Tuesday, May 23, 2017

நேருவின் வாழ்வில் பெண்கள்: தொடரும் சர்ச்சைகளும் உண்மைகளும்.

ஜவஹர்லால் நேருவின் காதல்கள் மற்றும் அவரின் நிர்வாகத் திறன் குறித்து இன்றும் சர்ச்சைகள் தொடர்கின்றன. என் கடந்த கட்டுரைக்குப் பதிலளித்த ஜெயமோகன் அவை இரண்டு குறித்தும் பல வருடங்களாகப் பொது வெளியில் சொல்லப் படும் சர்ச்சைகளைத் தன் விமர்சனமாக முன் வைத்தார். உண்மை என்ன?

முதலில் ஒரு விளக்கம். அதி தீவிர இந்துத்துவர்களுக்கு நேருவின் பெயரே ஓர் ஒவ்வாமையைக் கொடுக்கும் அவரின் மதச் சார்பின்மை கொள்கையினால். ஜெயமோகன் பல காலமாக நேருவின் மீது மரியாதையும் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார் ஆனால் அவரின் விமர்சனத்தின் வேர் வேறு. நேரு இந்திய ஞான மரபை உதாசீனப்படுத்தி மேற்கின் விஞ்ஞானப் போக்கில் மையல் கொண்டு நம் பாரம்பரிய ஞானத்தின் தொகை நீர்த்து மரியாதை இழக்கத் துணைப் புரிந்தார் என்பது ஜெயமோகன் அடிக்கடி முன் வைப்பது, என் புரிதலில் பிழை இருக்கலாம். இந்துத்துவர்களிடம் பேச இயலாது. ஜெயமோகன் எதிர் தரப்போடு, ஒப்புக் கொள்கிறாரோ இல்லையோ, உரையாடவாவது செய்வார். அவரின் பதிலுக்கு நான் எழுதிய சிறு குறிப்பை அவர் தளத்தில் வெளியிட்டார். ஆயினும் அதைப் பற்றி விரிவாக எழுதினால் என்ன என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு.

இப்பதிவை எழுத பல புத்தகங்களையும், ஜெயமோகனின் பதிவுகள் உட்பட, ஆராய்ந்த போது காந்தியின் பிரம்மசர்ய சோதனைகள் குறித்தும் விரிவாகப் படித்தேன். காந்தியின் பிரம்மசர்ய சோதனைகள் பற்றிய ஜெயமோகனின் வாதங்களைப் பின் தொடர்ந்த போது விடுதலை இயக்கம் முகிழ்ந்த காலத்தில் இந்தியாவில் ஒரு பாலியல் புரட்சியும் நடந்தது என்றே சொல்லலாம். சமூகத்தில் பெண்களின் இடம், ஆண்-பெண் உறவு, பெண்களின் உரிமைகள் எல்லாம் மிகப் பெரிய மாற்றங்கள் கண்ட நேரம் அது. இது இன்னும் முழுமையாக ஆராயப் பட வேண்டிய ஒன்று.

செக்ஸ் பற்றி நேரு:

நேருவின் சுய-சரிதையில், அவர் மனைவிக்கு அர்ப்பனிக்கப் பட்டது, செக்ஸ் பற்றிய காந்தியின் பார்வைக்கும் தன் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகச் சொல்கிறார். காந்தி சந்ததி உருவாக்கும் ஒன்றுக்காக மட்டுமே ஆணும்-பெண்ணும் இணையலாம் இல்லையென்றால் அது பாவச் செயல் என்றும் மனிதன் தன் மிருக உணர்ச்சிக்கு அடிமையாகும் தருணம் என்றும் கூறியதை நேருவால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. மொழிப்பெயர்க்க அவகாசமில்லாததால் அந்தப் பகுதிகள் மட்டும் இங்கே ஆங்கிலத்தில்.

Nehru quotes Gandhi, "No, I must declare with all the  power I can command that sensual attraction, even between husband and wife, is unnatural".

Nehru responds in a confessional lengthy response:
"In these days of the Oedipus complex and Freud and the spread of psychoanalytical ideas this emphatic statement of belief sounds strange and distant.....Sexual restraint is certainly desirable, but i doubt if Gandhi's doctrine is likely to result in this to any widespread extent....I do not know why he is so obsessed by this problem of sex, important as it is. For him it is a 'soot or whitewash' question, there are no intermediate shades. At either end he takes up an extreme position which seems to me most abnormal and unnatural. Perhaps this is a reaction from the deluge of literature on sexology that is descending on using these days. I presume I am a normal individual and sex has played its part in my life, but it has not obsessed me or diverted me from my other activities. It has been a subordinate part"
He finishes that chapter with these words, "I had an interview in gaol with Kamala. That cheered me up tremendously, and my feeling of isolation left me. Whatever happened, I felt we had one another". Nehru would return to the topic of his relationship with Kamala in a more touching manner in 'Discovery of India' as he recounts what he felt accompanying an urn containing the ashes of Kamala from Switzerland. Nehru's dalliances with women were all after he became a widower, unlike Gandhi or Radhakrishnan.

நேருவும் பெண்களும்:

எட்வினா

நேருவின் மிகப் பிரபலமான காதலி எட்வினா மௌண்ட்பேட்டன். இன்று நம் சினிமாவிலும், மஞ்சள் பத்திரிக்கைகளிலும், நாலாந்தரக் கதைகளிலும் மிகவும் மலினப்பட்டுப் போய்விட்ட வார்த்தைகள் காமமும் காதலும். 'நேருவின் காதலி எட்வினா' என்று எழுதுவது ரசக் குறைவாக இருக்கிறது. அதற்காக 'நேருவின் சினேகிதி எட்வினா' என்று எழுதினால் அது இடக்கரடக்கல் கிடையாது மாறாகப் பச்சைப் பொய். It sure sounds nicer to say 'Edwina was Nehru's love'.

நேரு-எட்வினா உறவு பற்றி ஓரளவு நேர்மையுடன் கிசு கிசு தன்மையில்லாமல் எழுதியது எம்.ஜே.அக்பர். அக்பரின் "நேரு" எனும் வாழ்க்கை வரலாறு 1988-இல் வெளிவந்த போது இப்பகுதி சர்ச்சையானது நினைவில் இருக்கிறது. அப்போது நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன். நேரு வைஸ்ராய் மாளிகையில் நீச்சலடிக்கப் போவார். வேவலின் மனைவியும் நேருவும் நட்புடன் இருந்தார்கள். பின்னர் மௌண்ட்பேட்டன் வைஸ்ராய் ஆன போது எட்வினா நேருவோடு நீச்சலுக்குச் சேர்ந்தது புரளியானது. நேருவும் எட்வினாவும் கட்டித் தழுவிக் கொண்டதை நேரில் பார்க்க நேர்ந்த, பின்னாளில் டாடா குழுமத்தின் தலைவரான, ருஸ்ஸி மோடி அதை அக்பரிடம் சொல்லியுள்ளார்.

லண்டன் செல்லும் போதெல்லாம் எட்வினாவைக் காண நேரு செல்வதுண்டு. ஒரு முறை நள்ளிரவில் சென்று எட்வினா வீட்டுக் கதவை நேரு தட்டும் போது அருகில் அவரை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த ஒரு புகைப்படக் காரர் அதைப் படம் பிடித்து அடுத்த நாள் லண்டன் செய்தித் தாள்களில் வெளியிட்டார். நேருவை அருகில் இருந்து கவனிக்கும் பொறுப்பு அப்போது இந்தியத் தூதரகத்தில் வேலைப் பார்த்த குஷ்வந்த் சிங்குக்கு இருந்தது. இப்படி நேருவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் நிலை வராமல் குஷ்வந் தவறிவிட்டார் அதனால் நேரு தொல்லைக் கொடுப்பார் என்று குஷ்வந்தை அவர் உயரதிகாரி மிரட்டினாராம். ஆனால் அப்படி எதையும் நேரு செய்யாததோடு அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று குஷ்வந்த் எழுதியதாக நினைவு.

நேருவிடம் பல பெண்கள் மயங்கினர். அமெரிக்க டைம் பத்திரிக்கை 1942-இல் வெளியிட்ட நேரு பற்றிய அட்டைக் கட்டுரையில் 52-வயதிலும் வசீகரமாகத் தோன்றும் நேருவை மணமுடிக்க 6 பெண்கள் காத்திருப்பதாக எழுதியது. (நேரு டைம் பத்திரிக்கையில் 7 முறை அட்டையில் இடம் பெற்றார். பட்டேல் ஒரு முறை).

எட்வினாவோடு நேருவுக்கு இருந்த உறவு மௌண்ட்பேட்டனை இந்தியாவின் பக்கம் தள்ளியதோடு பாகிஸ்தானை வஞ்சிக்கத் தூண்டியது என்று கிசு கிசு பிரச்சாரத்தைத் தொடங்கியவர் ஜின்னா என்கிறார் எம்.ஜே. அக்பர். அதில் சில காங்கிரசாரும் சேர்ந்துக் கொண்டனர். அக்பரும் மற்ற ஆய்வாளர்களும் இதில் எந்த உண்மையும் இருப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை.

ஆங்கிலேய அரசாங்கம் மிகப் பெரிய தொகுதிகளாக 12-தொகுதிகள் பிரிவினைக்கு முன்பான அனைத்து ஆவணங்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. எல்லாப் பரிவர்த்தனைகளும் வெளிப்படையாகவே நடந்தன. தலையனை மந்திரம் என்றெல்லாம் பேசுவது வரலாறு அறியாத அல்லது வன்மம் நிறைந்த பேச்சு. (இதைப் பொதுவில் சொல்கிறேன்). அத்தொகுதியில் ஒன்றை சாம்பிளுக்கு வாங்கிப் புரட்டினேன். அசர வைக்கும் ஆவணத் தொகுப்பு. கே.எம். பணிக்கர் அந்த 12- தொகுதிகளையும் சாராம்சப் படுத்தியிருக்கிறார்.

வாழ்க்கை இலக்கியத்தை விட ஆராய்ச்சிகள் நிறைந்தது. 'யாருடனும் உறவு வைத்துக் கொள் ஆனால் என் மனைவியாக இரு வெளிப் பார்வைக்கு' என்ற லேடி சாட்டர்லியின் காதல் எட்வினா மௌண்ட்பேட்டன் வாழ்வில் கிட்டத்தட்ட உண்மை. மௌண்ட்பேட்டன்களின் மண வாழ்வு சிக்கல்களும் இடைவெளிகளும் நிறைந்தது. நேரு எட்வினாவுக்கு ஓர் மகிழ்ச்சியைக் கொடுத்தார் என்பதையும் அவர்கள் இருவரின் நெருக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று மௌண்ட்பேட்டன் கூறியதாக அவர் வரலாற்றாஇ எழுதியவர்கள் சொல்கிறார்கள். இங்கே 'நெருக்கம்' என்பது தோழமைக்கும் காமம் சார்ந்த இடைவெளிக்கும் இடையே ஊசலாடும் அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. "They really dote on each other in the nicest way, Pammy (Mountbatten's daughter) and I are doing everything we can to be tactful and of help" என்று மௌண்ட்பேட்டன் தன் இன்னொரு மகளுக்கு எழுதினாராம்.

நேரு-எட்வினா புகைப்படங்களில் மிகவும் பிரசித்தமானது, நேரு, எட்வினா, மௌண்ட்பேட்டன் சேர்ந்திருக்கும் இந்தப் போட்டோ. இதில் மௌண்ட்பேட்டன் எங்கோ நோக்கியிருக்க ஒரு சிறூவனின் குதூகலத்தோடு சிரித்துக் கொண்டே எட்வினாவைப் பார்த்தப்படி இருக்கிறார் நேரு.



டண்ஸல்மேன் அதிகம் அறியாத இன்னொரு புகைப்படம் பற்றி ஒரு பேட்டியில் சொன்னதை இணையத்தில் தேடிய போது கிடைத்தது இது. ஒரு மலை வாசஸ்தலத்திற்குச் நேரு, எட்வினா, மௌண்ட்பேட்டன் சென்ற போது ஒரு புகைப்படம் அருகருகே நடக்கும் நேருவையும்-எட்வினாவையும் ஒரு சிறந்த தருணத்தில் காண்பிக்கிறது.



