Wednesday, July 7, 2021

ஐ.ஐ.டி. மெட்ராசும் சாதியமும்: சாதியே தகுதியா?

 ஜூலை 1-ஆம் தேதி சென்னை ..டி.யில் மனிதவளம்-சமூகவியல் துறை துணைப் பேராசிரியர் விபின் வீட்டில் அனுப்பிய மின்னஞ்சலில் அக்கல்வி நிலையத்தில் சாதிய வேற்றுமைகள் இருக்கின்றன என்று குற்றம் சாட்டி ராஜினாமா செய்வதாகச் சொல்லியிருந்தார். ..டி.க்களில் பொதுவாகவே சாதியப் பாகுபாடுகள் நிலவுகின்றன, உயர் சாதியினர் ஆதிக்க மனோபாவத்தோடு செயல்படுகிறார்கள், சமூக நீதிக்கு எதிராக அரசு சட்டங்களையே உதாசீனம் செய்யும் நிலை இருப்பதாகவும் சமீப காலங்களில் விமர்சனங்கள் ஒலிக்கின்றன. அதே சமயம் இந்தக் கல்வி நிலையங்கள் தேசத்தின் பொக்கிஷங்கள், இந்தியா வல்லரசாக இவை தான் நம்பிக்கை நட்சத்திரங்கள், சமூக நீதியின் பேரால் தகுதியைக் காவு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் சிலர், குறிப்பாக உயர் சாதியினர், வாதிடுகின்றனர். இச்சர்ச்சையை முன் வைத்துக் கொஞ்சம் வரலாற்றையும் நிகழ் கால எதார்த்தங்களையும் பார்ப்போம்.




சாதியே தகுதியாய்


..டி.க்களில் சாதியம் குறித்த உரையாடலில் இன்று முக்கியப் பங்கு வகிப்பது அஜந்தா சுப்பிரமணியனின் “The Caste of Merit: Engineering Education in India”. ..டி.களின் சாதிய நோக்கும் பிராமண ஆதிக்கமும் அதன் கருவிலேயே சூல் கொண்டதென்று சுட்டிக் காட்டுகிறார் அஜந்தா


ஜனநாயகத்தின் தேவையை என்றும் மறுக்காத சிறந்த ஜனநாயகவாதியான ஜவஹர்லால் நேரு அவ்வப்போது ஜனநாயகத்தின் விலை தகுதி நீர்த்துப் போவதாக இருக்கலாம் என்ற அக்கறையையும் பதிவு செய்திருக்கிறார். ..டி பட்டமளிப்பு விழாவில் இனி பொறியாளர்களே தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள் என்றார். நேரு அத்தகைய உரையை வேறு சாதாரணப் பொறியியல் கல்லூரியில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



இந்திய அறிவியல் ஸ்தாபனங்கள் பற்றிய குறிப்பில் அரசு அறிக்கை ஒன்று பட்டவர்த்தனமாக இத்தகைய முன்னெடுப்புகள்தகுதி வாய்ந்த சிலர்மட்டுமே ஈடுபடக் கூடியதென்றது. அதன் பொருட்டு அரசின் முதலீடு தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆராய்ச்சி நிறுவனங்களில் மட்டும் தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் அது நீர்த்துப் போகும் என்றது. பொருளாதார நெருக்கடியால் சில இடங்களில் மட்டுமே முதலீடு என்று சொல்லாமல் தகுதி நீர்த்துப் போகுமோ என்பதே காரணமாகச் சொல்லப்பட்டது


சர்கார் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிராகக் கருத்துச் சொன்னவர்கள் நஸீர் அகமதும் மேக்னாட் சாஹா. ஒருவர் இஸ்லாமியர், இன்னொருவர் ஒடுக்கப்பட்ட இனத்தவர். இருவரும் இப்படிப்பட்ட தனிக் கல்வி நிலயங்கள் வேண்டுமா, இருக்கும் கல்வி நிலயங்களை மேம்படுத்தலாமே, இப்படிப் புதிதாக உருவாகும் கல்வி நிலயங்கள் கவனத்தை ஈர்த்து ஏற்கனவே இருக்கும் கல்வி நிலையங்கள் பின் தங்கிவிட வாய்ப்புண்டு, என்றெல்லாம் எதிர்த்தார்கள். அவர்கள் அச்சங்கள் ஒவ்வொன்றையும் வரலாறு சரியென்று நிரூபித்தது


..டியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தங்களைத் தனித்துவமிக்க, ஜெயமோகனின் வார்த்தையில் சொல்வதானால், விதி சமைப்பவர்களாக எண்ணிக் கொள்வது ஒரு தொடர் செயல்பாடு. ..டி பற்றிப் புத்தகம் எழுதிய சந்திபன் தேப் புத்தகத்தின் உப தலைப்பு, “உலகை மாற்றியமைக்கும் பட்டதாரிகளும் அவர்கள் உருவான இந்தியாவின் சிறந்த நிறுவனத்தின் கதை”. இப்புத்தகம் பற்றிச் சக ..டி பட்டதாரியான ஜெயராம் ரமேஷிடம் சந்திபன் சொன்ன போது ஜெயராம், “ஏன்நள்ளிரவின் பிராமணர்கள்என்று தலைப்பிட்டிருக்கலாமே? ஆகஸ்டு 15 1947 நள்ளிரவில் விதியோடு நிகழ்ந்த சந்திப்பின் விளைவாக மலர்ந்த கல்வி நிலையம் தானே ..டி? அதை உருவாக்கிய நோக்கம் புதிய வகைப் பிராமணர்களை உருவாக்குவது தானே? இவர்கள் சாத்திரம் படிக்கும் பிராமணர்களல்ல மாறாகப் பொறியாளர்கள்என்றாராம். சந்திபனின் புத்தகத்தில் அநேக இடங்களில்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்என்ற சொல்லாடல் இருக்கிறது என்கிறார் அஜந்தா. சிறந்தவர்கள், விதி சமைப்பவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் சொல்லி அவர்கள் நவீன வகைப் பிராமணர்கள் என்பது ஒரு உள்ளார்ந்த சாதியப் பார்வை


