Thursday, March 29, 2018

பெர்னினி, மிக்கெலேஞ்சலோ, மேற்கத்திய சிற்பங்கள்: ஒரு குறிப்பு

யாரோ ஜெயமோகனிடம் "கலையுணர்வற்றவை, பரோக் [Baroque art] பாணியைச் சேர்ந்தவை" என்று சொல்லியிருக்கிறார்கள் அதுவும் இந்திய சிற்பங்கள் அவ்வகையைச் சார்ந்ததென்று. ஜெயமோகனும் அக்கருத்து மேற்கத்தியவர்களால் கட்டமைக்கப்பட்டது என்கிறார். ச்சே இந்த மேற்கத்தியவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இந்திய சிற்பங்கள் பரோக் வகையைச் சார்ந்ததா என்று எனக்குத் தெரியாது ஆனால் கலையற்றவை பரோக் பாணியைச் சேர்ந்தவை என்று மேற்கத்தியவர்கள் சொல்லியிருக்கா வாய்ப்பு மிகக் குறைவு ஏனென்றால் செவ்வியல் இசை முதல் சிற்பக் கலை, கட்டிடக் கலை வலை 'பரோக்' வகையறா அலாதியான நுட்பங்கள் கொண்டவற்றைத் தான் குறிக்கும் சொல். பாக் (Bach), இசையும் பெர்னினியின் சிற்பங்களும் இந்த வகைக் கலையம்சத்தின் முக்கிய உதாரணங்கள். சென்ற வருடம் இத்தாலிப் பயணத்தின் போது நான் அதிகம் நினைத்தது பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் ஜெயமோகனை. ஜடாயுவையும் கூட நினைத்துக் கொண்டேன் வாடிகன் முழுக்க விரவியிருக்கும் பாகனிய குறியீடுகளுடைய கலைப் பொக்கிஷங்களைக் கண்ட போது. அங்கிருந்து ஜெயமோகனுக்குக் கடிதமும் எழுதினேன் ஏனென்றால் அந்தச் சமயத்தில் ஏதோ ஒரு பதிவை அவர் எழுத அது சம்பந்தமாக மறுப்பு எழுதினேன். பயணக் குறிப்புகள் எழுத நினைத்து வெவ்வேறு சண்டை சச்சரவுகளில் மாதங்கள் ஓடி விட்டன. இரண்டு, மூன்று பதிவுகளாவது எழுத உத்தேசம்.

Rape of Proserpina
ரோமின் மிக முக்கியமான கலைக் கூடம் 'வில்லா போர்கீஸீ' (Villa Borghese). அங்கே பெர்னினி ( Bernini) வடிவமைத்த சிற்பம் 'Rape of Proserpina'. புளூட்டோ என்கிற கடவுள் ப்ரோசெர்ப்பினாவை கவர்ந்து செல்லும் போது ப்ரோசெர்ப்பினா புளூட்டோவின் பிடியில் இருந்து விலகி கேசம் அலைப்பாயக் கண்ணில் நீர் வழிய தவிக்கும் காட்சியைத் தத்ரூபமாக வடிவமைத்திருப்பார் பெர்னினி. அதிலும் அந்த ப்ரோசெர்ப்பினாவின் செழுமையும் தின்மையுமான தொடையில் கை விரல்கள் பதிந்திருப்பதைச் சிற்பத்தில் கொண்டு வந்திருப்பது தான் ஹைலைட். இந்தச் சிலையைப் பார்த்தப் போது பல எண்ணங்கள் தோன்றின.