நேரு பற்றிய அவதூறுகளுக்கு இன்று முக்கிய ஆதாரம் அபுல் கலாம் ஆஸாத்தின் தன் வரலாறு. ஆஸாத் தன் புத்தகத்தின் முப்பது பக்கங்கள் அரை நூற்றாண்டு கழித்தே வெளியிட வேண்டும் என்று மறைத்து வைத்தார். அதில் ஒன்று மௌண்ட்பேட்டன் - எட்வினா வருகைக்கு முன் பிரிவினையை எதிர்த்த நேரு அவர்களின் வருகைக்குப் பின் மனம் மாறியது ஏன் என்று பூடகமாகக் கேள்வியை எழுப்பி இருப்பார். பிரிவினையால் மிக வேதனையுற்றவர் ஆஸாத் ஆனால் காந்தி, பட்டேல், நேரு என்று எல்லோருமே ஆரம்பத்தில் பிரிவினையை எதிர்த்துப் பின் வேறு வழியே இல்லை என்பதால் ஏற்றனர். ஆஸாத் தன் புத்தகத்தை நேருவுக்குத் தான் அர்ப்பனித்தார். மேலும் பட்டேலைவிட நேருவே ஆஸாத்துக்கு ஆதர்சம்.



எட்வினாவுக்கு நேரு எழுதிய கடிதங்கள் பலவும் வெளியிடப்பட்டுவிட்டன ஏனென்றால் அவை எட்வினாவிடம் இருந்தன. ஆனால் நேருவுக்கு எட்வினா எழுதிய கடிதங்கள் சோனியாவின் கையில் இருக்கிறது, அவை அவ்வளவாக வெளியிடப்படவில்லை. அவை வெளியிடப்பட வேண்டும் சரித்திர முக்கியத்துவத்துக்காக. வேறு காரணம் இல்லை. நிச்சயம் நேருவும்-எட்வினாவும் மிக ஆத்மார்த்தமான் உறவை கொண்டிருந்தார்கள். நேரு செக்ஸை குறித்து அலட்டிக் கொள்ளாதவர். ஆதலால் நேரு-எட்வினா உறவில் செக்ஸ் இருந்ததா இல்லையா என்பது அலுப்பான கேள்வி. இருந்ததா இல்லையா என்பது 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' வகை. ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம் எட்வினாவின் உறவுக்கும் நேருவின் எந்த அரசியல் முடிவுக்கும் சம்பந்தமில்லை. பன்னெடுங்காலமாக எழுதி குவித்தவர் நேரு. அவரின் ஒவ்வொரு அரசியல் முடிவுக்கும் நம்மால் மிக எளிதாக அவரின் எழுத்துகளினூடாக முடிவுகளுக்கான காரணங்களை ஆராய்ந்தறிய முடியும். சோம்பேறிகள் தான் தலையனை மந்திரத்திற்காக முடிவுகளை நேரு எடுத்தார் என்பார்கள்.



பத்மஜா நாயுடு:

"எனக்கு ஆசைகளைத் துறந்து வாழ ஆசையில்லை" என்று பத்மஜா நாயுடுவுக்கு நேரு கடிதமெழுதினார். சரோஜினி நாயுடுவின் பெண் பத்மஜாவும் நேருவும் காதலர்களே. மொழியைக் கவித்துவமாகப் பயன்படுத்த தெரிந்த நுண்ணுனர்வாளர் நேரு என்பது அவர் எழுதிய கட்டுரைகள், கடிதங்களில் ஒன்றைப் படித்தாலே தெரியும். இந்திராவின் இயற்பெயரிலுள்ள ப்ரியதர்ஷினி, பார்வைக்கு இனியவள், என்பதைச் சிலேடையாக வைத்து ஒரு கடிதத்தை 'Priyardarshini, dear to sight, dearer still when sight is denied' என்று சிறையில் இருந்து எழுதியிருப்பார் அந்தத் தந்தை. 'பிபீ' (Bebee) என்று செல்லப் பெயரிட்ட நாற்பது வயதான பத்மஜாவுக்கு, "keep growing younger and thus make up for those who grow older' என்று எழுதினார். இன்னொரு கடிதம் பத்மஜாவின் கடிதத்துக்கான பதில், அதுவும் தந்தியாக, அதில் "My dear, your telegram has reached me. How foolish and womanlike and extravagant. Or was it a kind of prayaschitta or atonement for having made love to Subhas?" இக்கடித்தத்தைக் குறிப்பிட்டு மிகவும் பூடகமாக எம்.ஜே.அக்பர் நேருவும் சுபாஷும் அரசியலில் மட்டும் போட்டியாளர்கள் இல்லை என்கிறார். நேருவின் படுக்கை அறையில் தன் புகைப்படத்தை வைக்குமாறு ஒரு புகைப்படத்தைப் பத்மஜா கொடுத்தார்.

இந்திரா காந்தி பற்றிய வாழ்க்கைச் சரித்திரம் எழுதிய குடும்ப நண்பர் புபுல் ஜெயகர் விஜயலக்‌ஷ்மி பண்டிட்டிடம் நேரு ஏன் பத்மஜாவை மணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதாகவும் அப்படிச் செய்திருந்தால் இந்திராவின் மனம் புன்பட்டிருக்கும் அதனாலேயே நேரு அப்படிச் செய்யவில்லை என்றாராம் விஜயலக்‌ஷ்மி பண்டிட்.

தாகூரின் உறவினரும் நடிகையுமான தேவிகா ராணியுடன் தன் பெயர் கிசுகிசுக்கப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்ட தன் அம்மா கோபப்பட்டதாக நேரு பத்மஜாவுக்கு ஒரு கடிதத்தில் தெரிவித்தார். தேவிகா ராணி முதலில் சினிமாத் தயாரிப்பாளரான ஹிமான்ஷு ராயை மணந்தார் அவர் இறந்த பின் ஒரு ருஷ்யரை மணந்தார். உண்மையில் அந்தக் காலக் கட்டத்தில் தன் ஜாதி, மதம் விட்டு, ஏன் வெளிநாட்டவரைக் கூட மணந்த இவரைப் போன்றவரின் வாழ்க்கை விசித்திரமே. நேருவின் இரண்டு தங்கைகளும் காதலித்து மணம் புரிந்தனர். அப்படியே இந்திராவும், தேவதாஸ் காந்தியும். போஸ் ஜெர்மானியப் பெண்ணை மணந்தார்.

பத்மஜா பின்நாளில் ஆளுநரானார். பத்மஜாவை நேருவின் காதலியாகக் கிசுகிசு வரலாற்றின் வழி அறிந்தவர்களுக்கு இது நேரு அளித்த பரிசாகத் தோன்றலாம். உண்மை அதுவல்ல. பத்மஜா இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு அவர் அம்மா சரோஜினி நாயுடுவும் உத்தரப் பிரதேசத்தில் ஆளுநராக இருந்தவர். தீவிர அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த பெண் தான் பத்மஜா. பத்மஜா 'வெண்ணிற ஆடை' நிர்மலா அல்ல, நேருவும் எம்.ஜி.ஆர் அல்ல.

ம்ருநாளினி சாராபாயும் மிருதுளா சாராபாயும்:

விக்ரம் சாராபாய் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியும் நேருவின் நண்பரும். நேருவுக்குப் பெண்களைத் தவிர அன்றைய இந்தியாவின் முக்கியமான விஞ்ஞானிகளும் உலக அறிஞர்களும் உற்ற நண்பர்கள்.

விக்ரம் சாராபாயின் மனைவி மிருநாளினி சாராபாய் நாட்டியத்தில் ஈடுபாடுடையவர். ஒரு நாட்டிய நிகழ்வுக்குப் பின் மிருநாளினியை அனைத்தவாறு இருக்கும் நேருவின் புகைப்படத்தை ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கை விஷமமானத் தலைப்புடன் வெளியிட்டப் போது அதைக் கிண்டலான குறிப்போடு விக்ரம் சாராபாய் நேருவுக்கு எழுதினாராம். மிருநாளினியின் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு நேரு செல்வது வழக்கம், நேரம் தவறாமல் வந்து விடும் நேரு தான் வராவிட்டாலும் நிகழ்ச்சியை நேரத்தோடு ஆரம்பிக்கச் சொன்னாராம்.

Mrinalini Sarabhai and Nehru
எம்.எஸ். சுப்புலக்‌ஷ்மியின் பாடலைக் கேட்டுவிட்டு "இசையின் அரசியின் முன் நான் வெறும் பிரதமர்" என்றார் நேரு. அறிஞர்களோடு கலைஞர்களோடும் நேரு என்றுமே நட்பு கொண்டிருந்தார். நேருவின் உலகளாவிய நட்புகள் பிரமிக்கத்தக்க பட்டியல். அவர் ஒரு முழுமையான மனிதர்.

மிருநாளினி, மல்லிகா மற்றும் மல்லிகாவின் பெண், அவர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர், 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டி சுவாரசியமானது இங்கே.

மிருதுளா சாராபாய்:

சாராபாய் குடும்பத்தில் இருந்த இன்னொரு பெண் மிருதுளா, இவர் விக்ரம் சாராபாயின் சகோதரி. நேரு-மிருநாளினி சாராபாய் உறவை பற்றி ஆராய்ந்தப் போது மிருதுளா சாராபாய் பற்றியும் அவருக்கும் நேருவுக்குமான உறவுத் தெரிய வந்தது.

மிருதுளா நேருவுக்கு நெருங்கிய நட்பு. நட்பு மட்டுமே. பிரிவினையின் போது எல்லைப் பகுதியில் இரண்டாகப் பிரிந்த நாடுகளிடையே மிருதுளா முன்னும் பின்னுமாகச் சென்று உயிரை பணயம் வைத்து பலரைக் காப்பாற்றினார். பின்னர்க் காஷ்மீரின் ஷேக் அப்துல்லாவை நட்போடு ஆதரித்தார். ஆனால் ஷேக் அப்துல்லா, அவரும் நேருவுக்கு நெருங்கிய நண்பர், பிரிவினைப் பாதையில் அடியெடுத்து வைத்த போது அப்துல்லாவையும் மிருதுளாவையும் நேருவின் அரசு கைதுச் செய்தது.

தோழியோ, நண்பனோ, தேசம் என்று வந்துவிட்டால் நேருவின் சிந்தையும் செயலும் தெளிவாகத் தேசத்தின் சார்பில் தான் இருந்தது.

ஷ்ரத்தா மாதா:

1981-82-இல் ஷ்ரத்தா மாதா என்பவர் குஷ்வந்த் சிங்குக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் நேருவுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறினார். இது பற்றிச் சமீபத்தில் அவுட்லுக் பத்திரிக்கைக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

ஷ்ரத்தா மாதா என்பவர் ஒரு கத்தோலிக்க ஆஸ்பித்திரியில் 1949-இல் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கே அவருக்கு ஒரு குழந்தை இறந்துப் பிறந்ததாகவும் அவர் சொல்லிக் கொள்ளாமல் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினாரென்றும் அவர் சென்ற பிறகு அவர் மறந்து விட்டுச் சென்ற ஒரு கத்தைக் கடிதங்கள் அம்மருத்துவமனை உரிமையாளர்கள் கையில் கிடைத்ததாகவும் அவை நேரு எழுதியது என்று நேருவை பெரிதும் மதிக்கும் ஒருவர் கையகப்படுத்தி நேருவிடம் சேர்ப்பிக்க முற்பட்டார் என்கிறது. கடிதங்களை விலைக் கொடுத்து வாங்கியவர் நேருவின் காரியதரிசியிடம் தொடர்பு கொண்டார் ஆனால் காரியதரிசியும் நேருவும் அதைப் பொருட்படுத்த விரும்பவில்லை என்றும் ஆனால் மனம் தளராத அம்மனிதர் எருவை நேரில் சந்தித்துக் கடிதங்களை அளித்தாராம். நேரு அவற்றில் இருந்து ஒரு சாதாரணக் கடிதத்தை அவரிடமே பரிசாகக் கொடுத்ததாகவும் அக்கட்டுரைச் சொல்கிறது.

அக்கட்டுரையில் சுவாரசியமான பகுதி ஷ்ரத்தா மாதா இந்து மகாசபையால் இந்து மதச் சீரமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர முனைப்பாக இருந்த நேறுவின் மனத்தை மாற்ற அனுப்பப் பட்டவர் என்கிறது. அவுட்லுக் தன் புலனாய்வில் அக்கால உளவுத் துறை இந்து மகாசபையின் அஷுடோஷ் லாகிரி சவர்க்கரிடம் ஷ்ரத்தா மாதா நேருவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் என்றும் அதனால் நன்மைகள் நடக்கலாம் என்றும் எழுதிய குறிப்பு சிக்கயதாகவும் அதைப் பட்டேலிடம் சேர்ப்பித்ததாகவும் கூறுகிறது. அக்குறிப்பை பட்டேல் நேருவுக்கு அனுப்பி விளக்கம் கேட்டாராம். நேரு, "ஆமாம் அந்தப் பெண்மனியைச் சந்தித்திருக்கிறேன் சில முறை...(நாங்கள்) பொதுவாக Hindu Code Bill மற்றும் மொழிக் கொள்கைப் பற்றியும் விவாதித்தோம். அவர் என்னை மாற்ற முயன்றார், நான் அவரை மாற்ற முயன்றேன். என் முயற்சி வெற்றிப் பெற்றதோ இல்லையோ அவர் முயற்சிகள் தோல்வி அடைந்தன" என்று எழுதினாராம்.