Ajantha Subramanian



மைய நீரோட்டத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்ட இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் உலகாயதமான பார்வை அதனாலேயே மேட்டிமைத் தனமாகவே இருந்தது என்கிறார் அறுபதுகளில் சென்னை ..டி.யில் படித்து வெளியேறிவர். “என் வகுப்புத் தோழர்கள் எங்கோ அமெரிக்காவில் இறந்த நடிகை மர்லின் மன்றோவுக்காக அதிகம் வருந்தினர் ஆனால் அருகிலேயே வேளச்சேரியில் இருக்கும் வறுமை அவர்கள் அக்கறையில் இல்லைஎன்றார். இத்தகைய போக்குகள் சமீப காலத்தில் சற்றேனும் மாறியிருக்கிறது. சமூகப் பணியில் இப்பட்டதாரிகள் பணியாற்றுகிறார்கள். அது பற்றி மேலும் பின்னர்


சென்னை ..டியின் புகழ் பெற்ற இயக்குனர் பி.வி.இந்திரேசன் 1973-இல் ..டி.களில் அறிமுகப் படுத்தப்பட்ட பட்டியல் இனத்துகான இட ஒதுக்கீட்டை சாடி, “ஒரு பிரிவு மக்களால் ஈடு கொடுக்க முடியாத கல்வியின் தரம் அதன் பொருட்டே யாருக்கும் கிடைக்காமல் செய்யும் அதிகாரம் அவர்களின் கையில் இருக்க வேண்டுமா என்று விவாதிக்க வேண்டும்….சமூக அளவில் பின் தங்கியவர்களுக்கென்று பிரத்யேக உரிமைகள் இருக்கலாம் ஆனால் தகுதியானவர்களுக்கு எந்த உரிமையும் கூடாதென்பது தான் சமூக நீதியாஎன்று தன் இயக்குனர் அறிக்கையில் எழுத்து மூலமாகவே சொன்னார். அஜந்தா சொல்கிறார், “கவனிக்கவும் இந்திரேசன் எப்படிசமூக அளவில் பின் தங்கியவர்கள்என்றும்தகுதியானவர்கள்இரண்டு வகையாகப் பிரிப்பதன் மூலம் இட ஒதுக்கீடு இல்லாதவர்களின் தகுதியின் பின் இருக்கும் சமூகக் காரணிகளைக் கவனத்தில் கொள்ளவில்லை”. 


இப்படிப்பட்ட பார்வைக் கொண்ட ஒருவர் 1979-84 வரை சென்னை ..டி.யை வழி நடத்தினார் என்றால் அந்தக் காலத்தில் சமூக நீதி அந்நிலையத்தில் எப்படி இருந்திருக்கும் என்று வாசகர்கள் யூகிக்கலாம். 2004-இல் ஃப்ரண்ட்லைனுக்கு அளித்த ஒரு பேட்டியில் அப்போது உருவாகியிருந்த ஐ.ஐ.டி-கள் தாண்டிய பொறியியல் கல்லூரிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்குமான ஒரு முயற்சி வெடிமருந்து தயாரிக்கும் நகரமான சிவகாசியில் நிறுவியிருந்த "Industrial Security CORE" தனக்கு ஐ.ஐ.டி இயக்குனராக இருந்த போது தோன்றியிருக்காது என்றார். 


என்பதுகளில் படித்துப் பட்டம் பெற்ற வெங்கட் என்கிற பிராமணர் இட ஒதுக்கீட்டினால் ..டியில் நுழையும் மாணவர்கள் அக்கல்வி நிலையத்தின் மரபணு தொகுதியை நீர்த்துப் போகச் செய்கிறார்கள் (‘diluting the gene pool’)” என்று அஜந்தாவிடம் சொன்னார். இது போன்ற தனி மனிதரின் மனப் பதிவுகளைச் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே அஜந்தா கருதுகிறார் ஏனென்றால் இத்தகைய சொல்லாடல்களை அவர் மீண்டும் மீண்டும் கேட்கப் பெறுகிறார்


2006-இல் மண்டல் பரிந்துரையினால் பட்டியல் இனத்தவர் தவிரப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு ..டி.யில் அனுமதிக்கப்பட்ட போது சாதியம் சம்பந்தப் பட்ட உரசல்கள் தீவிரமடைந்தன. அதன் முக்கியப் பகுதியாய் மாணவர்கள் தங்கள் வகுப்புகளில் யார் இட ஒதுக்கீட்டின் வழி அட்மிஷன் பெற்றார்கள் என்பதைக் கண்டறிய பல உபாயங்களை மேற்கொள்வதையும் அப்படிக் கண்டறியப்பட்டவர்களை நோக்கி சாதிய வேற்றுமைகளை ஏவுவதும் நடந்தது. ..டி.யில் நுழைந்த பல மாணவர்கள் படிப்பின் சுமைத் தாங்காது தடுமாறுவதுண்டு ஆனால் இட ஒதுக்கீட்டின் வழி வந்த மாணவர்கள் தடுமாறுவது மட்டும் தகுதியின்மையால் என்கிற சித்திரம் இருந்தது. பொதுத் தொகுதியில் நுழைந்த மாணவர்களிடையேயும் ஆங்கில வழி பள்ளிக் கல்வியில்லாததால் ஆங்கிலத்தில் தடுமாற்றங்கள் இருந்தாலும் ஆங்கில வழிக் கல்விப் பெறாத இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு மட்டுமே ஆங்கில வகுப்புகள் தேவை என்பதை ஒரு பட்டதாரி அஜந்தாவிடம் வலியுறுத்தினார்


அஜந்தாவின் புத்தகம் நமக்கு ..டி கட்டமைப்பும் அதனால் உருவாகும் மாணவர்களின் உலகாயதமான பார்வை பற்றியும் ஒரு சித்திரம் கிடைக்கிறது. இந்தப் பிண்ணனியில் நாம் விபின் வீட்டிலின் புகார் பற்றிய மற்ற கோணங்களைப் பார்ப்போம்.


