிறைக் கொட்டட்டியில் தனிமைச் சிறை, கடும் வேலைச் செய்ய விதிக்கப்பட்டவர். அவர் சகோதரரும் அப்படியே. அக்காலத்தில் ராஜாங்க எதிரி என்று தீர்ப்பளிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டால் சொத்துக்களை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளும். சவர்க்கர் சகோதரர்கள் குடும்பங்கள் சகலத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றனர். சவர்க்கரின் சகோதரர் கை கால்களில் விலங்கிடப்பட்டு, தலையில் துணியைச் சுமந்தவாறு நாயைப் போல் தெருக்களில் அழைத்துச் செல்லப்பட்டார். திராவிட இயக்கதின் எந்தத் தலைவரும் இத்தகைய தியாகத்தை என்றில்லை அதன் அருகில் வைக்கத் தகுந்த எந்தத் தியாகத்தையும் தேசத்துக்காகச் செய்ததில்லை என்பதே உண்மை. சவர்க்கர் 10 வருடம் மிகக் கொடுமையான சிறைவாசத்தை அனுபவித்து விட்டே அந்த மன்னிப்புக் கடிதத்தை எழுதினார். பாரதியும் மன்னிப்புக் கடிதம் எழுதியிருக்கிறார். பெரியாரின் தனிப்பட்ட நேர்மையையும், கொள்கைக்காகப் போராடும் குணத்தையும் ஏற்க முடிந்த பிஏகே சவர்க்கரின் தியாகத்தை எப்படி மறுப்பாற். கவனிக்கவும், அரசாங்க அச்சுறுத்தலுக்குப் பயந்து ஈவெரா கம்யூனிஸம் பற்றிப் பேசுவதை நிறுத்துக் கொண்டதற்காக அவரை என்னவென்று அழைப்பது? சவர்க்கர் பற்றியும் இந்த மன்னிப்புக் கடிதம் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறேன் (காண்க: http://contrarianworld.blogspot.com/2017/06/veer-savarkar-question-his-politics-not.html )


“அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்ட சிக்கலின் போது இந்து மதத்தை விமர்சிக்கும் வரிகளை அம்பேத்கரின் வரிகளை விநியோகித்ததற்கு 'இஸ்லாம் மதத்தைப் பற்றி விமர்சித்தது எல்லாம் சொன்னால் என்ன ஆகும்' என முத்தை உதிர்த்தார்”. 

அம்பேத்கரின் ‘Thoughts on Pakistan’ அப்பட்டமான இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துகள் கொண்டது தான். அம்பேத்கர் இந்து மதத்தைத் தூற்றியதை களிப்போடு பகிர்ந்துக் கொள்வோர் அவர் இஸ்லாமியர், கிறித்தவர்கள் பற்றி எழுதியதை மௌனமாகக் கடந்து செல்வதைச் சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு? 



“பெரியார் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற அயராது போராடினார் என ஆதாரங்களோடு அடுக்கிய போது நீங்கள் உடனே க்ரான்வில் ஆஸ்டினே சொல்லிவிட்டார் என ஒரு வாதத்தை முன்வைத்தீர்கள். காங்கிரசே சுயமாக இட ஒதுக்கீடு தந்தது, 'பாவம் பெரியார் ஓரமாகப் போராடினார்' எனத் தட்டி கழித்தீர்கள். க்ரான்வில் ஆஸ்டினின் ஆய்வுகளிலும் இடைவெளிகள் உண்டு, போதாமைகள் உண்டு என விக்ரம் ராகவன் முதலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சுனில் கில்நானி முதல் சட்டத்திருத்தத்திற்குப் பெரியார் முக்கியக் காரணம் என்கிறார்.” 