ஷ்ரத்தா மாதா நேரு தன்னிடம் கை ஜோஸியம் பார்த்ததாகவும் சொல்லியிருக்கிறார். அவருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருந்ததை இன்னொருவருக்கு, ராதாகிருஷ்ணனை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு, நிரூபித்தாராம். நேரு கடைசி வரை பகுத்தறிவாளரே. விளையாட்டாக 'ஜோஸியம் பாரேன்' என்பதற்கு ஜோஸியத்தை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. ராதாகிருஷ்ணன் அவர் வீட்டு வேலைப் பெண் முதல் பல பெண்களோடு உறவு கொண்டார் என்று அவரின் மகனும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியரான எஸ்.கோபால் எழுதிய வாழ்க்கை வரலாற்றில் சொல்கிறார்.

இந்தியாவின் முதல் பிரதமருக்கு இறந்துப் பிறந்த குழந்தை ஒன்று இருந்திருக்கலாம் என்று முடிகிறது கட்டுரை. இருக்கட்டுமே. தாமஸ் ஜெபர்சனிடம் அடிமையாக இருந்த சேல்லி ஹெமிங்குக்கு அவர் மூலம் குழந்தைப் பிறந்ததாக இன்று மரபியல் மூலம் நிரூபிக்கப் பட்டு விட்டது. அதற்காக அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனம் எழுதி மிக முக்கியமான மரபுகளைத் துவக்கி அமெரிக்காவின் ஜனாதிபதியான அவர் சாதனைகள் பொய்யாகிவிடுமா? அப்படி எந்த அமெரிக்கனும் வாதிட்டு நான் பார்த்ததில்லை.

இந்து மதச் சீரமைப்புச் சட்டத் திருத்தம் நேருவின் பெரும் சாதனைகளில் ஒன்று. லிண்டன் ஜான்ஸன் கொண்டு வந்த கறுப்பினத்தவருக்கான உரிமைச் சட்டத் திருத்ததுக்கு நிகரான வரலாற்று முக்கியத்துவம் நேரு செய்தது. இரண்டு சாதனைகளையும் நான் சட்டத் திருத்தங்கள் சந்தித்த ஏகோபித்த எதிர்ப்பையும் அதை அவ்விரு தலைவர்களும் மீறி வெற்றி அடைந்ததையும் தான் ஒப்பிடுகிறேன், வேறெதையுமல்ல.

ஷ்ரத்தா மாதாவை நேரு சுரண்டினார் என்கிறார் ஜெயமோகன். அப்படி ஷ்ரத்தா மாதாவே சொல்லிக் கொள்ளவில்லை என்பதோடு அதற்கு எவ்வித ஆதாரமுமில்லை என்பது தான் உண்மை. அவுட்லுக் கட்டுரையிலேயே ஊர்ஜிதப் படுத்தக் கூடியது பட்டேலின் கடிதமும் அதற்கு நேருவின் பதிலும் தான், மற்றதெல்லாம் செவி வழிச் செய்திகள்.

நேருவின் 'புகை' படம்:

நேரு புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவர் புகைப்பிடிக்கும் படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன அதில் மிகச் சுவாரசியமானதும் சுவாரசியமான பின் கதையும் உள்ளப் படம் கீழே. இப்படம் இந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞர் ஹோமாய் வியாரவல்லா எடுத்தது. இப்படத்தைப் பார்த்தவுடன் "ஆஹா பார்த்தாயா நேருவை" என்று ஆர்ப்பரிக்கும் சின்னப் புத்திக் காரர்கள் காண மறுப்பது ஒரு நல்ல தோழமையான தருணம். இன்றும் இந்தியாவில் புகைப் பிடிக்கும் பெண்கள் தரக்குறைவாகத் தான் பார்க்கப்படுகிறார்கள். சினிமாவிலும் நடிகைகள் பிகினி அணிந்துக் கூட நடிப்பார்கள் ஆனால் புகைப் பிடிக்கும் காட்சியில் நடிக்கத் தயக்கம் காட்டுவார்கள். இங்கே நேரு தன்னோடு பயனிக்கும் இங்கிலாந்து ஹை கமிஷனரின் மனைவிக்குச் சிகரெட்டைப் பற்ற வைக்கிறார். இப்படத்தில் பெண் ஆணாக இருந்தால் யார் கண்ணையும் உறுத்தாது. இது போன்ற படங்கள் தான் இன்றும் நேருவை 'அவர் மேற்கத்தியவர்' எனும் பிம்பத்தைக் கட்டமைக்க உதவுகிறது. எனக்கு இந்தப் படத்தில் தெரிவதெல்லாம் ஒரு மனிதர் பெண்ணைச் சகப் பயணியாகப் பாவிக்கும் தோழமையும் அதைப் புகைப்படம் எடுக்க இன்னொரு பெண்ணை அனுமதிக்கும் மனோபாவமும்.

Prime Minister Nehru with Mrs Simon, the wife of British Deputy High Commissioner.  Photo by Homai Vyarawalla (Courtesy Hindu)
சமூக வலைத் தள நண்பர் நேரு பிரதமாரனதும் அவர் புகைப் பிடிக்கும் போட்டோ எடுக்கத் தடை விதித்ததாக யாரோ எழுதியதை மேற்கோள் காட்டினார். இது அடுத்தப் பிரச்சினை இப்போது இந்தியாவில். பெரும் தலைவர்களைப் பற்றி அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் எதையாவது எழுதிகிறார்கள் வாசகர்களும் அதில் உண்மை இருக்கிறாதா இல்லையா என்பதை விடத் தங்கள் நம்பிக்கைகளாஇ அவை ஊற்ஜிதப்படுத்திகிறதா என்று மட்டுமே பார்க்கிறார்கள். இந்தப் புகைப்படம் நேரு பிரதமராக இருந்த போது எடுத்தது. ஒரு பிரதமரைச் சுற்றி அதிகார மையங்கள் உருவாகும் அவர்கள் ஆவலாதியாகப் பிரதமரின் பிம்பத்தைக் காக்கும் பொருட்டு ஏதாவது கட்டுப் பாடுகள் விதித்திருக்கலாம் ஆனால் அவற்றுக்கும் நேருவுக்கும் சம்பந்தமிருப்பதாக ஆதாரமில்லை. கவனிக்கவும் பிராங்க்லின் ரூஸ்வெல்ட் ஜனாதிபதி ஆனப் பிறகு சக்கர நாற்காலியில் அவ்வளவாகப் புகைப்படம் எடுக்க அனுமதித்தில்லை. கென்னடி உடல் உபாதைகள் வெளியில் தெரியாதவாறுப் பார்த்துக் கொண்டார்.

மனைவி, மகள், தங்கையோடு நேருவின் உறவுகள்:

கமலா நேருவைப் பற்றித் தன் சுய சரிதையில் அவ்வளவாக நேரு எழுதவில்லை. கமலா நேருக் குடும்பத்துப் பெண்களோடு ஒட்டவேயில்லை ஏனெனில் அவர்களைப் போல் கமலா மெத்தப் படித்தவரல்ல. இதனாலேயே பிற்காலத்தில் இந்திரா காந்தி தன் அத்தைகளோடு சுமுகமான உறவில் இருந்ததில்லை, முக்கியமாக விஜயலக்‌ஷ்மி பண்டிட்டோடு.

கமலா இறந்த பின் எழுதிய 'டிஸ்கவரி ஆப் இந்தியா' புத்தகத்தில் நேரு கமலாவின் இறுதி நாட்கள் பற்றிச் சோகம் இழையோட எழுதிவிட்டுத் தன்னை மணமுடித்துப் போகப் போகக் கமலா நேரு மாறினார் என்கிறார். கமலா, தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது, சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார். அது கனவன் மனைவி இடையே ஓர் உறவை திறந்தது.

தாகூரின் நாடக நாயகி சித்ராவோடு கமலாவை ஒப்பிட்டு அழகாக, "Like Chitra in Tagore's play, she seemed to say to me: 'I am Chitra. No goddess to be worshipped, nor yet the object of common pity to be brushed aside like a moth with difference. IF you deign t keep me by your side in the path of danger and daring, if you allow me to share the great duties of your life, then you will know my true self." என்று சொல்லி, 'இதை அவள் வார்த்தைகளில் சொல்லவில்லை. அதைப் போகப் போக அவள் கண்களில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்கிறார். தன் தந்தையின் மரணத்தின் போது சிறையில் இருந்து வந்த நேரு கமலாவையும் குடும்பத்தையும் சந்தித்தார். பின்னர் இலங்கைக்குக் குடும்பச் சுற்றுலா சென்ற போது இருவருக்கும் ஓர் புரிதல் மலர்ந்தது என்கிறார். நேரு தன்னைச் சிக்கலான மனிதர் என்றும் அதுவே கமலாவை அச்சுறுத்தியது என்றும் ஒப்புக் கொள்கிறார்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் கமலாவுக்கு நேரு பெர்ல் பக் எழுதிய நாவலைப் படித்துக் காண்பித்தார். மனைவி, மகள், தங்கை, காதலிகள் என்று யாராயிருந்தாலும் அவர்களோடு புத்தகங்களைப் பகிர்ந்து கொள்வதும் அவர்களுக்குப் புத்தகங்களை அறிமுகப் படுத்துவதும் நேருவின் பழக்கம். இதெல்லாம் அக்காலத்தில் மட்டுமல்ல சமீபத்திய இந்தியாவிலும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

நேரு இந்திரா காந்திக்காகச் சிறையில் இருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்புகளில் முக்கியமானது 'Glimpses of World History'. அது ஒரு அற்புதமான கல்வி. நேரு வரலாற்றாசிரியர் கிடையாது. ஒரு தந்தையாக நேரில் இருந்து அறிவு புகட்ட முடியாத நிலையில் கடிதங்களைக் கொண்டு ஒரு தந்தையாக அல்ல ஒரு சிநேக பாவமுள்ள ஆசிரியனாக எழுதினார். அவர் கடிதங்களில் எவ்விதமான போதனா தொனியும் இருக்காது, எங்கே இளகி நுண்ணுணர்வோடு எழுத வேண்டுமோ அங்கெல்லாம் வரலாறு எப்படி முரன்களும் தெளிவின்மையும் உடையதென்பதை விளக்கியிருப்பார்.

கிருஷ்ணா ராஜா ஹுதீசிங் நேருவின் தங்கை. நேருவுக்கும் அவர் தங்கைக்கும் கிட்டத்தட்ட 18 வருட இடைவெளி. ஆங்கிலேய ஆட்சியில் 9 வருடங்கள் சிறையில் கழித்த நேரு சிறையில் இருந்து புத்தக்க்கள் படிப்பது, எழுதுவது, கடிதங்கள் எழுதுவது என்று பழக்கம் வைத்திருந்தார். கிருஷ்ணாவுக்கு நேரு எழுதிய கடிதங்களை அவர் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். இது அதிகம் அறியப்படாதத் தொகுதி. இத்தொகுதியைச் சமீபத்தில் படித்த போது நேரு எப்போதும் ஆச்சர்யம் அளித்தார்.

தந்தை இறந்த பின் அவர் சொத்துகளுக்குச் சட்டப்படித் தான் மட்டுமே வாரிசாக இருந்தாலும் 'உனக்கும் அதில் உரிமை உண்டு' என்று எழுதுகிறார். தொகுதியின் முதல் கடிதத்திலேயே 23 வயது தங்கையைப் புத்தகக் கடைக்குப் போகச் சொல்லி தன் பரிசாகப் பழங்கால வரலாறு, இடைக்கால வரலாறு பற்றிப் புத்தகம் வாங்கிக் கொள்ளச் சொல்கிறார். பின் தனக்குப் பிடித்த தலைப்புகள் இருந்தால் அதை வாங்கி அனுப்பச் சொல்கிறார். கூடவே தந்தை படித்துக் கொண்டிதுக்கும் கரிபால்டி பற்றிய புத்தகத்தை (வ.வே.சு ஐயர் பாரதியின் 'இந்தியா' பத்திரிக்கையில் கரிபால்டி பற்றி எழுதி இருக்கிறார் என்பதை நினைவு கூர்கிறேன்) அவர் படித்து முடித்து விட்டால் அனுப்பும் படியும் அப்படி முடிக்கவில்லையென்றால் தனக்கு இன்னொரு பிரதியை வாங்கி அனுப்பும்படியும் சொல்கிறார்.