ஒரு சாதியப் புகாரின் கதை


பாலியல் வன்முறை புகார்களைப் போலவே சாதிய ஒடுக்குதலுக்கு எதிரான புகார்களும் எளிதில் நிரூபிக்க முடியாதவை என்பதோடு, புகார் அளிப்பவர்களே விசாரணைக்கு உட்படுத்தப்படும் நிலையும், புகார் அளிப்பவர் மீதே வெளிச்சத்தைத் திருப்புவதும் அதன் உச்சக் கட்டமாகப் புகார் அளித்தவர் மீதே வேறு வகைப் புகார்களை அடுக்கி செயலிழக்கச் செய்வதும் நடக்கும். இவை அத்தனையும் சாதிய வன்முறைக்கு எதிரான ஒரு புகாரில் நடந்திருக்கிறது


பிப்ரவரி 1, 2018-இல் ..டி கான்பூரில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராஜீவ் ஷேகர் ஒரு மின்னஞ்சலில் தலித் பேராசிரியரான சுப்பிரமணியம் சதேர்லாவை சாதிய இழிவு செய்யும் வகையில் அனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சல் விவகாரத்தில் வேறு மூன்று பேராசிரியர்களும் உடந்தை


சதேர்லாவின் புகாரின் மீது விசாரணை நடக்கும் போதே ராஜீவ் ஷேகர் ..டி தன்பாடுக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டார். விசாரணையில் அந்தப் பேராசிரியர்கள், ராஜீவ் உட்பட, சாதிய வன்மம் காட்டியதாக நிரூபிக்கப்பட்டது. ராஜீவ் ஷேகரைத் தவிர அந்த மூன்று பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. சாதியக் காழ்ப்புப் புகார் இருக்கும் ஒருவர் எப்படி இன்னொரு கல்லூரிக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டார், மற்றவர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம் மட்டுமா தண்டனை என்பதெல்லாம் தொக்கி நிற்கும் கேள்விகள்


இவற்றுக்கு இடையே சதேர்லா மீது ஆராய்ச்சிக் கட்டுரையில் அறிவுத் திருட்டு (Plagiarism) குற்றச்சாட்டு ஒரு அநாமதேய புகாரின் விளைவாக முளைத்தது. இந்தப் புகார் சதேர்லா புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பின் வந்தது. முதலில் ஒரு கமிட்டி இந்த அநாமதேய புகாரை எடுத்து விசாரித்துச் சதேர்லாவின் முனைவர் பட்டத்தைத் திரும்பப் பெற பரிந்துரை செய்தது. பிறகு வேறொரு வெளியார் கமிட்டி ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையின் முகவுரையில் மட்டும் சில மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைத்து முனைவர் பட்டத்தைத் திரும்பப் பெற வேண்டியதில்லை என்றது


இப்போது இயக்குனராகி விட்ட ராஜீவு ஷுக்லா மீது நடவடிக்கை எடுக்க ..டி விதிகள் படி ஜனாதிபதி ஒப்புதல் தேவையாயிருந்தது. ஜனாதிபதி அப்துல் கலாம் மத்திய மனித வள அமைச்சர் இப்புகாரின் மீது நடவடிக்கையைப் பரிந்துரைக்கலாம் என்றார். அமைச்சரும் ..டி கான்பூர் ராஜீவ் ஷேகரை பேராசிரியர் ரேங்கில் இருந்து இறக்க அனுமதியளித்தது. இதனால் அவர் இயக்குனராக நீடிக்க இயலாமல் போனது


இந்த ஒரு வழக்கு சொல்லும் கதைகள் ஏராளம். ஒரு சாதியப் புகார் பதியப்படுகிறது, முதன்மை குற்றவாளி பதவி உயர்வே பெற்று இயக்குனராக்கிறார், அப்புறம் அந்தப் பதவியே அவருக்குக் காபந்தாகிறது, ஜனாதிபதை வரை அனுமதி பெற வேண்டியிருக்கிறது, இவற்றுக்கிடையே புகார் அளித்தவர் மீது வேறொரு புகார், அநாமதேயமாக முளைக்கிறது அந்த அநாமதேயப் புகார் விசாரணைக்கும் ஏற்கப்படுகிறது


சரி, சுப்பிரமணியம் சதேர்லா மீது அறிவுத் திருட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்தால்? (அது பற்றி இணையத்தில் சில சுட்டிகள் இருக்கின்றன). அதனாலென்ன? அதற்கும் அவர் அளித்த புகாருக்கும் என்ன சம்பந்தம். மேலும் அறிவுத் திருட்டு என்பது இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை செய்வது தான்.

இந்தியாவின் மிகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸி.என்.ஆர். ராவ் மீதே இப்படி ஒரு புகார் எழுந்து பிறகு அது கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. போலி ஆராய்ச்சி அறிவியல் இதழ்களில் வெளியான போலி ஆராய்ச்சிகளில் இந்தியர்களின் பங்கு 35%. இன்னொரு தேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் ஒரு துறையின் பேராசிரியர் மீதும் அறிவுத் திருட்டு பற்றி ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

சமீபத்திய கோவிட் சூழலால் ஆன்லைன் பரீட்சைகள் நடக்கும் போது ..டி.க்களில் பரவலாகத் திருட்டுத்தனம் நடக்கிறது என்பதை நிர்வாகிகளே ஒப்புக் கொள்கிறார்கள். இதில் வகுப்பில் முதல் நிலையில் இருக்கும் மாணவர்களும் அடக்கம்


..டி.யும் சாதியமும்


ஏப்ரல் 2021-இல் ..டி. காரக்பூரின் பேராசிரியர் சீமா சிங் பட்டியல் இன மாணவர்களுக்காக நடத்தப்படும் தயாரிப்பு வகுப்பு (Prep Class) ஜூம் நிகழ்வில் மாணவர்களை, “bastard”, என்று திட்டியது வெளி வந்தது. கோவிட் கால மன அழுத்ததால் அப்படிப் பேசிவிட்டதாகவும் வருத்தம் தெரிவிப்பதாகவும் சீமா சிங் ஒரு அறிக்கை விடுத்தார். அதற்கு மேல் வேறொன்றும் நடவடிக்க எடுத்த மாதிரி எந்தச் செய்தியும் இல்லை. 1000 முன்னாள் மாணவர்கள் ..டி.யில் நிலவும் சாதியம் குறித்தும் அந்தப் பேராசிரியையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அறிக்கை வெளியிட்டனர்