பெரியார் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார் என்பது மிகைப்படுத்தலே. தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு என்பதற்கு ஜாதிவாரியான பிரதிநித்துவம் என்பதில் தொடங்கி மிக நீண்ட வரலாறுண்டு. சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பகம் துரைராஜன் என்பவர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், எல்லோரும் சட்டத்தின் முன் ஒன்றே எனும் ஷரத்தின் படி தனக்கிருக்கும் சம உரிமையை அது பாதிக்கிறது என்று சொன்னார், அவர் சார்பில் தீர்ப்பு வந்தது. தமிழக அரசு, கவனிக்கும் இது குமாரசாஇ ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்தது. கிரான்வில் ஆஸ்டின் தன் புத்தகத்தில் எழுதுகிறார், உச்ச நீதி மன்றம் அப்போதிருந்த மன நிலையை யூகித்த சட்ட அமைச்சகம் நேருவின் மந்திரி சபைக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைக்கான ஷரத்தை மாற்றி அமைக்குமாறு ஒரு குறிப்பை அனுப்பியது. குறிப்புச் சென்ற ஒரு மாதத்திற்குள் உச்ச நீதி மன்றம் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை ஊர்ஜிதம் செய்தது.

நிச்சயமாகத் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் ஒரு காரணமே. ஆனால் இந்த ஒரு பிரச்சிணையைத் தவிரக் கணன்று கொண்டிருந்தது வேறொன்று. ஜமீந்தாரி ஒழிப்புத் திட்டம். இதற்கும் நீதிமன்றங்கள் தனி மனித பொருளுடைமையின் அடிப்படையில் அத்திட்டத்தை ஒழித்துவிடுமோ என்று நேருவும், அம்பேத்கரும் மற்றவர்களும் அச்சப்பட்டனர். அப்புறம் கட்டுபாடற்ற பேச்சுரிமைப் பற்றியும் கவலை எழுந்தது பிரிவினையின் வரலாறுக் காணாத வன்முறையின் இடையே சிக்கித் தவித்த தேசத்தில். இதெல்லாம் ஒரு புயலாக உருவெடுக்க நேருவும் அம்பேத்கரும் முயல இந்திய அரசியல் சாசனத்தின் முதல் சட்டத் திருத்தம் வந்தது. காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்தது. பூ.கொ. விக்ரம் ராகவன் கிரான்வில் ஆஸ்டினின் ஆராய்ச்சியில் இடைவெளிகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் என்கிறார். நான் தேடிய வரையில் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. இணையத்தில் ராகவனின் தளம் ஒன்று கிடைத்தது அதில் ஆஸ்டின் இறந்த போது ராகவனும் மற்றவர்களும் எழுதிய அஞ்சலிகள் மற்றும் வேறொரு கட்டுரையில் ஆஸ்டினின் ஆராய்ச்சியில் குறைகள் இருப்பதாகவோ, இடைவெளிகள் இருப்பதாகவோ எழுதவில்லை. ஆஸ்டினின் சித்திரத்தை சற்றே விமர்சித்திருக்கிறார்கள் ஆனால் எல்லோரும் அவர் மிகப் பெரும் உழைப்பைச் செலுத்தி ஆராய்ச்சி செய்திருக்கிறார் அடிப்படை ஆராய்ச்சியில் தவறுகள் ஏதும் சொல்லவில்லை.

சுனில் கில்நானியும், ராமச்சந்திர குஹாவும் பெரியாரை ஒரு சிந்தனையாளராகவே முன்னிறுத்துகிறார்கள். ஆராய்ச்சியில் இடைவெளி என்கிறாரே பூ.கொ. அது இவர்களுக்குப் பொருந்தும். பாரதி முதலானோர் ஒரு நீண்ட சமூக மாற்றத்திற்கான முயற்சிக்கு வித்திட்டவர்கள் என்பதை அவர்கள் அறியவில்லை. கில்நானி பெரியார் குறித்து, “ ‘பாம்பையும் பார்ப்பானையும் ஒன்றாகப் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடிக்க வேண்டும்’ என்றார். இதை 19-ஆம் நூற்றாண்டில் ஒரு தலித் இதைப் பேசியிருந்தால் கொல்லப்பட்டிருப்பான்”. பாவம் கில்நானி அவருக்கு ஜஸ்டிஸ் கட்சியின் வரலாறும் தெரியவில்லை, பெரியார் பணக்கார நாயக்கர் என்பதும் தெரியவில்லை. ‘பிராமணரல்லாதோர் சபை’ என்று ஒன்றை ஆரம்பித்து ‘பிராமணர்கள் நடு நடுங்க வேண்டும்’ என்று பிரகடனம் செய்தார்கள் பெரியார் அந்த விஷத்தை கக்கும் முன்பே.