பெர்னினி கத்தோலிக்கக் கோயில்களுக்கும், வாடிகனுக்கும், ரோம் நகருக்கும் போப்புக்காகவும் மற்றவர்களுக்காகவும் சிலைகளை வடிவமைத்தவர். அவரே இப்படி ஒரு கற்பழிப்புக் காட்சிக்கும் சிலை அமைத்திருக்கிறார் என்பது விசேஷம். மேற்கத்திய இலக்கியம் மற்றும் கலைகளில் கற்பழிப்புகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இது எனக்கு விநோதமாகத் தோன்றியது. இச்சிலையைப் பார்த்தப் போது தான் ஷேக்ஸ்பியர் லுக்ரீஸின் கற்பழிப்பு (Rape of Lucrece) பற்றி எழுதிய கவிதையும், ரோமாபுரி கட்டமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சபைன் இனப் பெண்கள் கூண்டாகக் கற்பழிக்கப்பட்டதையும் (Rape of Sabine Women) முக்கிய ஓவியர்கள் வரைந்துள்ளார்கள் அவை ரோம் நகர அருங்காட்சியகங்களில் காட்சி படுத்தப்பட்டிருக்கின்றன. மேற்கத்திய கலை மற்றும் அறிவுத் தளம் தரும் கிளர்ச்சி அலாதியானது. பெர்னினி, கரவாஜ்ஜியோ, மிக்கெலேஞ்சலோ, ரஃபேல் என்று ஒவ்வொரு ஓவியமும், சிலையும் ஒரு பண்பாட்டில் இருந்து துளிர்த்த மாபெரும் சிருஷ்டிக் கர்த்தாக்களின் வாழ்க்கை வரலாறும் அதனூடாக வரும் பண்பாட்டு வரலாறும் படித்தறிய நமக்குக் கிடைப்பது இவ்வனுபவங்களை வேறொரு தளத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்தச் சிலைகள் வடிவமைத்தவன் பற்றியும் ஒன்றுமே தெரியாது, அவை வடிவமைக்கப்பட்ட சூழல் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும், யார் இதைச் செய்விக்கப் பணம் திரட்டினார்கள், அதிலுள்ள சண்டை சச்சரவு ஆகிய எது பற்றியும் செவி வழி செய்திகளும் வரலாற்றுத் துணுக்குகளுமே இருந்தால் அது தரும் அனுபவம் வேறு. எனக்கு இரண்டாம் வகைக் கொஞ்சம் சப்பென்று இருக்கிறது. பெர்னினி வடிவமைத்த இன்னொரு சிலை 'பியாட்ஸா நவோனா' (Piazza Navona) என்கிற சதுக்கத்தில் இருக்கிற நான்கு நதிகள் சிற்பங்களின் தொகுப்பு. உலகின் நான்கு நதிகளைக் குறிக்கும் சிலைகள் அவை. அதில் கங்கையைக் குறிக்கும் சிலையின் கையில் துடுப்பு இருக்கும் கங்கைப் படகால் கடக்கக் கூடியது (navigable) என்பதைக் குறிக்க.