இன்னொரு கடிதத்தில் கிருஷ்ணாவுக்கு நீண்டதொரு புத்தகப் பட்டியலை அனுப்பிக் குறிப்பாகச் சமஸ்கிருதத்தில் காளிதாசனின் மேகதூதத்தைக் கேட்கிறார் நேரு. நான்கு மாதங்கள் கழித்து எழுதும் கடிதத்தில் சென்னையில் சுவராமமூர்த்தி எழுதி மயிலை சமஸ்கிருத அகாதமி வெளியிட்ட 'Sculpture inspired by Kalidasa' புத்தகத்தைக் கேட்கிறார்.

வேறொரு கடிதத்தில், இதுவும் சிறையில் இருந்து தான், பௌத்தத்திற்கு முந்தைய இந்தியா பற்றிய புத்தகத்துக்கு நன்றி கூறி கே.எம்.முன்ஷியின் வரலாற்றுப் புத்தகம் ஒன்றின் தலைப்பு அலங்கார வார்த்தைகளுடையதென்றும் வரலாற்றெழுத்தில் அவை பொருந்தாது என்று கூறிச் சற்று நக்கலாக "முன்ஷிக்கு அலங்கார மொழியைப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது அது சில சமயம் நன்றாக இருக்கிறது சில சமயங்களில் அர்த்தமில்லாமல் இருக்கிறது. குறிப்பாக அவரது சொற்பொழிவுகளைச் சொல்கிறேன். அவை எங்களுக்குச் சற்றே நகைப்பைத் தரும் வகை. ஒரு வேளை எழுதும் போது கட்டுப்பாட்டோடு எழுதுவார் போலும்".

நேருவால் பெண்களைச் சக மனித ஜீவனாகப் பார்த்துப் பழக முடிந்தது. மனைவி, காதலி, மகள் என்று யாராயிருந்தாலும் அவர்களோடு என்ன வகையான உறவை கொண்டிருந்தாலும் அவர்களோடு அறிவுத் தளத்திலும் அவர்களை மதித்து உறவாடினார்.

நேருவின் படுக்கையறை ரகசியங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர் பெண்களோடு எப்படிப் பண்போடும், அந்த உறவுகள் இலக்கணத்தை மீறிய போதும், இருந்தார் என்பதைக் கற்றுக் கொண்டால் நாம் சந்திக்கும் பெண்கள் சந்தோஷப் பட வாய்ப்புண்டு.

'காந்தியின் காமம்':

காந்தி பெண்களோடு கொண்டிருந்த உறவு சிக்கலானது என்று சொல்வது ஒரு 'understatement'. தான் குளிக்கும் போதும் சுஷீலா நாயரும் குளிக்கலாம் என்று சொல்லிப் பின்னர் அப்படிச் சுஷீலா குளிக்கும் போது தான் கண்களை மூடிக் கொள்வதால் சுஷீலா நிர்வாணமாகக் குளிக்கிறாரா இல்லை உள்ளாடையோடு குளிக்கிறாரா என்று தெரியவில்லையென்றாலும் ஓசையை வைத்துச் சுஷீலா சோப் உபயோகிப்பதாகத் தெரிகிறது என்றார்.

'காந்தியின் காமம்' என்ற தலைப்பில் ஜெயமோகன் மிக விரிவாகக் காந்தியின் பிரம்மச்சரிய விரதம், சோதனைகள் குறித்து எழுதி இருக்கிறார். நீளம் கருதி அதைப் பற்றித் தனியாக இரண்டொரு நாளில் எழுதுகிறேன்.


References:

1. Alex Von Tunzelman's interview http://www.outlookindia.com/magazine/story/nehru-was-generally-happy-to-be-among-either-mountains-or-interesting-women/292519
2. Mallika Sarabhai and Nehru http://www.livemint.com/Leisure/NrXSXRMjG5dXxdASSvd5AI/Family-matters.html
3. Outlook Article on Shraddha Mata http://www.outlookindia.com/magazine/story/if-i-werent-a-sanyasin-he-would-have-married-me/223036
4. Hindu article on Homai Vyarawalla http://www.thehindu.com/opinion/op-ed/Farewell-Homai-Vyarawalla/article13376991.ece
5. Nehru: The Making of India -- M.J. Akbar
6. Indira Gandhi - Pupul Jayakar
7. Nehru's :etters to his Sister -- Krishna Nehru Hutheesingh
8. Discovery of India - Nehru
9. Autobiography, 'Towards Freedom' -- Nehru
10. India wins freedom -- Abul Kalam Azad
11. Mridula Sarabhai: Rebel with a cause.
















Sunday, May 14, 2017

Books to Understand America: A Bibliographic Odyssey

L.K. Advani’s juggernaut across India in a motorized chariot in 1990 reshaped India’s politics for decades to come. Donald Trump’s stunning victory in US Presidential election in 2016 was epochal. Advani’s chariot ride evoked a wide spectrum of discussions and conversations but, unlike America in the wake of Trump’s victory, no academic output to interpret or contextualize the event. That is the key difference between the two rambunctious democracies.

A vast majority of Indians have no knowledge of their own country’s history, ancient or modern, beyond the pathetically elementary episodes they learn in school. The academic output of India, particularly in the popular history or popular publication market, pales into insignificance compared to the rich and varied output in US. 

Indians carry their incurious nature as a second skin to any country they emigrate to. It is not uncommon to see Indians, irrespective of how long they live in US or UK, to have a churlish attitude towards the lands that they emigrated to and refuse to depart from. Intellectual incuriousness is not a malaise unless the person unmindful of it starts spouting inane opinions with little understanding. They mistake that watching CNN or Sky News makes them well informed about a complex society. It is as stupid as an American who might think he understands India by watching Zee TV or any of the hundreds of local variations. 

There’s an America that’s to be discovered through a rich bibliography selection. Based on the books I’ve bought, and read some, over the many years here’s a list that could be useful for any curious mind that seeks an answer as to how a motley group of colonies in 1776 willed itself into a nation and over two centuries became a land of prosperity, hope and opportunity for millions, not to mention creating unprecedented economic prosperity, a military that is formidable and completely dominate university rankings. Here is the America that earned my love and respect.

I’ve arranged the bibliography by topics. This is a sprinkling of a selection that any decent reader can use to form an opinion of USA. I’ve ensured that large tomes do not dominate and mostly kept the list to the moderately difficult to read.



Before a comprehensive list here’s a short list of recommendations:

  1. The metaphysical mind: A story of ideas in America — Louis Menand.
  2. The radicalism of American Revolution - Gordon Wood
  3. Ideological origins of the American Revolution - Bernard Bailyn
  4. American Scripture: Making the Declaration of Independence - Pauline Maier
  5. The great American university:Its rise to preeminence its indispensible national role, why it must be protected — Jonathan R. Cole
  6. The idea factory: Bell Labs and the great age of American innovation — Jon Gertner
  7. The fiery Trial: Abraham Lincoln and American Slavery — Eric Foner
  8. This republic of suffering: Death and the American civil war — Drew Gilpin Faust
  9. Parting the waters: America in the King Years 1954-63 — Taylor Branch
  10. Gideon’s Trumpet: How one man, a poor prisoner took his case to the US Supreme Court - Anthony Lewis
  11. The paranoid style in American politics — Richard Hoftstadter
  12. The passions and the interests: Political Arguments for capitalism before its triumph — A.O. Hirschman
  13. Free to choose - Milton Friedman
  14. The Founders and Finance: How Hamilton, Gallatin, and other immigrants forged a New Economy — Thomas K. McCraw
  15. The Dead Hand: The untold story of the cold war arms race and its dangerous legacy — David Hoffman
  16. Looming Tower: Al Queda and the road to 9/11 — Lawrence Wright
  17. Black Flags: The rise of ISIS — Joby Warrick
  18. Gunfight: The battle over the right to bear arms in America — Adam Winkler
  19. America’s bitter pill: Money, politics, backroom deals, and the fight to fix our broken healthcare system — Steven Brill
  20. Fault Lines: How hidden fractures still threaten the world economy — Raghuram Rajan
  21. Washington — Ron Chernow
  22. Thomas Jefferson: The art of power — Jon Meacham
  23. Morning in America: How Ronald Reagan invented the 1980s - Gil Troy
  24. Arrow smith (fiction) - Sinclair Lewis
  25. Atlas Shrugged (fiction) - Ayn Rand
The Trump election:
Let’s start with the obvious.

  1. Hillbilly Elegy: A memoir of a family and culture in crisis — J.D. Vance
  2. Strangers in their own land: Anger and Mourning on the American Right — Arlie Hochschild
  3. The politics of resentment: Rural consciousness in Wisconsin and the rise of Scott Walker — Katherine J. Cramer
  4. White Backlash: Immigration, race and American politics — Marisa Abrajano and Zoltan L. Hajnal
  5. What is populism? — Jan-Werner Muller
  6. The populist explosion: How the great recession transformed American and European politics — John B. Judis

Science and Education:
Little do many realize that America’s dominance of tertiary education is far more than its military dominance compared to other countries. The story of US is better understood by approaching through a learning of its education system, the battles over science and scientific innovation.

  1. The great American university: Its rise to preeminence its indispensible national role, why it must be protected — Jonathan R. Cole
  2. The Chicago school: How the university of Chicago assembled the thinkers who revolutionized economics and business — Johann Van Overtveldt
  3. The marketplace  of ideas: Reform and Resistance in American University — Louis Menand
  4. The closing of the American mind - Allen Bloom
  5. In defense of a liberal education — Fareed Zakaria
  6. Emperor of Maladies — Siddhartha Mukherjee
  7. Polio — David Oshinsky
  8. The social transformation of American medicine: The rise of a sovereign profession and the making of a vast industry — Paul Starr
  9. The devi in Dover: An insider’s story of Dogma V. Darwin in small-town America — Lauri Lebo
  10. Summer for the Gods: The Scopes Trial and America’s continuing Debate over Science and Religion — Edward J. Larson
  11. Operation Paperclip: The secret intelligence program that brought Nazi scientists to America — Annie Jacobsen
  12. The idea factory: Bell Labs and the great age of American innovation — Jon Gertner
  13. The chosen: The hidden history of admission and exclusion at Harvard, Yale and Princeton — Jerome Karabel
  14. Mismatch: How affirmative action hurts students it’s intended to help, and why universities wont admit it — Stuart Taylor Jr. and Richard Sander
  15. The immortal life of Henrietta Lacks — Rebecca Skloot
American history (Revolutionary Era):
  1. The radicalism of the American revolution — Gordon Wood
  2. Founding brothers: The revolutionary generation — Joseph J. Ellis
  3. American creation: Triumphs and tragedies in the founding of the Republic — Joseph J. Ellis
  4. American Sphinx: The character of Thomas Jefferson — Joseph J. Ellis  
  5. Ideological origins of the American revolution — Bernard Bailyn
  6. The Barbarous years: The peopling of British North America — The conflict of Civilizations — Bernard Bailyn
  7. Ratification — Pauline Mayer
  8. American Scripture: Making the Declaration of Independence — Pauline Mayer
  9. The bill of rights: Creation and Reconstruction — Professor Akhil Reed Amar
  10. American Colonies — Alan Taylor
  11. The metaphysical mind: A story of ideas in America — Louis Menand
American history (Civil War and Slavery)
  1. Battle cry of freedom: The civil war era - James M. Mcpherson
  2. Civil war trilogy  - Bruce Catton
  3. The classic slave narrative — Henry Louis Gates
  4. The fiery Trial: Abraham Lincoln and American Slavery — Eric Foner
  5. The Problem of slavery (2 volumes) — David Brion Davis
  6. This republic of suffering: Death and the American civil war — Drew Gilpin Faust
  7. Mothers of invention: Women of the slaveholding south in the American civil war — Drew Gilpin Faust
  8. Uncle Tom’s Cabin (Fiction) — Harriet Beecher Stowe.
  9. Gone with the wind (fiction) - Margaret Mitchell
  10. Underground Railroad (fiction) - Colson Whitehead
  11. The other lavery: The uncovered story of Indian enslavement in America — Andres Resendez
American history (Civil Rights Struggle)

1. The souls of black folk - W.E.B. Du Bois
2. Parting the waters: America in the King Years 1954-63 — Taylor Branch
3. Malcolm X - Manning Marable
4. Bearing the Cross: Martin Luther King Jr and the Southern Christian Leadership Conference — David Garrow
5. W.E.B. Du Bois (2 separate volumes) — David Levering Lewis
6. The race beat: The press, the civil rights struggle and the awakening of a nation — Gene Roberts
7. Common Ground: J. Anthony Lukas
8. Freedom’s Daughters: The unsung heroines of the civil rights movement from 1830-1970 — Lynne Olson
9. Hidden figures: The American dream and the untold story of black women mathematicians who helped win the space race — Margot Lee Shetterly
10. From Brown to Bakke: The Supreme Court and school integration 1954-1978 — J. Harvie Wilkinson
11. When affirmative action was white: An untold history of racial inequality in twentieth century America — Ira Katznelson