பெரியார் இடைநிலைச் சாதிகளைக் கண்டித்தார் என்கிறார் பூ.கொ. இது ஜோக்.

கீழ் வெண்மனியில் 44 தலித்துகள், பெண்களும் குழந்தைகளும், கொடூரமாகத் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போது ஈவெரா விஷம் கக்கினார், எரித்த நாயுடுகள் மேல் அல்ல, பிராமணர்கள் மீது (காண்க http://mugamoodireader.blogspot.com/2014/12/blog-post.html )

பூ.கொ.வும் இன்னும் பலரும் உடனே சுட்டுவது முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பின் ஈவெரா முத்துராமலிங்கத் தேவர் குறித்து வெளியிட்ட அறிக்கைகளை. இதற்கு முக்கிய ஆவணம் தினகரன் எழுதிய “முதுகுளத்தூர் கலவரம்’ (அப்புத்தகமும் டி.எஸ். சொக்கலிங்கம் எழுதிய ‘முதுகுளத்தூர் பயங்கரம்’ புத்தகமும் ஒன்றாக மயிலைநாதன் தொகுப்பில் ‘சிந்தனனை வெளியீடு’ வந்திருக்கிறது)
இம்மானுவேல் சேகரன் படுகொலைக்குப் பின் கைது செய்யப்பட்ட தேவர் பற்றி ஈவெரா சொல்கிறார், “தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.”

வார்த்தைகளைக் கவனிக்கவும். “தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை”. மேலும் அந்த அறிக்கை முழுதும் (தினகரனின் புத்தகத்தில் இருந்து இந்தப் பகுதிகளைக் கீற்றூத் தளம் தொகுத்திருக்கிறது http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1447863194/21151-2012-09-14-09-23-48 ) தேவரை மட்டும் தனி மனிதராக விமர்சிக்கிறார் ஈவெரா. கீழ் வெண்மணியில் சம்பந்தமேயில்லாத பிராமணர்களை ஒரு தொகுப்பாகவும், இனமாகவும் கரித்துக் கொட்டியவர் இப்போது கவனமாகத் தேவரை விமர்சித்தாரே தவிரத் தேவர்கள் என்ற ஜாதியை ஒன்றுமே சொல்லவில்லை. கீற்றுத் தளத்தில் இல்லாதது புத்தகத்தில் இருக்கும் முக்கியமான ஒரு குறிப்பு ஈவெராவின் மேற்கோள், “முதுகுளத்தூரில் நடக்கும் ஜாதிச் சண்டையை நிறுத்த நான் என் கருப்புச் சட்டைப் படையை அனுப்ப மாட்டேன். அங்கே போய்ச் சும்மா சாகவா? அல்லது தமிழனைத் தமிழன் சாகடிக்கவா? ஜாதிகள் ஒழிந்தாளொழிய சண்டைகள் தீராது”.

இந்து-முஸ்லிம் கலவரங்களை அடக்கத் தன் உயிரை பணையம் வைத்த மகாத்மா என் மனக்கண்ணில் ஒரு நிமிடம் வந்து மறைந்தார். தினகரனின் புத்தகத்தில் பெரியார் தேவர்களைக் கண்டித்தார் என்பதை நிறுவ பழைய விடுதலை இதழ்களில் இருந்து சில பக்கங்கள் புகைப்படமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை வெறும் செய்திக் குறிப்புகள் பெரியாரின் தனிப்பட்ட கண்டனங்கள் அல்ல. ஆனால் அப்புகைப்படங்களில் இரண்டு என் கவனத்தை ஈர்த்தன.