பெர்னினியின் கங்கை
நாம் மீண்டும் மீண்டும் வெளியுலகினர் இந்தியா பற்றிக் கொண்டிருந்த புரிதல்கள் பற்றி அங்கலாய்க்கிறோம். பெரும்பாலும் கொந்தளிப்பும் தாழ்வுணர்ச்சியும் கலந்தே. பொதுவில் சொல்கிறேன், ஜெயமோகனை சொல்லவில்லை. இந்தியாவைச் சரியாகவும் மிகுந்த மதிப்போடும் புரிந்து கொண்ட மேற்கத்தியர்கள் அநேகம், அநேகம், அநேகம். அதை விட முக்கியம் மேற்கத்தியர்கள் தங்களைத் தாண்டிய உலகை அவதானிக்கிறார்கள், அது பற்றிய குறிப்புகளைச் சேகரிக்கிறார்கள், தங்கள் கலைகளில் மிகச் சந்தோஷமாக வெளித் தாக்கங்களைச் சுவீகரித்து உருவாக்குகிறார்கள். ரோமாபுரி சிலைகள் முதல் மார்வின் கே இசை வரை இதைப் பார்க்கலாம். இந்தச் சிலைத் தொகுப்புக் கத்தோலிக்கப் போப்பின் கொடையில் உருவாக்கப்பட்டது. சிலையின் மையக் கருத்து நான்கு நதிகளும் சிலை மத்தியில் இருக்கும் ஊசி முனை (obelisk), போப்பை குறிப்பது, சிற்பத்ததின் மீதுள்ள பிரம்மிப்பை வெளிப்படுத்துவது. உடனே, "ஆகா பார்த்தீர்களா போப்புக்குக் கங்கை தலை குனிகிறது" இதை அரவிந்தன் கொண்டாடுகிறார் என்று ஒரு கூட்டம் ஆர்ப்பரிக்கும். ப்ளோரென்ஸ் நகரில் இன்னொரு அதிசயம் கண்டேன். ப்ளோரென்ஸ் நகரில் 'மெடிச்சி பேலஸ்' (Medici Palace) என்கிற இடத்தில் இருக்கும் 'பூகோள வரைப்பட அறை' உலக நாடுகளின் பூகோள வரைப்படங்கள் அடங்கியது. 16-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. இந்தியா பற்றித் துல்லியமான வரைப்படம் இருக்கிறது அங்கே. தமிழகத்து ஊர்கள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. நம்மூர் ராஜாக்கள் யாராவது இப்படியெல்லாம் சேகரித்து இருக்கலாம் ஆனால் அவை இப்படிப் பாதுக்காக்கப்பட்டிருக்காது. தஞ்சை சரஸ்வதி மகாலுக்குப் போயிருக்கிறேன். ப்ளோரன்ஸில் அந்த நினைவு வந்தது. எரிச்சலும் வந்தது. நியூ ஜெர்ஸியில் நான் வசிக்கும் தெருவில் இருந்து பத்து நிமிடத்தில் அமெரிக்காவில் பிரபலமான புத்தகைக் கடையின் கிளை உண்டு. அங்கே இத்தாலியின் சிற்பங்கள், ஓவியர்களின் வரலாறுகள் எல்லாம் எளிதாகக் கிடைக்கும். நான் தஞ்சையில் 25 வருடம் இருந்திருக்கிறேன். அங்கே அப்போது இருந்த ஒரே புத்தகக் கடை 'அப்பர் புக் ஸ்டால்'. கல்லூரிக்குத் தேவையான புத்தகங்கள், கோனார் நோட்ஸ், கொஞ்சம் பாலகுமாரன், கண்ணதாசன், அப்புறம் ஒன்றிரண்டு ஆங்கிலப் புத்தகங்கள் இவை தான் கிடைக்கும். திருச்சி இதை விட ஒரு இழை தான் சிறப்பு. இவ்விரு ஊர்களிலும் மூன்று, நான்கு கலைக் கல்லூரிகள், அநேகப் பள்ளிகள், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உண்டு, பல்கலைக் கழகமும் உண்டு ஆனால் புத்தக நிலையங்கள்? குப்பைக் கூடங்கள். அப்புறம் எங்கிருந்து தஞ்சாவூர் காரனுக்குப் பெரிய கோயில் சிற்பம், ஓவியம் பற்றியெல்லாம் தெரியும்? அன்னாந்துப் பார்த்து 'எப்படிக் கட்டியிருக்கான் பார் ராஜ ராஜ சோழன். சிவாஜி கணேசன் அப்படியே அவனைக் கண்ணு முன்னாடி கொண்டு வந்திருவார்' என்று கலயைப் பாராட்டிவிட்டு, கொஞ்சம் சுண்டலை கோயிலில் வாங்கிக் கொண்டு, கோயிலுக்கு வெளியே சர்பத் குடித்து விட்டு வீட்டுக்குப் போவது வழக்கம். 

இத்தாலியில் பெரும்பாலான கோயில்களில் தல வரலாற்றை, நேர்மையாக, தெரிந்துக் கொள்ள வசதி செய்திருக்கிறார்கள். ஒரு அல்லது இரண்டு யூரோ காசுப் போட்டால் வரலாற்றை பயாஸ்கோப் மாதிரி கருவி சொல்லித் தரும். சியென்னா மாதிரி இடத்தில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட புத்தகங்கள் கோயிலேயே கிடைக்கும், விலைக்குத் தான். அவை அக்கோயிலின் சிற்பங்கள், ஓவியங்களை நமக்குச் சொல்லித் தரும் ஆவணங்கள். முன்பொருமுறை பிரஸ்ஸல்ஸ் அருகில் உள்ள ப்ரூஜ் என்ற நகருக்குப் போயிருந்தேன். அங்கேயிருக்கும் கோயிலில் மிக்கெலேஞ்சலோவின் 'மடோனாவும் குழந்தையும்' சிலையைப் பார்த்தேன். சிலை தந்த பிரம்மிப்பை விட 15-ஆம் நூற்றாண்டில் பல நூறு மைல்கள் தாண்டி வேறொரு தேசத்தில் வேறொரு மொழிப் புழங்கிய நாட்டில் இருக்கும் சிற்ப கலைஞனை நாடி அவனைக் கொண்டு சிலை வடித்து எடுத்துப் போயிருக்கிறார்கள்.