Law:
  1. Make no law: The Sullivan case and the First Amendment — Anthony Lewis
  2. Gideon’s Trumpet: How one man, a poor prisoner took his case to the US Supreme Court - Anthony Lewis
  3. The Nine: Inside the Secret world of the Supreme court - Jeffrey Toobin
  4. Origins of the fifth amendment: The right against self incrimination -- Leonard Levy

Political Science
  1. Anti-intellectualism in American Life — Richard Hofstadter
  2. The paranoid style in American politics — Richard Hoftstadter
  3. The American Political tradition: And the men who made it — Richard Hofstadter
  4. The cycles of American history — Arthur Schlesinger Jr.
  5. The Conservative mind: From Burke to Eliot — Russell Kirk
  6. The conservative intellectual movement in America since 1945 — George H. Nash
America and Capitalism:
  1. The passions and the interests: Political Arguments for capitalism before its triumph — A.O. Hirschman
  2. Free to choose — Milton Friedman
  3. The road to serfdom - Friedrich Hayek
  4. The Founders and Finance: How Hamilton, Gallatin, and other immigrants forged a New Economy — Thomas K. McCraw
  5. Prophets of regulation — Thomas K. McCraw
  6. Founding Choices: American Economic Policy in the 1790s — Douglas Irwin
  7. The half has never been told: Slavery and the making of American capitalism — Edward E. Baptist
  8. An empire of wealth: The epic history of American economic power — John Steele Gordon
  9. The Walmart effect — Charles Fishman
  10. Exxon: Private Empire  — Steve Coll
  11. Steve Jobs — Walter Isaacson
  12. American Icon: Alan Mulally and the Fight to save Ford Motor Company
  13. Freedom’s Forge: How American business Produced victory in World War II — Arthur Herman
  14. The arsenal of democracy: FDR, Detroit, and an Epic quest to Arm an America at War — A.J. Baime
  15. The forgotten man — Amity Shlaes
Labor movements and Labor history:
  1. Triangle: The fire that changed America — David Von Drehle
  2. It didn't happen here: Why Socialism Failed in the United States — Seymour Martin Lipset and Gary Wolfe
  3. Collision Course: Ronald Reagan, the Air Traffic controllers, and the strike that changed America — Joseph A. McCartin
Cold-War, Post-Cold War and Foreign Policy:
  1. The Dead Hand: The untold story of the cold war arms race and its dangerous legacy — David Hoffman
  2. Command and Control: Nuclear weapons, the Damascus accident, and the illusion of safety — Eric Schlosser
  3. Essence of Decision: Explaining the Cuban Missile Crisis — Graham Allison and Philip Zelikow]
  4. Lenin’s Tomb: The last days of the Soviet Empire — David Remnick
  5. Red Plenty (part fiction) — Francis Spufford
  6. THe coldest Winter: America and the Korean War — David Halberstam
  7. Bright Shining Lie: John Paul Vann and America in Vietnam — Neil Sheehan
  8. Vietnam: A history — Stanley Karnow
  9. Present at the Creation — Dean Acheson
  10. George F. Kennan: An American life — John Lewis Gaddis
  11. Thirteen days in September: The dramatic story of the struggle for peace — Lawrence Wright
Post 9-11 world:
  1. Looming Tower: Al Queda and the road to 9/11 — Lawrence Wright
  2. Ghost Wars: The secret history of the CIA, Afghanistan and Bin Laded — Steve Coll
  3. Black Flags: The rise of ISIS — Joby Warrick
  4. ISIS Apocalypse: The history, Strategy and the doomsday vision of the Islamic state — William McCants
  5. A history of Isis — Fawaz A. Gerges
  6. No good men among the living: America, the Taliban and the war in Afghanistan — Anand Gopal
  7. The Way of the Knife: The CIA, a secret army and a war at the ends of the Earth — Mark Mazetti
  8. Fiasco: The American military adventure in Iraq, 2003-2005 — Thomas E. Ricks
Contemporary Politics and Issues:
  1. Gunfight: The battle over the right to bear arms in America — Adam Winkler
  2. America’s bitter pill: Money, politics, backroom deals, and the fight to fix our broken healthcare system — Steven Brill
  3. Remedy and reaction: The peculiar American struggle over healthcare reform — Paul Starr
  4. While America Aged: How pension debts ruined General Motors, stopped NYC subways, bankrupted San Diego, and loom as the next financial crisis — Roger Lowenstein
  5. Fault Lines: How hidden fractures still threaten the world economy — Raghuram Rajan
  6. Too big to fail: The inside story of how Wall Street and Washington fought to save the Financial system—and themselves — Andrew Ross Sorkin
  7. Stress Test: Reflections on financial crises — Timothy F. Geithner
  8. Dark money: The hidden history of the billionaires behind the rise of the radical right — Jane Meyer
Music and Arts:
  1. Last Train to Memphis: The Rise of Elvis Presley — Peter Guralnick
  2. The history of Jazz — Ted Goia
  3. How to listen to Jazz — Ted Goia
  4. Pops: A life of Louis Armstrong — Terry Teachout
  5. Satchmo blows up the world: Jazz Ambassadors play the cold war — Penny M. Von Eschen
  6. Dinner with Lenny: The Last long interview with Leonard Bernstein
Notable biographies and memoirs:
  1. Washington — Ron Chernow
  2. Hamilton — Ron Chernow
  3. Thomas Jefferson: The art of power — Jon Meacham
  4. John Adams - David McCullough
  5. Truman - David McCullough
  6. Traitor to his class: The privileged life and radical presidency of Franklin Delano Roosevelt — H.W. Brands
  7. Unfinished life: John F. Kennedy, 1917-1963 — Robert F. Dallek
  8. The power Broker: Robert Moses and the Fall of New York — Robert Caro
  9. Reagan: The life — H.W. Brands
  10. Morning in America: How Ronald Reagan invented the 1980s - Gil Troy
  11. Destiny and Power: The american odyssey of George Herbert Walker Bush — Jon Meacham
  12. The Bridge: The life and rise of Barack Obama — David Remnick
  13. Emerson: The mind on Fire — Richard D. Richardson Jr
  14. Walt Whitman’s America: A cultural Biography
Oxford Publications on American history:
  1. The Glorious cause: The American Revolution, 1763-1789 — Robert Middlekauff
  2. Empire of Liberty: A history of the early republic, 1789-1815 — Gordon Wood
  3. What hath God wrought: The Transformation of America, 1815-1848 — Daniel Walker Howe
  4. From Colony to Super Power: U.S. Foreign Relations since 1776 — George C. Herring
  5. Freedom from fear: The American people in Depression and War, 1929-1945 — David M. Kennedy
Notable fiction:
  1. Arrowsmith - Sinclair Lewis
  2. Main Street - Sinclair lEwis
  3. Humboldt’s Gift - Saul Bellow
  4. The adventures of Augie March — Saul Bellow
  5. As I lay Daying / The Sound and the fury / Light in August — William Faulkner
  6. Leaves of grass - Walt Whitman
  7. A farewell to arms - Ernest Hemingway
  8. American Pastoral - Philip Roth
  9. Fountainhead - Ayn Rand
  10. Atlas Shrugged - Ayn Rand

ரோமிலா தாப்பர், ஜெனரல் தாப்பர் பற்றி ஜெயமோகன்: கருவாடு மீனாகாது, கிசுகிசு வரலாறாகாது

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா - ஒரு கிசுகிசு வரலாறு" என்ற ஜெயமோகனின் பதிவு அவருக்கே உரித்தான விரிந்தப் பார்வையோடு எழுதப்பட்டது, சுவாரஸ்யமான வாசிப்புக்குரியது ஆனால் சில மனச்சாய்வுகளால் உண்டான சில புரிதல் திரிபுகளும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றாசிரியரான ரோமிலா தாபர் பற்றி. இந்தப் பதிவே கிட்டத்தட்ட "இப்படியான மரத்தில் அந்தப் பசுக் கட்டப்பட்டிருந்தது" எனும் வகை எழுத்துக்கான முதன்மை உதாரணம்.

ஜெயமோகன் மிகச் சரளமாகச் சில வார்த்தைகளை ஒன்றொடொன்று மாற்றிப் பொருத்துகிறார். மிகச் சரியாக ஆங்கிலத்தில் இதைத் தெளிவாகச் சொல்லலாம். He uses terms like 'official history' and 'history' rather loosely and interchangeably. They're not interchangeable terms. There's no such thing as 'gossip history'. It is either 'gossip' or 'history' but it cannot be a hybrid of both.

முதலில் இந்த வார்த்தை 'அதிகாரப் பூர்வ வரலாறு' என்பதை வரையறுத்துக் கொள்வோம். இச்சொற்றொடர் பெரும்பாலும் அதிகார மையத்தோடு தொடர்புடைய அதிகார ஸ்தாபனங்களின் வெளியீடாக வரும் வரலாறுகளைக் குறிப்பது. அதுவும் முக்கியமாக அதிகார மையத்திடம் இருந்து சுதந்திரமாகவோ தன்னிச்சையாகவோ (autonomous) செயல்படமுடியாத ஸ்தாபனங்களில் பணிபுரியும் ஆய்வாளர்களால் அரசாங்கத்தின் பண உதவிக் கொண்டோ, அரசாங்கத்தின் வெளியீடாகவோ எழுதப்படுவது தான் 'அதிகாரப் பூர்வ வரலாறு' எனப்படும். இதைப் பெரும்பாலும் செய்தவை கம்யூனிஸ்ட் நாடுகள் தான். அரசாங்கம் சார்ந்த ஸ்தாபனங்களில் இருந்து வெளியாகும் வரலாறை பொத்தாம் பொதுவாக இவ்வகையில் வைக்கக் கூடாது. வரலாறை எழுதுபவர்களின் சுதந்திரம், வெளியீட்டில் அரசாங்கத் தலையீடு, வரலாறை எழுதும் விதத்தில் தலையீடு என்பதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.



ஸ்தாபனங்களின் துணைக் கொண்டு எழுதப்படுவதைச் சந்தேகக் கண் கொண்டு மதிப்பிடலாம். தவறில்லை. ஆனால் ஸ்தாபங்களின் துணைக் கொண்டோ, நிதி ஆதாரத்தைக் கொண்டோ எழுதப்படுவதாலேயே ஒரு எழுத்து தன் கௌரவத்தை இழக்காது. எழுத்தை எழுத்தின் தரம் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். எப்படி நிதி ஆதாரம் பெற்று எழுதுவதனாலேயே உண்மைகள் பொய் ஆகாதோ, அப்படியே, சொந்தக் காசில் எழுதுவதனாலேயே பொய்கள் உண்மையாகாது.

பெரும் ஆராய்ச்சிகள் இன்றும் வளர்ந்த நாடுகளிலேயே அரசாங்கத்தின் நிதி ஆதாரம் கொண்டு தான் செய்யப்படுபவை. அது தான் சாத்தியம். வரலாறை எழுதுவதிலும் அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் ஆராய்ச்சிகளிலும் அரசாங்கத்தின் நிதியோ அல்லது பெரு நிறுவனத்தின், அது பல்கலைக் கழகமாகக் கூட இருக்கலாம், நிதியோ இல்லாமல் எங்கும் சாத்தியமில்லை.

ராதாகிருஷ்ணன், எஸ்.என்.தேஷ்பாண்டே இருவரும் பெரும் ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்திய தத்துவ இயல் பற்றி இன்றும் படிக்கப்படும் நூல்களை எழுதினார்கள். இருவரும் கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்கள் கொடுத்த உதவியை வைத்து தான் எழுதினார்கள். எழுத்தின் தரம், உலகத் தரம். பி.வி. கானே (P.V. Kane), பாரத ரத்னா வழங்கப்பட்ட இந்திய தத்துவ இயல் ஆசிரியர், முப்பது வருட உழைப்பில் எழுதிய 'இந்திய தர்ம சாஸ்திரம்' ஒரு ஸ்தாபனத்தின் உதவியும், காலனி அரசின் உதவியால் நடந்த 'ஏஷியாடிக் சொஸைட்டி' ஸ்தாபனத்தின் உதவியாலும் எழுதப்பட்டது தான். கானேயின் எழுத்தை ஸ்தாபன ரீதியான எழுத்து என்று புறங்கையால் தள்ளுவதை ஜெயமோகனே ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் அந்த ஸ்தாபனம் ஒரு மார்க்ஸிய வரலாற்றாசிரியருக்கு அத்தகைய உதவியைக் கொடுத்திருக்குமா? இருக்காது. அதற்காக அந்தப் பெரும் தொகுதி எஜமானர்களின் விருப்பத்துக்காக எழுதப்பட்டது என ஒதுக்கலாமா? கூடாது. கூடவே கூடாது. அந்த எழுத்தின் தரம் மட்டுமே நமக்கு உரைக்கல்லில் சோதித்துப் பார்க்க வேண்டியது.