“குறும்புக்கேள்விக்குப் பெரியார் சாட்டைப் பதில்” என்ற தலைப்பில் 16(10).10.57 அன்று வெளியான பத்தி. கத்தி வைத்துக் கொள்ளச் சொன்ன பெரியார் கைதுச் செய்யப்படவில்லை ஆனால் சமாதான விரும்பியான தேவர் கைதாகிவிட்டாரே என்ற கேள்விக்குத் தேவர் கைதுக்குப் பின் கலவரம் அடங்கியதை சுட்டிவிட்டு மிக விஷம் தோய்ந்த வார்த்தைகளைக் கொட்டுகிறார்.

“நான் கத்தி வைத்துக் கொள் என்று பேசுவதால் இது வரை எந்தப் பார்ப்பானுக்கும் ஒரு சிறு காயம் கூட ஒரு அடி கூட விழவில்லையே! ஏன்?

நான் குத்தச்சொல்லி உத்தரவு கொடுத்தால் தானே நடக்கும். சும்மாவா கொல்வோம் என்கிறோம். ஒரு நிபந்தனையின் மீது தானே சொல்கிறோம். இன்னது செய்யாவிட்டால் இன்னது நடக்கும் என்கிறோம். நீ பிராமணன் என்று சொல்லாமல் பூணூலைக் கழற்றி விடேன். அப்படிக் குத்துபம்படியாகச் சொல்வதாக இருந்தாலும் ரகசியமாகவா செய்வேன்? சர்க்காருக்கு இன்னின்னார் இன்னின்னாரை குத்துவார்கள் என்று பெயர் கொடுத்து அவர்களுக்கும் பாதுக்காப்பளிக்க ஒரு வாய்ப்பளித்துவிட்டுத் தானே செய்வோம்!”

“தூக்கிலிடப்படவும் தயாராகுங்கள்” என்ற அறிக்கையில் சொல்கிறார், “சாதி ஒழிபடவேண்டுமா வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். இளைஞர்களாயிருப்பவர்கள் இரத்ததில் கையெழுத்துப்போட்டு அனுங்கள், காந்தி சிலையை உடைக்கிறேன், பார்ப்பானை ஒழிக்கிறேன் என்று! ஒன்றுமில்லாத குப்பை சங்கதிக்கு முதுகுளத்தூரில் 30-40 பேர் செத்திருக்கிறார்கள்”

“முதுகுளத்தூர், நீடாமங்கலம் ஆகியவற்றில் பெரியார் எதிர்த்தது பிராமணர்களையா?” என்று கேட்டீர்களே பூ.கொ மேற்கண்டவைகளுக்கு என்ன பதில்?

பிஏகே கட்டுரை முழுதும் பெரியாரின் பிராமண எதிர்ப்புப் பற்றியே இருக்கிறதே என்று அங்கலாய்க்கிறார்கள். யாரொ வைத்த நெறுப்பில் யாரோ கொல்லப்பட்டு ஊரே ரணகளமாகும் போதும் “பார்ப்பானைக் ஒழிக்க வேண்டும்” என்று அறிக்கை எழுதும் மனோ வியாதிக் கொண்டவரைப் பற்றி வேறென்ன எழுத முடியும். காந்தியைப் பற்றி எழுதினால் தேச விடுதலை, சத்தியாகிரஹம் என்று எழுதலாம் அவர் எத்தனையோ விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாலும், தீண்டாமை ஒழிப்பு உட்பட. நாம் என்ன செய்ய முடியும் ஈவெராவின் மூச்சும் பேச்சும் பிராமணர்களை ஒழிப்பதைப் பற்றியே இருந்தால் பிஏகே என்ன செய்ய முடியும்.

‘நாங்கள் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை பார்ப்பனீயத்தைத் தான் எதிர்க்கிறோம்” என்று பெரியாரிஸ்டுகள் பம்மாத்துக் காட்டுவார்கள் ஆனால் பெரியார் பட்டவர்த்தனமாகச் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார் பிஏகே- “நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன். திருடனை வெறுக் கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பதுபோல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன்திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுத் தனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான்பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப் பாடுபடுகிறேன்.”