..டி.களின் பெருமைமிகு ஏற்றுமதிகளில் ஒன்று சாதியமும். அஜந்தாவின் புத்தகத்தில் சொன்னதைப் போலவே அமெரிக்காவிலும் ..டி. பட்டதாரிகள் இன்னொரு ..டி மாணவரை பணியிடத்தில் சந்திக்க நேரிட்டால் நுழைவுத் தேர்வு மதிப்பெண் கேட்டு நச்சரித்து அதை வைத்து தலித் சாதியனரை அம்பலப்படுத்துவது நடந்திருக்கிறது. இது தொடர்பாகச் சிஸ்கோ நிறுவனத்தில் ஒரு வழக்கே நடக்கிறது


..டி.க்களின் ஆகப் பெரிய சாதியம் பேராசிரியர் நியமனங்களில் தான் நடக்கிறது. இது சட்ட மீறலாகவும் நடக்கிறது என்பது மிகப் பெரிய அவலம். 2019-இல் பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது அரசே, “23 ..டி.க்களில் 6,043 ஆசிரியர் பதவிகளுக்குள் 148 SC, 21 ST, ஆசிரியர்கள்இருப்பதாகத் தெரிவித்தது. அதாவது 3%. சில கல்லூரிகளில் ஒரு ஆசிரியர் கூடப் பட்டியல் இனத்திலிருந்து இல்லை


(புகைப்படம் https://www.indiaspend.com/if-iits-had-more-dalit-professors-would-aniket-ambhore-be-alive-69867 )


சென்னை ..டி.யில் கணிதத் துறையில் நியமனம் குறித்து வசந்தா கந்தசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமே ஒப்புக்கொண்டது ..டி செய்த இரண்டு நியமனங்கள் விதிகளுக்குப் புறம்பானதென்று. விதிகளை வளைத்ததை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. வசந்தா 1997 முதல் போராடி 2016-இல் வெற்றிக் கண்டார். வசந்தாவின் ஆராய்ச்சி தரம் குறித்து விமர்சனங்கள் உண்டு. அது இங்கு முக்கியமல்ல. ..டி கரக்பூரில் நாற்பதாண்டுகளாக விதிகளுக்குப் புறம்பாக அங்கு வேலைச் செய்வோரின் பிள்ளைகளுக்குப் பிரத்யேக கோட்டா இருந்திருக்கிறது என்று தகவல் அறியும் சட்டம் வாயிலாகப் பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அம்பலப் படுத்தியது


இட ஒதுக்கீடு சட்டங்கள் மீறப் படுவது பற்றி மீண்டும் மீண்டு ..டி, ..எம் போன்ற கல்வி நிலையங்கள் சொல்லும் சால்ஜாப்பு தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லையென்பது. அந்தக் கூற்றின் உண்மையை ஆராய்வதற்கு முன் மும்பை ..டி.யில் பணியாற்றும் இந்திய அறிதல் முறைகள் துறையின் (மனித வளம்-சமூகவியல் துறையில் அடங்கும்) பேராசிரியர் ராமசுப்பிரமணியன் நியமனமான விதம் பற்றிப் பார்ப்போம்


தி இந்துவுக்கு ராமசுப்பிரமணியன் அளித்த பேட்டியில்..டி. மும்பைக்கு 2004-இல் இந்திய வானவியல் குறித்து உரையாற்ற சென்றேன். அவ்வுரைக்குப் பின் அங்கிருந்த ஆசிரியர்கள் எனக்கு ..டியில் ஆசிரியராகச் சேர விருப்பமா என்று கேட்டார்கள். என் மூலம் நம் மாணவர்களுக்கு இந்திய அறிவியல் குறித்துத் தெரிய வரும் என்றார்கள். ஒரு மாதம் கழித்து நான் சரி என்று சொன்னேன். உடனே பணியில் சேரச் சொன்னார்கள்என்றார். இவ்வளவு தான். பணியிடத்துக்கு விளம்பரமில்லை, தேர்வு கமிட்டி இல்லை, விண்ணப்பதாரர்கள் இல்லை. ஒன்றும் இல்லை. ஒரே உரை. ஏனென்றால் பேசியவர் பிராமணர், சமஸ்கிருத விற்பண்ணர் என்று பெயரெடுத்தவர். இவர் 2019-இல் ஒரு பிராமணர் கூட்டத்தில்சதுர்வர்ணம்குறித்து உரையாற்றினார்.


,,டி மும்பையில் முனைவர் பட்டப்படிப்புக்கான சேர்க்கை முறையில் நேர்முகத் தேர்வில் பிற்படுத்தப்பட்டவர்களும் பட்டியல் இனத்தவரும் பெருமளவில் வடிக்கட்டப்படுகிறார்கள் என்றுதி இந்துதகவல் அறியும் சட்டம் மூலம் கிடைத்தத் தகவல்களை வெளியிட்டது.




சென்னை ..டி.யிடம் இருந்து தகவல் பெறுவதேதி இந்துவுக்கு சவாலாக இருந்தது. பல துறைகள் தகுந்த ஆவணங்கள் இல்லையென்று கை விரித்துவிட்டார்கள். இவர்கள் தான் ஹாற்வர்டுடன் ..டி. போட்டி போடும் எனும் மகானுபவர்கள். சென்னை ..டி.யில் கிடைத்த தகவல் அடிப்படையில், மும்பை போலல்லாது, பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு ஏற்ற வகையில் முனைவர் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் ஆனால் பட்டியல் இனத்தவரின் கதி அதே தான்


பாஸ்கர் ராமமூர்த்தியும் வேளச்சேரி கேட் விவகாரமும்

பாஸ்கர் ராமமூர்த்திச் சென்னை ..டி இயக்குனராக 2011-இல் பதவியேற்றார். அவர் நியமனம் குறித்த வழக்கில் 2017-இல் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் அவர் நியமனத்தை ஏற்ற போதிலும் நியமன முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றது. உண்மையில் நீதிமன்றங்கள் மீண்டும், மீண்டும் ..டிக்களை விமர்சித்திருக்கின்றன. இந்த வழக்குகளின் தொகுப்பே நமக்கு இக்கல்வி நிலையங்கள் பற்றி ஒரு சித்திரத்தை அளிக்கின்றன


From Huffington Post


1959-இல் சென்னை ..டி நிறுவப்பட்ட போது அக்கல்லூரிக்காக வேளச்சேரி, தரமணி ஆகிய இடங்களை ஒட்டி 76 ஏக்கர் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவை ஆதி திராவிடர்கள் அதிகம் வாழும் பகுதி. நிலம் கையகப் படுத்தப்பட்ட போது அவ்விடங்களின் சர்பாஞ்சுகளோடு கல்லூரியும், அன்றைய முதல்வர் காமராஜரும் கல்லூரி வளாகத்துக்குள் அமையவிருந்த பள்ளியில் அம்மக்களின் பிள்ளைகள் படிக்கவும், அவர்களின் கோயிலான பீலியம்மன் கோவிலுக்குச் சென்று வர வழியும் இருக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது (ஒப்பந்தம் வாய்மொழியா இல்லை சட்டப் பூர்வமான படியா என்று தெரியவில்லை). 