ப்ரூஜ் நகரில் மிக்கெலேஞ்சலோவின் மடோனா


இப்படி ஏதாவது இந்தியாவிலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. திட்டவட்டமாகச் சொல்லலாம். மிக்கெலேஞ்சலோ நமக்குத் தொன்மம் அல்ல. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த அந்த மகா கலைஞனைப் பற்றி நமக்கு அநேக விஷயங்கள் தெரியும் ஏனென்றால் அவன் காலத்திலேயே வாழ்ந்த ஜார்ஜியோ வசாரி என்கிற எழுத்தாளன் எழுதியிருக்கும் வரலாறு கிடைக்கிறது. கவனிக்கவும் இதெல்லாம் 15-ஆம் நூற்றாண்டு. கலை வரலாற்று எழுத்தின் முன்னோடி வசாரி என்கிறது விக்கிப்பீடியா. ஒரு சாதாரணக் கோயில் மாடிப்படி வரலாற்று முக்கியத்துவம் பெற்று விடுகிறது ஏனென்றால் அதை வடிவமைத்தது பெர்னினி. அந்த மாடிப்படியின் விசேஷம் என்னவென்றல் சுழல் மாடிப்படிகளில் (spiral staircase) முதுகெலும்பாக ஒரு தூண் இருக்க வேண்டும் அப்போது தான் அது வலுப் பெற்று நிற்கும் ஆனால் நத்தை ஓட்டின் சுழற்சியை ஒத்த வடிவில் அமைத்த அந்த மாடிப்படியில் அப்படி இருக்காது. இதைச் சுட்டிக் காட்டவும் அது பற்றிப் பேசி பிரபலமாக்குவதும் தான் இங்கே முக்கியம். இணையத்தில் 'Bernini staircase' என்று தேடினால் உடனே சாண்டா மரியா மஜ்ஜியோரே (Santa Maria Maggiore) என்ற கோயிலுக்குள் இருக்கும் இந்த மாடிப்படியின் படம் கிடைக்கிறது. அப்படிப் பிரபலமாவதற்கு எத்தனை ஆண்டுகளாக இது பேசப்பட்டிருக்க வேண்டும்?

பெர்னினி வடிவமைத்த படிக்கட்டு
மிக்கெலேஞ்சலோ, கரவாஜ்ஜியோ இவர்களை மையப்படுத்தியே தனிப் பதிவுகள் எழுதலாம். ப்ளோரென்ஸின் 'உஃப்ஃபிஸி கேலரி' (Uffizi Gallery) ஒரு வரலாற்றுப் பெட்டகம். ஒவியங்கள் வழியாக மேற்குலகின் முக்கிய நகரின் கலாசார பண்பாட்டு வரலாற்றையே எழுதி விடலாம். பி.ஏ.கிருஷ்ணனையும், ஜெயமோகனையும் அதிகம் நினைவுக் கூர்ந்த இடம் அது. ஓவியத்தில் உயர் குடிப் பெண்களுக்கு மிகவும் மேலேறிய மோட்டு நெத்தி இருப்பதாக சித்தரிக்கப்படும் என்பதை எடுத்துக் காட்டோடுப் பார்த்த போது நானறிந்த பெண் ஒருவரை நினைத்துக் கொண்டேன்.

கலிலேயோவும் வாடிகனும் மோதிக் கொண்டதும் கலிலேயோ முடக்கப்பட்டதும் பிரசித்தம். ஆனால் பலர் ஆறியாதது பிளோரன்ஸ் நகரின் மிக முக்கிய கத்தோலிக்க கோயிலில் பிரதான இடத்தில் கலிலேயோவும் மிக்கெலேஞ்சலோவும் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். வாடிகனுடனான மோதலால் கிறிஸ்தவ முறைப்படி புதைக்கப்பட அனுமதி மறுக்கப்பட்ட கலிலேயோ அவர் இறந்து 95 வருடங்கள் கழித்து கோயிலேயே புதைக்கப்பட்டார். ஐரோப்பா கலை மற்று வரலாற்றை நேசிப்பவர்களுக்கு, கையில் காசும் இருந்தால், பல மாதங்களைச் சுற்றிப் பார்த்து பரவசமடைய எத்தனையோ. சாதாரண பேஸ்புக் குறிப்பாக எழுத ஆரம்பித்தது ஒரு பதிவாகவே மாறிவிட்டது. ரொம்ப நாள் கிடப்பில் போட்ட இந்தப் பதிவுகளைத் தொடர்வதற்கு இன்று ஒரு ஆரம்பம். ஆரம்பத்துக்கு காரணம் ஜெயமோகனே !!! ஜெயமோகனுக்கு நன்றி.