பெரியார் தலித்துகளின் அறிவுத்திறன் மற்றும் அம்பேத்கர் குறித்தும் மிக அருவருப்பாகச் சொன்னதைப் பிஏகே ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறாறர், “அவர் (அம்பேத்கர்) 10% இட ஒதுக்கீடு கேட்டார், அவர்கள் (பிராமணர்கள்) 15% கொடுத்தனர் ஏனென்றால் 25% கொடுத்தால் கூட 3 அல்லது 4 சதவீதம் தான் தகுதியானவர்கள் கிடைப்பார்கள் (தலித்துகளிடம்). அவர் பிராமணர்கள் எழுதிய அரசியல் சாஸனத்தில் கைக்காட்டிய இடத்தில் கையெழுத்திட்டார்”. சத்தியமாக இதை மட்டும் அன்றோ இன்றோ எந்தப் பிராமணராவது இப்படிப் பேசினால் கழுவில் ஏற்றியிருப்பார்கள். ஏற்றியிருக்க வேண்டும். தவறில்லை.

ஓரு இனமே அழிய வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து எழுதிய ஒருவர் சமூகத்தின் ஆசானாகக் கொண்டாப்படும் இடத்தில் அச்சமூகத்தினர் அதைச் சுட்டிக் காட்டிக் கூடப் பேசக் கூடாது என்கிறார்கள் இந்த நாஜிக்கள். அவரின் இந்த நாஜித்தனம் ஒரு சமூகத்தின் நாஜித்தனமாக உருவெடுத்திருக்கிறது என்பதைச் சமூகத்தைப் பற்றிக் கவலைக் கொள்ளும் எந்த மனிதனும் கண்டும் காணாமல் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.

ஒரு இனத்தில் பிறந்தவன் இப்படித்தான் இருப்பான் என்றோ, பேசும் கருத்துகளுக்குப் பிறந்த இனத்தைத் தவிர வேறெதுவும் காரணமேயிருக்காது என்றும் பேசுவதும் அப்பட்டமான நாஜித்தனம் தான்.

ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படம் எடுத்தவர் பிராமண எதிர்ப்பு பற்றிக் கேட்ட போது ஜெயகாந்தன் சினந்துச் சொன்னார், “நீங்க தான் பகைமையை மட்டும் மாத்திக்காம இருக்கீங்க, ‘தள்ளிப் போடா’ அப்படீன்னு சொல்ற பாப்பான் எங்க இருக்கான் இன்னைக்கு? இந்த வெற்றியைக் கொண்டாடுவீங்களா (அதை விட்டு விட்டு) அன்னைக்கு அவன் தாத்தா என் தாத்தாவைச் சொன்னான்னு சண்டைப் போட்டுகிட்டு இருக்கீங்க…சும்மா பகைமைக்குத் தூபம் போட கூடாது. தமிழன் அதைச் செய்யக் கூடாது. பகைமையை வெச்சுக்கிட்டாப் பேச முடியாதுல்ல. எதன் பேராலும் அதைப் பரப்புவது சரியில்லை’.

இன்று பூ.கொ. அடைந்திருக்கும் உயரத்திற்கு அவர் குடும்பம், குறிப்பாக அவர் அம்மா, அளித்த ஊக்கமும் அவரின் உழைப்பும் காரணம். அவரைச் சுற்றி அவரைப் படிக்க ஊக்குவித்தவர்கள் அநேகம் பேர் என்கிறார் பேட்டிகளில். நல்லது. அந்த முக்கியமான ஆதரவு இல்லாமல் அனிதாவின் சக்திக்கு மீறிய சம்பவச் சூழலில் சிக்கித் தானே அவர் இறந்தார். உணர்ச்சிக்கு ஆட்பட்டு எதிர்ப்பவர்களையெல்லாம் பிறப்பைச் சொல்லிப் பேசுவதும் உணர்ச்சிக் கொந்தளிப்பைத் தாண்டி பொது விவாதத்தின் இன்னொரு தரப்பை கேட்கவே மாட்டேன் என்பதும் என்ன பண்பு?