திடீரென்று 2020-இல் பாஸ்கர் ராமமூர்த்தி வேளச்சேரிக்குச் செல்லும் கல்லூரி வாசலை மூடிவிட்டார். வேளச்சேரியில் இருந்து கல்லூரிக்கும் அதன் வழியாக மற்ற இடங்களுக்குச் செல்வோர், குழந்தைகள் உட்படச் சுற்றி வளைத்து மூன்று கிலோமீட்டர் அதிகம் பயணிக்க வேண்டியிருந்தது. வேளச்சேரியில் இருந்து மாணவிகளுக்குத் தொல்லை இருந்ததாகக் கல்லூரி சொன்னது. ஆனால், கல்லூரியைச் சேர்ந்த 1500 மாணவர்கள், அநேக மாணவியரும் அடக்கம், வேளச்சேரி மக்களுக்கு ஆதரவாகத் திரண்டனர்


..டி.யினர் அடிக்கடி தங்களை அமெரிக்க ஐவி-லீக் கல்லூரிகளோடு ஒப்பிட்டுக் கொள்வர் ஆனால் இந்த மாதிரி விஷயத்தில் அப்படிச் செய்ய மாட்டார்கள். 1968-இல் நியூ யார்க்கில் இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம் கறுப்பு இனத்தவர் அதிகம் வாழும் ஹார்லம் பகுதியை ஒட்டி கல்லூரியை விரிவு படுத்த திட்டமிட்ட போது அதற்காகவும் வேறு காரணங்களுக்காகவும் கலவரமே வெடித்தது. அதன் பின் கல்லூரி தான் வசிக்கும் பகுதியினரின் ஒப்புதலை பெறவும் பகுதி மக்களுக்கென்று உதவிகள் செய்யவும் முன் வந்தது. 2009-இல் இன்னொரு விரிவாக்கத் திட்டத்தின் போது கொலம்பியா பல்கலைக் கழகம் சுற்று வட்டாரத்தில் $20 மில்லியன் மதிப்புள்ள உதவிகளும், கல்லூரியின் சில வசதிகளைப் பொது மக்கள் உபயோகிக்கவும் ஒப்புக் கொண்டது. கல்லூரி விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் வீடு உரிமையாளர்களுக்கு என்று ஒரு நிதியும் உருவாக்கப்பட்டது


..டி வளாகத்துக்குள் இருக்கும் பள்ளிகளில் வேளச்சேரி பகுதி குழந்தைகள் 500 படிக்கிறார்கள். அது பற்றி அச்சூழலை அறிந்த நண்பர் சொன்னது, “குழந்தைகளைச் சேர்ப்பதில் அடிக்கடி சச்சரவுகள் வரும்”. அதே போல் சுற்று வட்டாரத்தினர் வேலைக்கு எடுத்த போது பெரும்பாலும் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளே அளிக்கப்பட்டன என்றார்


..டி.களால் சமூகத்திற்கு நன்மையுண்டா என்கிற கேள்வி இப்போது எழுகிறது


..டி-களும் சமூகமும்

எந்த பொறியாளர்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வித்திடுவார்கள் என்று நேரு நம்பினாரோ அவர்கள் 70-கள் தொடங்கி 90-களின் பிற்பகுதி வரை பெரும் அளவில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்குப் படிக்கச் சென்று அங்கேயே குடியேறினர். இந்தியர்களின் வரிப்பணத்தில் மிகச் சொற்பமாகச் செலவழித்துப் படித்தவர்கள், அநேகர் உயர் சாதியினர், இந்தியாவுக்கு எவ்வகையிலும் பயன்படவில்லை. கடந்த 20 வருடங்களாக இந்நிலை மாறியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆயினும் பெரும்பாலோர் தனியார் துறையில் பல லட்சம் வருட சம்பளம் தரும் வேலைக்குத் தான் செல்கிறார்கள். தமிழ் நாட்டு அரசுப் பொதுப் பணித் துறையில் எத்தனை சென்னை ..டி மாணவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் ஆச்சர்யமிராது


வெளிநாடு செல்வதோ, தனியார் துறைக்கு வேலைக்குச் செல்வதோ தவறேயல்ல. ஆனால் இவ்வளவு வருமானம் ஈட்டும் திறமையுடையோர் தகுந்த விலைக் கொடுத்து படிக்க வேண்டும். கல்விக் கடன்கள் எளிதாக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் மருத்துவ உயர் படிப்புக்குப் பிணைப் பணம் செலுத்த வேண்டும். சில லட்சங்கள். ஆனால் அவர்களுக்கில்லாத சம்பாதிக்கும் திறன் இந்தப் பொறியாளர்களுக்குண்டு


சமீப காலமாக .,டி.கள் சமூகத் தொண்டில் ஈடுபடுவதைச் சிலர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அவற்றில் மாணவ அணிகள் தாமே முன் வந்து செய்யும் பணிகளும் அடக்கம். ..டி.கள் கொலம்பியா மாதிரி தங்கள் செல்வாக்கிற்கு ஏற்ற அளவில் சமூகப் பங்களிப்பு செய்கிறார்களா என்பது கேள்விக் குறி