Reference:


Tuesday, March 13, 2018

"நீர் ஒரு பிராமணனா?" - ஜெயகாந்தனும் வர்ணாசிரமும்.

வர்ணாசிரமம் என்பது நெகிழ்வுத் தன்மை கொண்டது, உறைந்தது அல்ல மேலும் அது வேறு ஜாதி அமைப்பு வேறு என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எதையோ பிடிக்கப் போய்க் குரங்கானது வர்ணாசிரமம் என்பது தான் சரி.  இதற்கு முதல் உதாரணம் ஜெயகாந்தனே தான்.

ஜெயகாந்தன் கம்யூனிஸ்டா என்றே ஒரு விவாதம் செய்யலாம். அவர் கம்யூனிஸம் பேசினார், மார்க்ஸை படித்தார், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார் என்பதெல்லாம் சரி ஆனால் அவர் கம்யூனிஸ்டா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவர் காந்தியை, நேருவை, தேசியவாதத்தைப் போற்றினார் என்பதால் மட்டும் அப்படிச் சொல்லவில்லை. அவர் ஜாதி அமைப்பை ஆதரித்தார், வர்ணாசிரமத்தை 'சுரண்டல் அற்ற' அமைப்பு என்றார். ஜாதி ஒழிப்பில் நம்பிக்கையுமில்லை என்றார். அவர் மார்க்ஸையும் ஜாதிய அமைப்பையும் புரிந்துக் கொண்டாரா என்றே கூடக் கேட்கலாம்.

சென்னை நகரின் கார்ப்பரேஷன் தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்றது (1950s). முக்கியக் காரணங்களுள் ஒன்று ராஜாஜியின் சுதந்திரா கட்சியினர் பிராமணர்களைத் திமுக நோக்கி இழுத்தது. பிற காரணங்களும் உண்டு. தமிழ் நாட்டு பிராமணர்களுக்கு அன்று இன்றும் ராஜாஜி ஓர் ஆதர்சம் தான்.

தோல்வியுற்ற தேசிய அணி பிராமணர்களையும், இஸ்லாமியரையும் தூற்றியது என்கிறார் ஜெயகாந்தன். 'முஸ்லிம்களும், பிராமணர்களும் இந்தத் தேசத்துக்கு எப்போதுமே துரோகிகள்' என்று மேடைகளில் பகிரங்கமாகப் பேசப்பட்டது என்கிறார் ('ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்'). இந்தப் பொய்யுரைக்கு எதிர் வினை ஆற்றுவதற்காகச் 'சென்னை நகரில் பிராமண வகுப்பினர் அதிகமாய் வாழுகின்ற மாம்பலத்தில் தென் சென்னை பிராமண இளைஞர்கள் மாநாடு ஒன்றைக் கூட்ட அவர்கள் முடிவு செய்தனர்'. அம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற ஜெயகாந்தன் அழைக்கப் பட்டார். மாநாடு கிருஷ்ண கான சபையில் நடைப் பெற்றது (1950-களில் கர்நாடக சங்கீத சபாக்கள் ஜாதிகளை ஒட்டி இடம் பெயர்ந்தன என்ற அமெண்டா வீட்மெனின் குறிப்பு இதைப் படித்த போது நினைவுக்கு வந்தது). அடுத்து வரும் செய்திகள் ஜெயகாந்தனின் நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