இந்திய வரலாறு எழுத்தில் நிலகண்ட சாஸ்திரிக்கு தனி இடமுண்டு. அவர் முன்னெடுத்த ஆராய்ச்சிகளும் வெளியிட்டப் புத்தகங்களும் அரசாங்க ஸ்தாபன ரீதியான உதவிப் பெற்றவை தான். மௌரியர்கள் பற்றிய வரலாறுப் புத்தகம் ('Age of the Nandas and Mauryas') இந்திய வரலாறை எழுதுவதற்காகக் காங்கிரஸ் இயக்கம், ராஜேந்திர பிரசாத் தலைமையில், 1937-இல் நிறுவிய 'இந்திய வரலாறு பரிஷத்' ஸ்தாபனத்தின் உதவியில் எழுதப்பட்டது தான். அந்த ஸ்தாபனமே பின்நாளில் சுதந்திரத்தின் பின் அரசாங்க ஸ்தாபனமாக முகிழ்ந்தது. 14 ஜனவரி 1948 பிரசாத் மௌலானா ஆஸாத்துக்கு எழுதிய கடிதத்தில் அந்நிறுவனத்துக்குப் பணம் ஒதுக்குமாறு கேட்டு எழுதிய கடிதம் இணையத்தில் பிரசாத்தின் தொகுதிகளில் கிடைக்கிறது. கவனிக்கவும் 14 ஜனவரி 1948 என்பது மிக முக்கியமான காலம். மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இனக் கலவரத்துக்கு எதிராகவும் தலைநகர் தில்லியிலேயே உண்ணவிரதம் மேற்கொண்ட இரண்டாம் நாள். தில்லியும் வட இந்தியாவும் இனக் கலவரத்தின் கோரப்பிடியில் சிக்கியிருந்த நாட்கள் அவை. தில்லி ரத்த பூமியான நாட்கள் அவை. இந்தச் சூழலில் வரலாறு ஸ்தாபனத்துக்கு அரசாங்கப் பணம் கேட்கிறார் பிரசாத். வரலாறு எழுதுவதில் தேசத் தலைமைக்கு இருந்த ஆவல் எல்லாக் காலத்திலும் எல்லா நாட்டிலும் உண்டு. 'அதிகாரப் பூர்வ வரலாறு' என்று நீலகண்ட சாஸ்திரி எழுதியதை பொத்தாம் பொதுவாகச் சொல்லலாம். ஆனால் இன்றைய புரிதலில் 'அதிகாரப் பூர்வ வரலாறு' என்பது அரசாங்கங்கள் நேரிடையாகத் தலையிட்டுத் தகுதியில்லாதவர்களைப் பதவியில் அமர்த்தி ஆதாரங்களை வளைத்து நெளித்து எழுதப்படுவதைக் குறிப்பது. நீலகண்ட சாஸ்திரியை அந்த வரிசையில் வைக்க முடியாது. சுருங்கச் சொன்னால் நீலகண்ட சாஸ்திரி கோ.வி.மணிசேகரன் அல்ல.

முன்பொரு முறை வரலாறு எழுத்தை வல்லுநர்களே செய்ய வேண்டும் என்றும் வல்லுநர்கள் அல்லாதவர்களின் விலகி இருந்தால் நலம் எனும் கருத்தில் ஜெயமோகனே எழுதியிருக்கிறார். அந்த வல்லுநர்கள் எங்கிருந்து வருவார்கள்? கல்வி ஸ்தாபனங்களில் இருந்து தானே வர முடியும். பல்கலைக் கழகங்களில் இடது சாரிகள் கோலோச்சுவது இந்தியாவில் மட்டுமல்ல இன்றைய அமெரிக்காவிலும் உண்டு. அதற்கான காரணங்களுண்டு ஆனால் அவ்விவாதம் இந்தப் பதிவுக்கு அப்பாற்பட்டது. மார்க்சியம், இடது, வலது என்ற லேபிள்களைத் தாண்டி நாம் எழுத்தை அதன் தரம் கொண்டே நிர்ணையிக்க வேண்டும். சொல்லப்படும் கருத்தின் ஆதாரங்கள், அதைக் கொண்டு எழுப்பப்படும் கருத்தியலுக்கான தர்க்க நியாயங்கள், எதிர் கருத்தை கையாளும் நேர்மை, எதிர் கருத்துகள் எப்படி மறுக்கப்படுகின்றன ஆகியவற்றை உற்று நோக்கியே மதிப்பிட வேண்டும்.

உதாரணத்திற்கு, இர்பான் ஹபீப் எழுப்பிய பாரத மாதா சர்ச்சையைச் சொல்லலாம். 'பாரத மாதா' என்பது காலணியக் காலத்தின் கருத்தாக்கம் என்றார் ஹபீப். நான்கு திசைகளில் இருந்தும் 'தேசத்துரோகி', 'மார்க்சியன்' என்று அவர் மீது அமிலம் உமிழ்ந்தார்கள். ஜெயமோகனும் கடிந்து கொண்டார். ஆனால் எந்த லேபிளும் இது வரை ஒட்டப்படாத சுமதி ராமசாமி எனும் வரலாறாசிரியர் அமெரிக்கப் பல்கலையின் வெளியீடாக எழுதிய புத்தகமும் அதையே தான் சொன்னது. அந்தப் புத்தகத்தையும் அந்தச் சர்ச்சையையும் ஏன் ஹபீப் சொன்னது சரி என்றும் விரிவாக எழுதியிருக்கிறேன். ஹபீப்பை மறுக்கலாம் ஆனால் மறுப்பவர்கள் தர்க்க நியாயங்களுக்குட்பட்டுச் செய்ய வேண்டும், தரவுகளின் அடிப்படையில் செய்ய வேண்டும்.

இந்தியாவில் பல்கலைக்கழகங்களும் அவற்றின் நிழலில் உருவாகும் ஆராய்ச்சிகளும் சமீபத்தில் தான் அரசாங்கங்களின் கைப்பாவை ஆயின. தமிழ் நாட்டில் தமிழ் பற்றி ஆராய்ச்சி செய்யும் யாரும் திராவிட இயக்கம் முன் வைத்த எந்த முடிவுகளையும், ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, மறுதலித்து எழுதிவிட முடியாது, அதுவும் அரசாங்க வேலையில் இருந்து கொண்டு. திராவிட இயக்க பிதாமகன் அண்ணாதுரையின் எழுத்தின் தரம் பற்றியோ ஈ.வெ.ரா அடித்துவிட்ட கருத்துகளையோ எந்தப் பல்கலைக் கழக ஆசிரியரும் கேள்விக்கு உட்படுத்திப் பல்கலைக் கழக ஆய்வாக எழுதிவிட முடியாது. அண்ணாதுரைக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஆரியச் சதி என்று வேண்டுமானால் எழுதலாம்.

இந்தச் சமீபத்திய அவலம் வட இந்தியாவில் வேறு வகையாக வளர்கிறது. அங்கே இந்திய கலாசாரத்தில் இல்லாத எதையும் மேற்கத்திய அறிவியல் கண்டு பிடித்துவிடவில்லை என்றோ இன்று வரை பரவலாக, ஆதாரத்தின் அடிப்படையில், ஏற்றுக் கொள்ளப்பட்டதை இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காத பட்சத்தில் ஆதாரங்களே இல்லாமல் தொன்மங்களைத் திரித்துச் சொல்லும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாட்டு மூத்திரத்தில் புற்று நோய்க்கும் எய்ட்ஸுக்கும் மருந்து இருக்கிறது, ப்ரம்மாஸ்திரத்தின் சூத்திரத்தில் அணுப் பிளவின் சூத்திரம் இருக்கிறது என்று எழுதினால் கை மேல் விருது. இந்திய அரசாங்கத்தின் உதவியால் நிகழும் அறிவியல் கூட்டரங்கில் நடந்த கேலிக் கூத்துகள் பொறுக்க முடியாமல் நோபல் பரிசு வாங்கிய வெங்கி வெளியேறினார்.

ஜெயமோகன் எழுத வந்தது வலம்புரி ஜான் என்னும் பத்திரிக்கையாளர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பற்றி எழுதிய புத்தகத்தைப் பற்றி. வலம்புரி ஜான் பத்திரிக்கை நடத்தி அதில் எழுதியதால் பத்திரிக்கையாளர் என்று குறிக்கப்படலாம் மற்றப்படி அவரை எந்தத் தரப்பட்டியலிலும் சேர்த்துவிட முடியாது. இந்தியாவில் ஆளுமைகள் குறித்து நேர்மையோடு வெளிப்படையாக எழுதுவது கடினம். சட்டங்கள் அதற்கு அனுகூலமானவை அல்ல. இதனால் பல புத்தகங்களும் சினிமாக்களும் கிசு கிசு பாணியிலேயே இருக்கிறது. தமிழ் நாட்டில் இதன் ஆகச்சிறந்த உதாரணம், ஜெயமோகன் சுட்டியது போல், கண்ணாதாசனின் 'வனவாசம்'. சினிமாக்களில் 'இருவர்' திரைப்படமும் 'பம்பாய்' திரைப்படமும் அந்த வகை.

தன் வரலாறு எழுதும் பலர் இந்தக் கிசுகிசு உத்தியை இந்தியாவில் கையாள்கிறார்கள் அல்லது கிசுகிசு தரத்தில் எழுதுகிறார்கள். அபுல் கலாம் ஆஸாத் அவருடைய தன் வரலாறில் 30 பக்கங்களை 50 வருடங்கள் வெளியிடக் கூடாதென்று வைத்திருந்தார். அவை வெளியான போது சப்பென்று இருந்தது. சமீபத்தில் அமெரிக்காவில் வெளியுறவுத் துறையில் பெரும் பதவிகள் வகித்த ஜார்ஜ் கெண்னன் தன் வாழ்க்கையை எழுத ஓர் ஆசிரியரை நியமித்து அந்தப் புத்தகம் ஜார்ஜ் இறந்த பிறகே வெளியிட வேண்டுமென்றார். ஜார்ஜ் கெண்னன் 101 வயது வரை வாழ்ந்தார்.

வாழ்க்கை வரலாறு எழுத ஒருவரை நியமிப்பது மேற்குலகில் சகஜம். நைபால், தாட்சர், கெண்னன் ஆகியோர் அப்படிச் செய்தார்கள். அப்படி நியமிக்கப்படுபவர்கள் தங்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது வழக்கம். அப்படி எழுதப்படுவது அப்புறம் நேர்மையற்ற துதிப் பாடலாக வெளிவந்தால் எழுதியவரும் எழுதுப் பொருளாக இருந்தவரும் மதிப்பிழப்பார்கள். அது தான் நியாயம். நியமன எழுத்து என்பதற்காகவே ஒன்றை நிராகரிக்கக் கூடாது. கெண்னனின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்த, 'Is this George Kennan?' (http://www.nybooks.com/articles/2011/12/08/is-this-george-kennan/) மதிப்புரையை நோக்கவும்.

டி.ஜி.பி மோகன் தாஸின் எம்.ஜி.ஆர் பற்றிய புத்தகம் அன்றைக்குப் பொது வெளியில் தெரிந்திருந்த சமாசாரங்களையே சொன்னது, எம்.ஜி.ஆருக்கு எந்தத் தருணத்திலும் ஜானகியைத் தவிர வேறொரு பெண் மனைவி ஸ்தானத்தில் இருந்தார் என்பது உட்பட. உள் வட்டத்தைச் சேர்ந்தவராகக் கருதப்பட்ட மோகன் தாஸ் அதை எழுதிய போது அது பேசப்பட்டது.

கிசுகிசு வகையில் எழுதப்பட்ட இந்த நூல்களைப் பற்றி எழுதுமிடத்தில் இந்திய-சீனா போர் பற்றியோ, ரோமிலா தாபர் பற்றியோ எழுத என்ன நிர்பந்தம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்தக் கிசுகிசு நூல்களைக் கிசிகிசு-வரலாறு என்று புதியதொறு வகைமையை (genre) அறிமுகப்படுத்தி அதற்கு முகமனாக எம்.ஓ.மத்தாய், பிரிகேடியர் டால்வி என்று அஸிதிவாரத்தை அமைக்கிறார் ஜெயமோகன்.