எல்லா நிறுவனங்களும் இப்போது சி.எஸ்.ஆர் என்கிற “Corporate Social Responsibillity” துறை அமைத்துச் சமூகப் பணிக்கென்று செலவழிக்க வேண்டுமென்பது சட்டம். இத்துறையோடு சம்பந்தப்பட்ட இரு வேறு நண்பர்கள் சொன்னது, இத்துறைகள் பிராமணர்களால் நிறைந்தவை என்று. தலித் வெளியீடு ஒன்று சி.எஸ்.ஆர் பற்றிய ஆய்வில் சொல்வது அத்துறைகளில் தலித்துகளின் பங்களிப்பே இல்லாததால் சாதியத்தை எதிர்க்கும் அல்லது ஒடுக்கப்பட்டோருக்கு உதவியான பணிகள் மேற்கொள்ளப் படுவதில்லை என்று. சி.எஸ்.ஆருக்கென்று இந்திய நிறுவனங்கள் செலவிட்ட தொகை ரூ.6,518 கோடி


..டிகள் தொழில் முனைவோருக்கு முதலீடு அளித்துத் தொழில் தொடங்கவும், புதிய தொழில் நுட்பம் வளர்க்கவும் உதவும் என்கிறார்கள். இது தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் மத்திய அரசு தரும் பொருளுதவி, அதுவும் 16 ..டி, 14 ..எம், 20 என்..டி ஆகியவற்றுக்கு மட்டும். மீண்டும் இது மக்களின் வரிப்பணம் தான். இந்தக் கல்வி நிலையங்களில் படிப்பவர்கள் மட்டும் தான் மாணவர்களா? எத்தனையோ தனியார் மற்றும் மாநில அரசுகள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளும் தரமானவை இருக்கின்றனவே. மேலும் அவை பெரு நகரங்களில் மட்டும் இல்லாது மிகப் பரவலாக இருக்கின்றன. அவற்றுக்கு நிதி அளித்தால் என்ன


உலகத் தரப் பட்டியலில் இது வரை ..டி.களின் இடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை என்பதே உண்மை. கண்டு பிடிப்புகள், புத்தகங்கள், ஆய்வுகள் என்று எந்த அலகின் படி பார்த்தாலும் ..டிகள் அதன் பிம்பத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத அளவில் பங்களிப்பில் பின் தங்கித் தான் இருக்கின்றன. உடனே உலக அரங்கில் உயர் நிலையில் இருக்கும் சுந்தர் பிச்சைப் போன்றோரைக் கைக் காட்டுவார்கள். ஒன்று, சுந்தர் பிச்சைகள் உண்மையில் சொற்பமே. இரண்டு, சுந்தர் பிச்சை ..டி. தயாரிப்பு என்பதை விட அமெரிக்கத் தயாரிப்பு என்பதே சரி.

சென்ற வருடம் ,.டி இயக்குனர்களும் வேறு சிலரும் ஆசிரியர் நியமனத்தில் சாதிவாரியான இட ஒதுக்கீடு இருக்கக் கூடாதென்று கூட்டறிக்கை சமர்பித்திருக்கிறார்கள். இது வெட்கக் கேடு. அமெரிக்க நீதிமன்றங்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளை எடுத்துக் கொள்ளும் போது மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் உயர் பல்கலைக் கழகங்களும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாதிடுவர். நம்மூரில் நிலமை தலை கீழ்


இவ்விடத்தில் ஒன்றை தெளிவாகச் சொல்கிறேன். எனக்கு இட ஒதுக்கீடு பற்றி, குறிப்பாகத் தமிழ் நாட்டில் நிலவும் இட ஒதுக்கீடு பற்றி, தீவிர விமர்சனமுண்டு. என் நிலைப்பாடு தனிப்பட்டது. இந்த ..டி-க்கள் மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறியிருக்கின்றன. மேலும் மொத்தமாக இட ஒதுக்கீடே கூடாதென்பது என் நிலைப்பாடல்ல. இன்னொன்று, இந்த “islands of excellence” என்பது அடிப்படையிலேயே ஜனநாயக விரோதமானது. அவை ஒழிக்கப்பட வேண்டும்


இந்திய அரசின் வருடாந்திர பட்ஜெட்டில் 26.96% ..டிகளுக்கும், 17.99% என்..டி.களுக்கும், ஏனைய நூற்றுக் கணக்கான பொறியியல் கல்லூரிகளுக்கு 48.9% ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ..டிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதி சமைப்பவர்களுக்கானது, அவர்களே இந்தியாவின் வல்லரசு கனவை நினைவாக்குவார்கள் என்கிற பிம்பத்துக்கு மற்ற கல்லூரி மாணவர்களும் சாதாரணர்களும் தொடர்ந்து விலைக் கொடுக்கிறார்கள். இந்தளவுக்கு இன்னொருவர் முதுகின் மீதேறி சவாரி செய்து தங்களை ஏதோ விண்ணில் இருந்து வாழ்விக்க வந்த தேவதூதர்கள் என்று எண்ணிக் கொள்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது


ஐ.ஐ.எம்-இல் சாதியம்:


ஐ.ஐ.டி.யை ஒத்த இன்னொரு ஸ்தாபனம் ஐ.ஐ.எம், இது மேலாண்மைக்கான கல்வி நிலையம். இங்கு 20 ஐ.ஐ.எம்.களில் 12-இல் பட்டியலினத்தவர் யாரும் ஆசிரியர்கள் இல்லையென்று மனித வள அமைச்சர் பொக்ரியால் பாராளுமன்றாத்தில் தெரிவித்துள்ளார். 


Source: The Quint 
தி க்விண்ட் பத்திரிக்கைச் சொல்கிறது இதற்கு முக்கியக் காரணம் விஞ்ஞானம், தொழில் நுட்பம் சார்ந்த பதவிகளில் இந்நிறுவனங்கள் இட ஒதுக்கீடு கடைப் பிடிக்கத் தேவையில்லை என்று அனுமதியளித்த 1975 ஆணை. அப்படி ஒரு ஆணையை கேட்டுப் பெற்றது ஐ.ஐ.எம் அகமதாபாத் மட்டும். ஆனால் மற்ற ஸ்தாபனங்கள் அது தங்களுக்கு பொருந்தும் என்று தாமாகவே முடிவெடுத்தன.