References:

1. Working a democratic Constitution - Granville Austin
2. Vivek Raghavan on Granville Austin http://www.india-seminar.com/2010/615/615_comment.htm 
3. Raghavan’s obituary http://scroll.in/article/670221/How-Granville-Austin-beat-Delhi-babudom-to-write-his-book-on-the-Indian-Constitution
4. Periyar on Keezvenmani http://mugamoodireader.blogspot.com/2014/12/blog-post.html
5. P.A. Krishnan's article http://thewire.in/179688/periyar-ev-ramasamy-dravida-nadu-brahmins-dmk/
6. பார்ப்பன எதிர்ப்பா, பார்ப்பணீய எதிர்ப்பா "http://keetru.com/index.php/2014-03-08-04-41-26/2014-03-14-11-17-84/27587-2014-12-25-13-07-40?code=1&state=tt"
7. Pu.Ko Related interviews http://tamil.thehindu.com/opinion/columns/படிச்சிட்டுத்-திட்டு-என்பாள்-அம்மா/article8685663.ece
8. Pu.kO interview http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=37446&cat=1360&Print=1
9. EVR on Muthuramalinga Thevar (Excerpted from Dinakaran book by Keetru) http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1447863194/21151-2012-09-14-09-23-48
10. A Thevar website http://thevarkalam.blogspot.com/2010/03/blog-post_2039.html
11. A Devendrakula Web site recounting the riots http://devendrarsangamam.blogspot.com/2008/11/1957.html
12. பூ.கொ. சரவணன் பதிவு https://www.facebook.com/pu.ko.saravanan/posts/1631893846841685