பேஸ்புக் மற்றும் இணைய விவாதங்களில் நம்மவர்கள் கையாளும் ஒரு போக்கைப் பற்றி விரிவாக எழுத எண்ணம். சுருக்கமாக இங்கே. நம்மவர்களில் பலர் தமக்கு ஒவ்வாத, முக்கியமாகக் காந்தி மற்றும் நேரு சம்பந்தமாக, எங்கே எந்தத் துணுக்குக் கிடைத்தாலும் அதை "அஹா கிடைத்தது பாரீர் ஆதாரம்" என்று களிக் கொள்கிறார்கள். அதில் பலவும் இம்மாதிரியான தன் வரலாறுகளில் இருக்கும் துணுக்குகள்.

இறப்பதற்குச் சில காலம் முன்பு அம்பேத்கர் பி.பி.சிக்கு அளித்த பேட்டி மிகப் பிரசித்தம். அப்பேட்டியில் காந்தி ஒரு நேர்மையற்ற அயோக்கியர் எனும் அர்த்தம் வருமாறு அம்பேத்கர் பேசியிருப்பார். "ஆஹா அறிவாசான் அம்பேத்கர் சொல்லிவிட்டார்" என்று பலரும் அதை இன்றும் பகிர்கிறார்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிக் கவலைப்படாமல். காந்தி ஆங்கிலத்தில் எழுதும் போது மிக நல்லவராகத் தோன்ற வைக்கும் வகையில் எழுதியதாகவும் குஜராத்தி/ஹிந்தியில் எழுதிய அவர் எழுத்துகள் வேறு வகையானவை என்றும் பெரும்பாலோர் ஆங்கில எழுத்துகளின் அடிப்படையிலேயே காந்தியைக் கொண்டாடுகிறார்கள் என்பார் அம்பேத்கர். இது முட்டாள்தனம். காந்தியின் வாழ்நாளிலேயே அவரைக் காட்டமாகவும், வன்மமாகவும் மறுத்துப் பேசியவர்கள் உண்டு அவர்களில் பலருக்கு இரு மொழிப் புலமையும் உண்டு. இதை ஒரு நிமிடம் மனத்தில் இருத்தினாலே அந்தப் பேட்டியை புறங்கையால் தள்ளிவிட முடியும்.

மத்தாயின் நூலை இது வரை பல முறை ஜெயமோகன் கிட்டத்தட்ட வரலாறு நூல் எனும் தரத்தில் பேசிவிட்டார் அதை 'அடப்பக்காரன் வரலாறு' என்று சில முறை குறிப்பிட்டுமுள்ளார். மத்தாயின் நூல் எந்த வகையிலும் சீரிய விவாதத்தின் போது வைத்துப் பேச தக்க நூல் அல்ல. நம்மவர்களின் சிக்கலே இது தான். இதோ இப்போது அரையும் குறையுமாகச் சஷி தரூர் பேசியதை தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள் அதிலுள்ள வரலாற்றுப் புரிதலின் பிழைகளைக் கண்டு கொள்ளாமலே. 'அடப்பக்காரன் வரலாறு' என்று சொன்னப் பிறகு அதை ஏன் மேற்கோள் காட்டுவானேன்? கிசு கிசு என்றுமே வரலாறு ஆகாது. இரண்டு வார்த்தைகளையும் இணைப்பதே தவறு. இது 'வரலாறு' எனும் கருத்தாக்கத்தின் ஆணிவேரில் வெண்ணீர் ஊற்றுவதற்கு இணை.

கிசு கிசு தரத்திலான நூலைப் படிக்கலாம், தவறில்லை ஆனால் அதன் மேற்கொண்டு கறாரான நூல்களைக் கண்டடைய வேண்டும். இந்தியா-சீனா போரைப் போல் மிக அதிகமாகத் தவறாகவும், அரைகுறை தகவல்கள் வழியாகவும், காலாவதியான ஆதாரங்கள் வழியாகவும் புரிந்து கொள்ளப்பட்ட இந்திய நிகழ்வு வேறொன்று இருக்காது.

பிரிகேடியர் டால்வியின் நூலும், நெவில் மாக்ஸ்வெல்லின் நூலும் இன்று வரை இந்திய-சீனா யுத்தம் பற்றிய எந்த விவாதத்திலும் இடம் பெறுபவை. டால்வியின் நூலுக்கும் "அதிகாரப் பூர்வ வரலாற்றுக்கும் மிகப் பெரிய முரண்பாடு இருந்தது. அது என்னை ஒரு வகையில் உலுக்கியது" என்கிறார் ஜெயமோகன். இந்திய-சீனா போரைப் பற்றி எந்த "அதிகாரப் பூர்வ வரலாறு" வெளியிடப்பட்டது? எதுவுமில்லை. அப்புறம் என்ன முரண்பாடு?

இந்திய-சீனா போர் மற்றும் நேருவின் முடிவுகள் பற்றி இவ்வருடம் விரிவாக எழுதவதாகத் திட்டம். ராணுவ வரலாறாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் எழுதிய 'War and Peace in Modern India' புத்தகத்திற்கு நான் எழுதிய மதிப்புரையில் இந்திய-சீனா போர் பற்றித் தொட்டிருக்கிறேன். அந்த விரிவான விவாதத்திற்குள் செல்லாமல் ஜெயமோகன் முன் வைத்த ஜெனரல் தாப்பர், ரோமிலா தாப்பர் பற்றிய கருத்துகளுக்கு மட்டும் இங்கே மறுப்புச் சொல்கிறேன்.

மேக்ஸ்வெல் தன்னுடைய நூலின் முன்னுரையில் மிக மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறார். அந்த நூலில் ஒரு சமமின்மை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டு அதற்குக் காரணம் தனக்குப் பிரச்சினையின் இரண்டு சாராரிடையே, இந்தியா-சீனா, ஒரு சார்பில் மட்டும், இந்தியாவின் பக்கத்தில், மிக வெளிப்படையாக அணுக முடிந்ததாகவும், வெளிப்படையாக ஆராய முடிந்ததாகவும், உலக நாடுகளிலேயே இந்தியா மிக வெளிப்படையான நாடு என்றும், சீனாவுக்குள் ஆராய எந்த அனுமதியும் கிட்டவில்லை என்றும் சீனாவின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளை மட்டுமே வைத்து எழுதியதாகவும் அதனாலேயே சீனாவின் தரப்பிலான முடிவுகள் இந்தியாவின் முடிவுகள் போலல்லாமல் எதார்த்தமாகத் தெரியுமாறு எழுதிவிட்டதாகச் சொல்கிறார்.

சில வருடங்களுக்கு முன் பிரின்ஸ்டனில் எனக்குப் பிடித்த புத்தகக் கடையில் மிக அரிதான ஒரு நூல் கிடைத்தது. சீன அரசாங்கம் இந்தியா-சீனா எல்லை சர்ச்சைப் பற்றி அப்போது வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ நூல் அது. அதில் வரைபடங்களோடு முக்கியமாகச் சீன அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வ நாளேடுகளில் நேருவை ஏகாதிபத்தியவாதியாகச் சித்தரித்து எழுதப்பட்ட காட்டமான கட்டுரையும் வேறு சில கட்டுரைகளும் இருந்தன. இது போன்ற 'அதிகாரப் பூர்வ' பரப்புரையை இந்தியாச் செய்ததாக நான் படித்ததில்லை.

ஸ்ரீநாத் ராகவன் ஜெனரல் தாப்பர் நியமனம் பற்றித் தெளிவாக எழுதியுள்ளார். மாக்ஸ்வெல் தான் தாப்பர் "தர்பாருக்கு இனக்கமான அதிகாரி" என்று எழுதினார். அதை ராகவன் மறுக்கிறார். தாப்பர் தான் பணி மூப்பு முறைப் படி வந்தார் என்றும் ராணுவத்தில் இருக்கும் பிரமோஷன் முறைகளும் காரணம் என்கிறார் ராகவன். எல்லா நாட்டிலும், இன்றும் கூட, ராணுவத்தின் உயர் அதிகாரி நியமனத்தில் பணி மூப்பு மட்டுமல்லாது வேறு சில தகுதிகளையும், ஆட்சியாளர்களோடு அனுசரிப்பது ஆட்சியாளர்களின் ஆட்சி முறைப் பார்வை (outlook) அனுசரிக்கும் திறன், பார்த்து தான் நியமிக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் ஐசன்ஹோவர் நியமிக்கப்பட்டதும் அப்படித் தான்.

இந்திய ராணுவத்தை நேருவும் கிருஷ்ண மேனனும் நிர்வகித்த விதம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. சமீபத்தில் ஸ்டீவன் வில்கின்ஸன் எழுதிய 'Army and Nation' முக்கியமான புத்தகம் இந்தியாவில் ராணுவம் எப்படிக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது என்பது பற்றியும், ராணுவ சீரமைப்பு, நேருவின் தலைமைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டது (அதற்கான மதிப்புரை இங்கே ).

இந்தியா-சீனா போர் என்றாலே இந்தியர்கள் பலர் இன்னும் நெவில் மேக்ஸ்வெல், டால்வி ஆகியோரை மட்டுமே சுட்டுகிறார்கள். மேக்ஸ்வெல் எழுதியது காலாவதியாகிவிட்டது என்று சொல்ல மாட்டேன் ஆனால் அவரைத் தாண்டி இன்று புதிய தகவல்களின் அடிப்படையில் புரிதல்கள் விரிவடைந்திருகின்றன.

இந்திய-சீனா போர் குறித்தும் பனிப்போர் காலத்தில் இந்தியாவின் வெளியுறவுகள் குறித்தும் புதிய தகவல்களோடு எழுதப் பட்ட கறாரான நூல்கள் சமீபத்தில் வந்திருக்கின்றன, அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் வாயிலாக. இந்திய-சீனா சிக்கலில் திபெத்தை வைத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆடிய சதுரங்க விளையாட்டை ப்ரூக்கிங்க்ஸ் ஆய்வகத்தைச் சேர்ந்தவரும் சி.ஐ.ஏவில் பணியாற்றிவருமான ப்ரூஸ் ரைடெல் (Bruce Reidel) எழுதிய புத்தகம் எப்படிப்பட்ட உலக அளிவிலான சதுரங்க விளையாட்டில் நேருவும் இந்தியாவும் காய் நகர்த்த வேண்டியிருந்தது என்பதை வெளிக் கொணர்ந்தது. அந்நூல் மிகக் கறாரானது அல்ல ஆனால் முக்கியமானது. நூல் ஆசிரியர்கள் ஒரு புதுப் பார்வையை முன்வைப்பதற்காக எழுதுவார்கள் அப்படி எழுதும் போது தங்கள் பார்வைக்குத் தேவையானதை மட்டுமே செதுக்கி முன் வைப்பார்கள். இந்திய-சீனா போர் மிகச் சிக்கலான பற்பல ஊடு-பாவுகளைக் கொண்டது. ஒரு வாசகன் ஒரே புள்ளியில் தேங்கி விடாமல் மென்மேலும் படித்து ஒரு சித்திரத்தை தனக்குத் தானே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்திய-சீனாப் போர் குறித்துத் தெளிவுப் பெற சமீபத்தில் வந்த நூல்களின் பட்டியலை இப்பதிவின் முடிவில் பரிந்துரைக்கிறேன்.

ஜெனரல் தாப்பர் இணக்கமானவர் என்று மேக்ஸ்வெல் சொன்னது தவறு மட்டுமல்ல நேர்மையற்றதும் என்கிறார் ஸ்ரீநாத் ராகவன். ராகவன் ஜெனெரல் புஷெர் (General Bucher) மேக்ஸ்வெல்லிடம் அவரின் முடிவுகள் ஏன் தவறானவை என்று மறுத்து எழுதியதை மேக்ஸ்வெல் மறைத்து விட்டார் என்கிறார் ராகவன். வெறும் உறவை வைத்து நாட்டின் மிக முக்கியமான பதவியைத் தூக்கிக் கொடுக்க நேரு என்ன கருணாநிதியா இல்லை எம்,ஜி.ஆரா?

தாப்பர் ஒன்றும் நேருவுக்கு நேரடிச் சொந்தமும் கிடையாது. தாப்பரின் மனைவி பிம்லா என்பவர் கௌதம் செஹ்காலின் தங்கை. கௌதம் செஹ்காலின் மனைவி நயந்தாரா செஹ்கல் விஜயலக்‌ஷ்மி பண்டிட்டின் மகள். அதாவது நேருவின் தங்கை விஜயலக்‌ஷ்மியின் மகளின் கனவரின் தங்கை தாப்பரின் மனைவி. அப்பாடா. மூச்சு முட்டுகிறது. அந்த ஜெனெரல் தாப்பரின் மகன் கரன் தாப்பர், ஜென்ரல் தாப்பரின் 'niece' ரோமிலா தாப்பர். அப்பப்பா. இதைத் தான் "இப்படியான மரத்தில் அந்தப் பசுக் கட்டப்பட்டிருந்தது" எனும் வகை எழுத்து எனலாம். Guilt by association.