2019-இல் இந்த ஸ்தாபனங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் நியமனத்தில் காட்டும் போக்கினை மாற்ற மத்திய அரசு 2019-இல் ஆசிரியர் வேலையில் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்த போது அந்த 1975 ஆணையைச் சுட்டிக் காட்டி ஐ.ஐ.எம்.கள் தங்களுக்கு விலக்குக் கோரின. ஹார்வர்ட் கூட இதை செய்யாது. 2019-இல் 6 மாத காலத்தில் இட ஒதுக்கீடுக்குட்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப யு.ஜி.ஸி இந்த ஸ்தாபனங்களுக்கு ஆணையிட்டது. இல்லையென்றால் யு.ஜி.ஸி அளிக்கும் நல்கைகளை நிறுத்த நேரிடும் என்று எச்சரித்தது.


ஒன்று தெளிவாகிறது. அசுர பலம் கொண்ட மத்திய அரசும், நீதி மன்றங்களும் இந்த கல்வி நிறுவனங்களை மீண்டும், மீண்டும், மீண்டும் எச்சரிக்கின்றன. சட்டத்தை மீறும் இவர்களுக்கு அதிகப் பட்ச தண்டனை எச்சரிக்கைகள் மட்டுமே. 


Source : The Hindu 


இதில் சுவாரசியமான முரன் ஒன்றுள்ளது புதிதாக நிறுவப்பட்ட ஐ.ஐ.எம்.கள் ஆதி காலத்து ஐ.ஐ.எம்.களை விட கொஞ்சமேனும் இட ஒதுக்கீட்டை கடைப் பிடித்துள்ளனர். ஐ.ஐ.எம்-களுக்குள்ளாகவே ஒரு சாதியம் நிலவுகிறது.


பிராமணத் துவேஷமும் சென்னை ..டி சர்ச்சைகளும் 


சென்னை ..டி மாணவி ஃபாத்திமா லத்தீப் 2019-இல் தற்கொலைச் செய்து கொண்ட போது அவர் விட்டுச் சென்ற குறிப்பு மூன்று பேராசிரியர்களைக் குற்றம் சாட்டியது. அதில் ஒருவர் பிராமணர். உடனே இணையம் தீப்பற்றியது. அவர் புகைப்படம் காட்டுத் தீயெனப் பரவியது. அவர் இஸ்லாமிய வெறுப்பாளர் என்று சொல்லப்பட்டது. அதற்கு யாரும் எந்த ஆதாரமும் காட்டவில்லை. ஒரு மாணவி இறந்த தருணத்தில் ஆதாரம் கேட்டதே தவறு என்றார் உற்ற நண்பர். அந்தச் சமயம் ஒரு கட்டுரை அதிகம் பகிரப்பட்டது, “ஆஹா இதல்லவோ பத்திரிக்கையாளருக்கு மாதிரிஎன்று பாராட்டுடன். ஆனால் அக்கட்டுரையில் அநேக ஓட்டைகள். விரிவாகவே கட்டுடைத்து எழுதினேன் (காண்க https://www.facebook.com/arvindkannaiyan/posts/10215024167817241) அப்போது பலர் முகம் சுளித்தார்கள். வேறு பலர்ஆகா உண்மைஎன்று பதிவைப் பாராட்டினார்கள். என் நிலைப்பாடு எப்போதும் உண்மைகள் வரட்டும் என்பதே


இன்று விபின் வீட்டில் புகாரிலும் ..டி விசாரிக்கட்டும் என்றே சொல்வேன். நண்பர் ஒருவர் விபினையும் விசாரிக்க வேண்டும் என்ற போதுபுகாரை விசாரிப்பது வேறு, புகார் அளித்தவரை விசாரிப்பது வேறுஎன்றேன். “இல்லை தமிழ் நாட்டில் சென்னை ..டி.யை பிராமணக் கல்வி நிலையமாகப் பாவித்துத் தமிழகத்துக்கே உரிய பிராமணத் துவேஷத்தோடு அழிக்கப் பார்க்கிறார்கள்என்றார் நண்பர்


பிராமண ஆதிக்கம் சென்னை ..டி-யில் இருக்கிறதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சாதியம் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அவற்றை விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் உட்படுத்துவது தகும். அதே சமயம் எனக்கு ஒப்புதலில்லாதது உடனேஎல்லாப் பிராமணர்களும் இப்படித்தான்என்பதும் சாதிய வேற்றுமையெல்லாம் பிராமணர்கள் மட்டுமே செய்கிறார்கள் என்பது போல் பேசுவதும்


உண்மையில் பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை தமிழகத்தில் சாதியம் இருக்கிறது. ஒரு தமிழ் எழுத்தாளர் தன்னை வைத்துக் கொண்டே சக ஆசிரியர்கள், “ஹரிஜன் தான் ஆனாலும் திறமையானவர்என்று பேசியதை எழுதியிருக்கிறார். தமிழ் நாட்டுப் பள்ளியில் தான் என்பதுகளில் ஒரு ஆறு வயது தலித் சிறுமி, தனம், பள்ளிக் குழாயில் தண்ணீர் குடித்தார் என்பதற்காக ஆசிரியர் ஓங்கி அறைந்ததில் கண் பார்வை பாதிக்கப்பட்டது. சமீப காலமாகத் தமிழகப் பள்ளிகளில் சாதியம் தலை விரித்தாடுகிறது. ஆதிக்கச் சாதி குழந்தை ஒரு தலித் குழந்தையின் முதுகில் பிளேடால் கீறியது சமீபத்தில் பெரும் அதிர்ச்சியளித்த சம்பவம். அநேக கல்லூரிகளில் ஆதி திராவிட மாணவர்கள் உதவித் தொகைப் பெறுவதும் ஆதி திராவிட நல விடுதிகளில் தங்குவதும் அவர்களை மற்றவர்களுக்கு அடையாளப்படுத்துவதோடு எள்ளலுக்கு ஆளாக்குவது நிதர்சனம்


செய்ய வேண்டியன 


..டிகள், ஐ.ஐ.எம்.கள் மீது நாடு தழுவிய விசாரணை வேண்டும். அவற்றின் செயல் பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும், வெளிப்படைத் தன்மை எல்லாச் செயலிலும் வலியுறுத்தப்பட வேண்டும். சாதாரணக் குடிமகனின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளுக்கு வசதிகள் செய்து கொடுப்பது ..டிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை விட முன்னிறுத்த பட வேண்டும். போதும் கல்வியில் இரட்டை டம்ப்ளர் முறை