காலையில் பிரதிநிதிகளின் கூட்டம் என்றும் தான் பார்வையாளனாகப் போயிருந்ததாகவும் ஜெயகாந்தன் சொல்கிறார். திமுக, சுதந்திரா கட்சி ஆதரவாளர்களும் அக்கட்சிகளுக்கு ஆதரவான பிராமணர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள். அம்மாநாட்டைப் பிராமணர்கள் மாநாடு என்று அழைக்கலாமா என்று கேள்வி எழுந்த போது மாநாட்டு ஒருங்கினைப்பாளர்கள் ஜெயகாந்தனை மேடைக்கு அழைத்து விளக்கச் சொன்னார்கள். ஜெயகாந்தன் அம்மாநாடு 'குறிப்பிட்ட சமூகத்தினரை ஒரு தேர்தல் தோல்விக்குப் பொறுப்பு என்று குற்றம் சாட்டுவதை'ச் சுட்டி அதை மறுக்கவே கூட்டப்பட்டது என்கிறார்.

மேலும் பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை ஜாதி ஒழிப்புக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். ஜாதிகளுக்கிடையே பேதங்களும் பகைமையும் நிலவுவதையே மாற்ற வேண்டும்" என்கிறார். பேதங்கள் இருந்தால் தான் ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட முடியும் என்பது அடிப்படை அறிவியல் விதி. பிராமணன் இதைச் செய்ய வேண்டும், சத்திரியன் அதைச் செய்ய வேண்டும் என்ற பேதமில்லாவிட்டால் அப்புறம் அங்கே ஜாதி எதற்கு? ஜெயகாந்தனும் காந்தியும் வழுக்கிய இடம் வர்ணாசிரமம்.

இப்படி அவர் பேசிக் கொண்டிருக்கையிலே சலசலப்புகளை அடக்கும் விதமாகவும் எதிர்ப்பாளர்களின் குரலாகவும் கேள்விகள் ஆங்காரத்தோடு கேட்கப்பட்டது, "நீர் ஒரு பிராமணனா? இந்த மாநாட்டில் நீர் எப்படிக் கலந்து கொள்ளலாம்?". பிராமணப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் பேசலாமா என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்கப்பட்டது. மாநாட்டு ஒருங்கினைப்பாளர் ஒருவர் "ஜெயகாந்தன் பிராமணன்தான்" என்று தவறாகச் சொன்னாராம். இதை ஜெயகாந்தன் "தவறாக அறிந்திருந்த விஷயம்" என்று குறிப்பிடுகிறார். இல்லை. படித்தவனும், இலக்கையம் படைப்பவனும் பிராமணனாகவே இருக்கக் கூடும் என்ற மனச்சாய்வின் வெளிப்பாடு அது. அக்காலத்தில் இலக்கியவாதிகள் பலரும் பிராமணர்கள் என்பதும் காரணம். அம்பேத்கரை சந்தித்த காந்தி அவரைப் பிராமணர் என்று எண்ணி விடுகிறார். படித்து, கோட்டும், சூட்டும் போட்டிருந்தாரே!!!



மாலையில் நடந்த 'Open forum'இல் ஜெயகாந்தன் கிட்டத்தட்ட 'யார் பிராமணன்' என்றே பேசினார். "பிராமணன் என்பவன் யார்? இங்குள்ளவர்களில் யார் பிராமணன்?". அவர் பேசியதை மேற்கோள்களிலும் என் எதிர் வினைகளையும் சேர்த்தே தருகிறேன்.

"நான் பிறவியில் பிராமணன் அல்லன். நான் வேளாளர் மரபில் பிறந்தவன். அதாவது சூத்திரன். இந்த வார்த்தையில் எனக்கு அவமானமோ ஆத்திரமோ இல்லை. சூத்திரன் என்பவன் நால்வருண அமைப்பின் அடிப்படை, அவனே வருணாசிரம தர்மத்தின் 'சூத்திர'தாரி."