ஜெனெரல் தாப்பர் தகுதியை மீறி பதவிக்கு வந்தார், அப்படியாப்பட்ட தாப்பரின் உறவுப் பெண் ரோமிலா தாப்பர். இவர்கள் எல்லோரும் இந்திய வெறுப்பாளர்களாம். ராணுவத்தில் பணியாற்றும் யாரைக் குறித்தும் சொல்லக் கூடிய மிக வன்மமான வசை தேசத்தை வெறுப்பவர் என்பது.

போதாக்குறைக்கு ஜெனெரல் தாப்பர் செயலற்று கோல்ப் விளையாடினார் என்றும் அந்தச் செயலற்றத் தன்மைக்குக் காரணம் அவர் சீனா மற்றும் இடது சாரிகளோடு கொண்டிருந்த உறவுக் காரணமோ என்று வரலாறு ஆய்வாளர்கள் ஐயப்படுகிறார்களாம். ஸ்ஸ்ஸ் அப்பா கண்ணைக் கட்டுதே. அந்த ஆய்வாளர்கள் யாரோ? இணையத்தில் தேடியதில் கிடத்த சுட்டிகளில் இந்துப் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை தாப்பரை பற்றி மிக நல்லதாகத் தான் சொல்கிறது. இந்தியா-சீனா போரில் இந்தியா அடைந்த தோல்வியை ஆராய்ந்த ஹெண்டர்ஸன்-ப்ரூக்ஸ் அறிக்கை இன்றும் ரகசியம். ஆனால் மேக்ஸ்வெல் அதில் ஒரு பகுதியை 2014-இல் வெளியிட்டார். அதைப் பற்றிய இந்தியா-டுடே கட்டுரை வெளியிடப்பட்ட பகுதியில் நேரு பற்றியும் தாப்பர் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை என்கிறது. ஆக, எந்த வரலாறாசிரியர் தாப்பர் சீனாவின் கைக்கூலி என்று சொன்னார் என்று தெரியவில்லை.

ரோமிலா தாப்பர் இந்தியாவின் தலைச் சிறந்த வரலாறு ஆய்வாளரும் ஆசிரியரும். அவரின் மிக முக்கியமான ஆய்வு அசோகரின் ஆட்சிப் பற்றியது. ரோமிலாவை மார்க்சியர் என்று தூற்றி அவரின் இடத்தையே கேள்விக்குள்ளாக்குவது ஜெயமோகனை இந்துத்துவர் என்று தூற்றி தமிழ் இலக்கியத்தில் அவரின் இடத்தைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு இணையானது. தாப்பர் மார்க்சியராகவே இருக்கட்டுமே. குடியா முழுகிவிடும். மீண்டும் மீண்டும் ரோமிலா தாபரை இந்திய வெறுப்பாளர் என்கிறார் ஜெயமோகன். அந்த அம்மாள் நினைத்திருந்தால் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கலாம். அவர் அமெரிக்காவின் மிக உயரிய பல்கலைக் கழகங்களில் வருகை தரும் ஆசிரியராக இருக்கிறார். ரோமிலா தாப்பரின் நூல்களைக் கறாராக மறுத்து எழுதலாமே ஜெயமோகன் விதந்தோதும் மிஷெல் தானினோ, ராய் மாக்ஸ்ஹாம் போன்றவர்கள்.

இந்திய ஐஐடிக்களில் தலை விரித்தாடும் இந்துதுவத்தைப் பயன்படுத்திக்கொண்டு மிஷெல் தானினோ போன்றவர்கள் ஆய்வாளர்களாகச் சுற்றித் திரிகிறார்கள். அவரின் எந்தப் புத்தகமாவது சர்வதேச அரங்கில் வைக்க முடியுமா? அவர் ஆய்வாளரா? அதிகாரப்பூர்வ வரலாறை சமைப்பதில் இன்று தானினோ போன்றவர்கள் தான் முதல் வரிசையில் நிற்கிறார்கள்.

இடது சாரி ஆய்வாளர்கள் எழுத்தாளர்களுக்கு மாற்றாக இந்திய வலது சாரிகள் முன்னிறுத்தும் அநேகர் வெறும் 'charlatans'. இன்றைக்குத் தமிழ் நாட்டின் ஆகப் பெரிய வலது சாரி சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன், ராஜீவ் மல்ஹோத்ரா ஆகியோர் தான். இவர்களின் எந்தக் கட்டுரையையாவது எந்த உலக ஆய்வரங்கிலாவது ஏற்றுக் கொள்ளப்படுமா? ரோமிலா தாபர், இர்பான் ஹபீப்புக்கு இணையாக வலது சாரிகளில் யாரும் இல்லையே? இங்கேயிருக்கும் வலது சாரிகள் கருணாநிதி, அண்ணாதுரை தரத்தில் தானே இருக்கிறார்கள்.

ஜெயமோகனின் கட்டுரை சம்பந்தமாக இணையத்தில் தேடியபோது 'Centreright.in' எனும் தளத்தில் வெளியானக் கட்டுரை ஒன்றுக் கிடைத்தது. ஜெயமோகன் தாப்பர் பற்றிக் கூறியது, நேருவின் குடும்பத்தோடு திருமண உறவு, தோராட், திம்மைய்யா பற்றியெல்லாம் அதேப் போல் கூறுகிறது. இதுப் போன்ற தளங்களும் அதில் வெளியாகும் கட்டுரைகளும் அவர் வட்டத்தில் பிரசித்தம். அந்த உரையாடலை ஒட்டி ஜெயமோகனும் தன் தகவல்களைத் தொகுத்திருக்கலாம் அதை எம்.ஜி.ஆர் பற்றி எழுதும் போது ஒரு தொகுத்துக் கொண்ட சிந்தனையாகவும் வரலாறுப் பற்றியப் பார்வையாகும் வைத்திருக்கிறார். ஆனால் தளத்தில் வந்தக் கட்டுரை கிசிகிசு வரலாறு அல்ல வெறும் கிசுகிசு. கட்டுரையின் சுட்டி http://centreright.in/2012/03/army-chief-row-will-history-repeat/#.WRef11LMxBw

ஜதுநாத் சர்க்கார் பற்றிய அற்புதமான புத்தகம் ஒன்றில் இந்தியாவில் வரலாறு என்பது கல்வி அமைப்பில் எப்படி மிகச் சமீபத்தில் தான் ஒரு தனித் துறையாக உருவானது என்று சுட்டிக் காட்டப்பட்டது. வி.ஏ.ஸ்மித் போன்றவர்கள் வரலாறாசிரியர்களோ ஆய்வாளர்களோ அல்ல. அவர்கள் காலனி அரசில் பணியாற்றியவர்கள் அவ்வளவே. வரலாறை ஒரு துறையாக அங்கீகரித்து அதற்கான வல்லுநர்கள் உருவானது மிகச் சமீபத்தில் என்கிறார் அந்த ஆசிரியர். இந்தியாவில் இன்னமும் வரலாறு படாதபாடு படுகிறது. ஆளுமைகளைப் பற்றியோ, இந்தியாவின் வரலாறுப் பற்றியோ சொல்லப்படும் நேர்மையான கருத்துகள் பல, அதுவும் கடந்த 20 வருடங்களில், பெரும் எதிர்ப்பைச் சந்திக்கின்றன. பற்பல செய்திகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதாலேயே வரலாறு உண்மைகளாக இன்றும் இந்தியர்கள் மனத்தில் நின்று விட்டது. ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்தார் என்பது, பெரியார் வைக்கம் வீரர் என்பது ஆகியவை இன்றைக்கும் சராசரியான தமிழன் மட்டுமல்ல தன்னை வரலாறாசிரியர் என்று அழைத்துக் கொள்ளும் சலபதி போன்றவர்களும் செய்வது தான். சில சமயங்களில் ஜெயமோகனே அதைக் குறித்தெல்லாம் எழுதும் போது எதிர்ப்புகளைச் சந்தித்து இருக்கிறார்.

இன்று இரு வகை வரலாறுகள் இருப்பதாக ஜெயமோகன் சொல்கிறார். ஒன்று, அதிகாரப் பூர்வ வரலாறு, இரண்டு கிசு-கிசு வரலாறு. இல்லை. வரலாறு என்றும் ஒன்று தான். உண்மை தான் வரலாறு. உண்மையைக் கண்டடைதல் ஒரு பயணம், புத்தகங்கள் அதை நோக்கிய பயணம். நேர்மையற்ற கிசு கிசுக்கள் அப்பயணத்தில் மைல்கற்கள் அல்ல அவை பயணத்தைத் தடம் புரளச் செய்பவை.

இந்த இரண்டாம் வகை வரலாறுத் தோல்வி அடைந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டவர்களும் எழுதுவது என்கிறார் ஜெயமோகன். இது, ஜெயித்தவன் எழுதுவது வரலாறு ஆகிறது என்கின்ற க்ளீஷேவை புரட்டிப் போட்டுச் சொல்கிறது. தோல்வி அடைந்தவர்களும், புறக்கணிக்கப்பட்டவர்களும் மிக நேர்மையாக ரத்தம் தோய்ந்து எழுதியது தான் வரலாறு என்று கௌரவிக்கப்பட வேண்டும் மற்றதை நிர்தாட்சயனமாக நிரகரிக்க வேண்டும். சோல்சினெட்சின் எழுதியதையும் மத்தாய் எழுதியதையும் வெவ்வேறு வகை வரலாறு என்பது சோல்சினெட்சினை செறுப்பால் அடிப்பதற்குச் சமம். ஜெயித்தவனோ தோற்றவனோ எழுதுவதல்ல வரலாறு. எதில் உண்மை இருக்கிறதோ அது வரலாறு என்று மதிக்கப்பட வேண்டும்.

பி.கு: இந்தக் கட்டுரையில் ஒரு மிகப் பெரிய ஆறுதல் நேருவை நேரடியாகத் தாக்கவில்லை.

ஜெயமோகனின் கட்டுரை: http://www.jeyamohan.in/98396#.WReTWVLMxBw

Recommended Reading:

1. War and Peace in Modern India - Srinath Raghavan. My review is here http://contrarianworld.blogspot.com/2017/01/war-and-peace-in-modern-india.html
2. India's China War - Neville Maxwell
3. Protracted Contest: Sino-Indian Rivalry in the Twentieth Century -- Garver Joh
4. The Cold War in South Asia: Britain, the United State and the Indian Subcontinent, 1945-1965 -- Paul M. McGarr
5. The Global Cold War -- Odd Arne Westad
6. The Cold War on the Periphery: The United States, India and Pakistan -- Robert J. McMahon
7. The United States and India, Pakistan, Bangladesh - W. Norman Brown
8. Comrades at odds: The united States and India 1947-1964 -- Andrew J. Rotter
9. The Calling of history: Sir Jadunath Sarkar and his empire of truth -- Dipesh Chakrabarthy
10. JFK's forgotten crisis: Tibet, the CIA and the Sino-Indian war -- Bruce Reidel. My review is here http://contrarianworld.blogspot.com/2016/03/jfk-nehru-tibet-cia-and-sino-indian-war.html
11. Army and Nation: The military and Indian democracy since independence -- Steven Wilkinson. My review is here http://contrarianworld.blogspot.com/2016/05/army-and-nationthe-military-and-indian.html

Other References:
1. Book Review of Romila Thapar's 'Somanatha' -- http://contrarianworld.blogspot.com/2016/05/somanatha-temple-mahmud-of-ghazni.html
2. Bharat Mata ki Jai (and review of Sumathi Ramaswamy's 'The goddess and the Nation: Mapping mother India'. Published by Duke University) -- http://contrarianworld.blogspot.com/search?q=Bharat+Mata
3. Article in Hindu that speaks of General Thapar's role http://www.thehindu.com/opinion/lead/In-dubious-battle-at-heaven’s-gate/article12557779.ece
4. India Today article on Henderson-Brooks report released by Neville Maxwell http://indiatoday.intoday.in/story/the-guilty-men-of-1962-india-china-war-jawahar-lal-nehru-krishna-menon/1/350080.html
5. General Thapar https://en.wikipedia.org/wiki/Pran_Nath_Thapar
6. Article on leaked Henderson-Brooks report http://www.sunday-guardian.com/investigation/army-generals-not-nehru-and-krishna-menon-responsible-for-62-war-defeat