பள்ளி முதல் கல்லூரி வரை எல்லா வகையான சாதியமும் களையப்பட வேண்டும். தலித் மாணவனோ, பிராமண மாணவனோ கல்வி நிலையத்தில் சாதிய எள்ளலுக்கு எள் முனையளவும் இடம் இருக்கக் கூடாது. அதே போல் பெண்கள், ஓரின சேர்க்கையாளர்கள்  யாராயினும் பாதுகாப்பான சூழல் இருக்க வேண்டும். குறைகள் இருப்பின் சுதந்திரமாகப் புகார் அளிக்கும் முறைகள் வேண்டும். புகார் அளிப்பவர் மீது பழி வாங்கும் நடவடிக்கைகள் கூடாது


நடக்குமா என்று தெரியாது


பி.கு: இக்கட்டுரை ஜூலை 7 "சமயம்" இணைய இதழில் வெளிவந்தது. டி.ஐ.அரவிந்தனுக்கு நன்றி https://tamil.samayam.com/latest-news/state-news/vipin-veetil-death-has-brought-the-casteism-to-the-fore-in-madras-iit/articleshow/84198332.cms?fbclid=IwAR08MthOcJcQZBq61lm-e8ZhPaeVS99LX1HcSqbUj0x9tl7dTNnXm8bS75w

References

  1. https://theprint.in/india/iit-madras-professor-resigns-alleging-multiple-instances-of-caste-based-discrimination/688627/  
  2. https://theprint.in/india/education/iits-should-be-exempt-from-caste-based-reservations-in-faculty-hirings-panel-tells-govt/567706/  
  3. https://www.hindustantimes.com/cities/others/rti-data-iits-not-following-reservation-rules-for-faculty-101624994117807.html 
  4. https://thewire.in/caste/iit-alumni-kharagpur-professor-caste-sc-st-students   
  5. https://www.news18.com/news/india/govt-gives-nod-to-issue-show-cause-notice-to-iit-dhanbad-director-in-caste-discrimination-case-2309467.html 
  6. https://www.telegraphindia.com/india/iit-go-ahead-for-demotion-over-caste-bias/cid/1705224 
  7. https://indianexpress.com/article/cities/lucknow/iit-kanpur-caste-harassment-faculty-forum-passes-resolution-to-divest-deputy-director-of-duties-5458299/  
  8. https://www.indiaspend.com/if-iits-had-more-dalit-professors-would-aniket-ambhore-be-alive-69867 
  9. https://timesofindia.indiatimes.com/city/chennai/madras-hc-upholds-appointment-of-bhaskar-ramamurthi-as-iit-m-director/articleshow/58964389.cms  
  10. https://www.thehindu.com/sci-tech/science/iisc-plagiarism-row-hots-up/article2917125.ece 
  11. https://theprint.in/india/education/plagiarism-data-manipulation-hurting-indias-research-govt-panel-raises-alarm/260918/ 
  12. https://www.nature.com/articles/nature.2012.10102
  13. https://www.thenewsminute.com/article/do-indian-educational-institutes-take-plagiarism-seriously-educationists-weigh-72790
  14. https://www.financialexpress.com/education-2/iits-find-ways-to-curb-cheating-in-online-exam/2139155/ 
  15. https://www.ndtv.com/opinion/at-iit-with-online-exams-teachers-confront-high-tech-cheating-2351311 
  16. https://www.dnaindia.com/india/report-iit-madras-director-appears-before-national-commission-for-scheduled-castes-2093570 
  17. https://scroll.in/article/905692/untouchability-at-iit-madras-segregation-of-dining-hall-for-pure-vegetarian-students-sparks-row 
  18. https://science.thewire.in/education/seema-singh-iit-kharagpur-students-marginalised-caste-backgrounds-higher-education-casteism/ 
  19. https://www.bloomberg.com/news/features/2021-03-11/how-big-tech-is-importing-india-s-caste-legacy-to-silicon-valley 
  20. https://www.hindustantimes.com/delhi/iit-kharagpur-kept-aside-illegal-quota-for-staff/story-k3ujl59h9JhdUDi5DC6RjP.html 
  21. https://www.deccanchronicle.com/nation/in-other-news/230816/madras-hc-slams-iit-ms-gross-irregularities-in-selection-of-professors.html 
  22. https://www.thehindu.com/features/friday-review/interview-with-prof-ramasubramanian/article6886634.ece 
  23. https://thewire.in/education/iim-directors-diversity-problem 
  24. https://thewire.in/education/less-than-3-of-all-faculty-members-at-iits-are-sc-st 
  25. https://www.thehindu.com/news/cities/chennai/phd-entry-to-iit-madras-is-harder-for-students-from-marginalised-communities/article33830776.ece 
  26. https://www.thehindu.com/news/national/phd-entry-in-iits-tougher-for-students-from-marginalised-communities/article33824475.ece 
  27. https://www.thehindu.com/news/national/higher-studies-and-the-marginalised-scheduled-tribe-seats-for-phd-programmes-in-iit-bombay-remain-unfilled/article33835735.ece 
  28. https://www.thehindu.com/news/national/with-startup-india-research-parks-to-bloom/article7793560.ece 
  29. https://www.facebook.com/arvindkannaiyan/posts/10215007163672148 
  30. https://www.facebook.com/arvindkannaiyan/posts/10215024167817241 
  31. https://www.facebook.com/arvindkannaiyan/posts/10214249986023180
  32. https://www.huffpost.com/archive/in/entry/iit-madras-casteism-gate-dalit-community_in_5e380cb1c5b611ac94d86d64 
  33. https://www.thehindu.com/news/cities/chennai/mp-meets-iit-m-director-over-the-closure-of-gate/article30437589.ece
  34. https://frontline.thehindu.com/other/advertorial/article30224875.ece
  35. https://www.thequint.com/news/india/iit-iim-sc-st-representation-missing-lack-of-caste-diversity
  36. https://www.thehindu.com/education/93-of-st-professor-positions-at-central-universities-80-of-st-posts-at-iims-unfilled/article34076556.ece
  37. “The Caste of Merit: Engineering Education in India” — Ajantha Subramanian