"தன் சாதிப்பற்றை விடாமல், வெறுப்போடு மட்டும் ஆளுமைகளை அணுகுகிறவர்களுக்கு மகத்தான தலைவர்கள், மக்கள் சேவகர்கள், அடையாளங்களைத் தாண்டி அயராது இயங்கியவர்கள் ஒற்றைப்படையாகவே தெரிவார்கள்.
பெரியாரை ஹிட்லரோடு ஒப்பிட்டு எழுதியிருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் ஆரிய இனவாதம் பேசிய அன்னிபெசண்ட், தயானந்தர், திலகர் எனும் பெரும் குழுவிற்கு எதிர்வினையாகவே திராவிட இயக்கம் திராவிட இனவாதம் பேசியது என மூச்சு கூட விடமாட்டார். திராவிட நிலப்பரப்பில் அறிவுஜீவிகளே இல்லை என்றும் அதில் முளைத்த கள்ளிச்செடியே பெரியார் என்றும் ஒரு முத்தை உதிர்த்திருக்கிறார். இது தமிழ் அறிவுப்பரப்பை முற்றாகத் தட்டையாக அணுகும் மேட்டிமைப்பார்வை. 
பெரியாரின் நாத்திகவாதம் தட்டையானது என்கிற பி.ஏ.கிருஷ்ணன் இந்துவாக நம்பிக்கை அதன் மீது நம்பிக்கை இல்லாதவரும் இருக்கலாம் என்று எழுதிய முத்துக்கள் நினைவுக்கு வருகிறது. நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்கிற பகத்சிங் நூலையும், ரஸ்ஸல் அவர்களின் கிறிஸ்தவ மதம் மீதான விமர்சன நூலை தமிழிற்கு கொண்டு வந்தவரும் பெரியார் என்பதோ மறந்து போயிருக்கும். 
சவார்க்கர் மகத்தான தேசபக்தர். அவர் மன்னிப்பு கேட்டதும், வெறுப்பரசியல் செய்ததும் பி.ஏ.கிருஷ்ணன் பார்வையில் தனி அத்தியாயம். சவார்க்கர் காந்தி கொலை பற்றி உங்கள் கருத்து எனச் 'சவார்க்கர் தேசபக்தர்' என்கிற பதிவில் கேட்டதற்கு 'அது தனிக்கதை' என்ற நடுநிலையாளர் அவர். அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்ட சிக்கலின் போது இந்து மதத்தை விமர்சிக்கும் வரிகளை அம்பேத்கரின் வரிகளை விநியோகித்ததற்கு 'இஸ்லாம் மதத்தைப் பற்றி விமர்சித்தது எல்லாம் சொன்னால் என்ன ஆகும்' என முத்தை உதிர்த்தார். நேரில் பார்த்து உரையாடிய போது, 'தேசியக்கட்சிகள் ஆட்சி செய்திருந்தால்
தமிழ்நாடு இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்' என்றீர்களே பி.ஏ.கிருஷ்ணன். எப்படி என்று இன்றுவரை வியந்து கொண்டேயிருக்கிறேன். தமிழ் பரப்பின் அறிவுஜீவியாக ராஜாஜி மட்டுமே உங்கள் கண்ணுக்குத் தெரியக்கூடும். மகிழ்ச்சி.
பெரியார் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற அயராது போராடினார் என ஆதாரங்களோடு அடுக்கிய போது நீங்கள் உடனே க்ரான்வில் ஆஸ்டினே சொல்லிவிட்டார் என ஒரு வாதத்தை முன்வைத்தீர்கள். காங்கிரசே சுயமாக இட ஒதுக்கீடு தந்தது, 'பாவம் பெரியார் ஓரமாகப் போராடினார்' எனத் தட்டி கழித்தீர்கள். க்ரான்வில் ஆஸ்டினின் ஆய்வுகளிலும் இடைவெளிகள் உண்டு, போதாமைகள் உண்டு என விக்ரம் ராகவன் முதலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சுனில் கில்நானி முதல் சட்டத்திருத்தத்திற்குப் பெரியார் முக்கியக் காரணம் என்கிறார். வேறு பல அரசியல் அறிஞர்களும் அதையே வழிமொழிவதை ஆதாரத்தோடு அடுக்கினாலும் பெரியார் மீதான வெறுப்பால் 'ஆஸ்டினே அத்தாரிட்டி' என்றீர்கள். இட ஒதுக்கீட்டை தாராளமாகத் தந்த நேரு ஏன் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்பை 1953-ல் இழுத்து மூடினார் எனத் தெரிந்து கொள்ளலாமா? திறமைக்கு இட ஒதுக்கீடு தடை என உறுதியாகக் கருதிய நேரு மனம் உவந்து தானாகவே தமிழகத்திற்கு இட ஒதுக்கீட்டை ஈந்தார் எனக் கதை சொல்லுங்கள். கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். எதேனும் கேள்விகள் கேட்டால், 'பெரியாரிய நாஜி' என முத்திரை குத்திவிட்டே உரையாடுவீர்கள். இனவாதம் பேசினார் பெரியார் என்கிற நீங்கள் அவர் இடைநிலை சாதிகளைக் கண்டித்துப் பேசியது குறித்து மூச்சு விடாதீர்கள். முதுகுளத்தூர், நீடாமங்கலம் ஆகியவற்றில் பெரியார் எதிர்த்தது பிராமணர்களையா? 
ராமாயணத்தை மிக மட்டமாக அணுகினார் என்கிற நீங்கள் அவர் புராணங்கள், தமிழிலக்கியங்களின் பெண்ணடிமைத்தனத்தையும் சாடினார் என மறந்தும் மூச்சுவிடாதீர்கள். புராணங்கள் புனிதப்படுத்தப்படுவதை மட்டுமல்ல கண்ணகியை புனிதப்படுத்தியதையும் பெரியார் கேள்வி கேட்டார். உங்களுக்கு வசதியானது தான் கண்ணில் படும். எனக்கென்ன தோன்றுகிறது என்றால் பெரியார் சவார்க்கரை போலப் பிராமணராக இருந்தால் கொண்டாடி இருப்பீர்கள். பெரியாரின் பிராமண வெறுப்பு மட்டுமே உங்கள் கண்முன் பெரிதாய் உறுத்துகிறது. ஆதிக்கங்களை, பிராமணியத்தை, மொழிவெறியை, ஆணாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்திய பெரியார் கள்ளிச்செடி தான். அவரின் முற்கள் ஆதிக்கத்தைக் குத்திக்கொண்டே இருக்கும். அவரின் உழைப்பின் கனிகளாகவே நாங்கள் இருந்து விட்டுப்போகிறோம்."