ஜெயகாந்தனுக்குத் தன்னைச் சூத்திரன் என்று பிரகடனப் படுத்திக் கொள்வதில் சங்கடமோ அவமானமோ இல்லை என்பது அவர் சமூகத்தில் அடைந்திருக்கும் முதன்மைக்கும் அவருக்கு அவர் மீதே இருக்கும் மதிப்பீடும் காரணம். சமூகம் என்பது ஜெயகாந்தன்களை மட்டுமே உள்ளடக்கியது இல்லை. தலித் வியாபார எஜமானர்கள் கூடத் தங்கள் ஜாதியை பிரகடனப் படுத்திக் கொள்ள முனைவது இல்லை என்பது நிதர்சனம். காரணங்களை யூகிக்கக் கூட வேண்டாம். மேலும் சமூகக் கட்டமைப்பில், வர்ணாசிரம அமைப்பில், வேளாளர்கள் என்பவர்கள் தலித்துகளை விட மேலானவர்கள் ஆதலால் பொத்தாம் பொதுவாக 'நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வதால் அவருக்கு மற்றவர்களின் அனுபவமோ அல்லது வலியோ இருந்திருக்காது. ஜெயகாந்தன் மேற்கொண்ட வாழ்வு பலரின் வாழ்வு அல்ல. ஒரு பள்ளியிலோ, அலுவலகத்திலோ அவர் வாழ்க்கையைச் செலவிட்டிருந்தால் அந்த அமைப்பின் மிருகத் தன்மை விளங்கியிருக்கும். பள்ளியில் பொதுக் குழாயில் தண்ணீர் அருந்தியதற்காகத் தனம் என்ற ஆறு வயது சிறுமியை பிரம்பால் வாத்தியார் விளாச குழந்தையின் கண் பாதிக்கப்பட்டது. என்பதுகளில் விகடன் இச்செய்தியை வெளியிட அந்த ஏழைக் குழந்தைக்குப் பார்வைக் கிடைக்கக் கமல் உதவினார். பரதம் பயிலும் இடத்தில் பிராமணரல்லாத மாணவி "சூ குட்டி" என்று அழைக்கப்பட்டதைப் பிராமண நண்பர் நினைவு கூர்ந்தார்.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் படித்துப் பட்டம் பெற்ற அம்பேத்கர் அவர் வேலைப் பார்த்த அலுவலகத்தில் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அவ்வளவு தூரம் போக வேண்டாம். 40-கள், 50-களில் பள்ளிகளில் பயின்ற தாழ்ந்த ஜாதியினரைக் கேட்டுப் பாருங்கள். நண்பர் ஒருவர், தலித், மத்திய அரசு பயிற்சி நிலயத்தில் அவருக்குக் கணிதப் பாடத்தை ஒதுக்க ஆசிரியர்கள் தயங்கினர் என்கிறார். இதெல்லாம் தான் நிதர்சனம். இந்த நெகிழுவுத் தன்மை, விஸ்வாமித்திரன் பிரம்ம ரிஷி ஆனான் என்பதெல்லாம் தொன்மம் சரித்திரமல்ல.

சூத்திரர்கள் நான்கு வருணத்திற்கும் 'சூத்திரதாரி' என்று சொன்னால் நான்கு வருணத்தில் சேராத அவர்ணத்தை என்னவென்று சொல்வது? புருஷ சூக்தத்திற்கு அப்பைக் கட்டுச் சப்பைக் கட்டுகிறார்கள் பலர். காந்தி உள்பட. உடம்புக்கு எல்லாப் பாகமும் முக்கியம் காலிலிருந்து வந்தவர்கள் என்று சொன்னால் கேவலமில்லை என்பது பசப்பு. முடமாக ஒருவன் வாழ முடியும், முண்டமாக வாழ முடியுமா? தலையை இன்னொருவர் காலின் முன்பு தாழ்த்துவது அதிகப் பட்ச மரியாதை என்பதால் தானே?

"பிறவியில் சூத்திரனான நான், கடமையில் பிராமணனின் தொழிலைச் செய்கிறவன்" என்று அந்த பிராமணர்கல் அடங்கிய சபையில் சொல்கிறார் ஜெயகாந்தன். சொல்லிவிட்டு, முன்பொருமுறை ஈ.வெ.ரா இருந்த மேடையிலேயே அவரை எதிர்த்து மஹாபாரத, சமஸ்கிருதம், பிராமணர்களின் மேன்மை அகியவற்றை, "ஓர் உண்மையான பிராமணனுக்கே உரிய ஞானாவேசத்தோடு கொதித்தெழுந்து அவரை நான் மறுத்துரைத்துப் பேசினேனே, அப்போது வந்து என்னை யாரும் கேட்கவில்லையே, 'உனக்கென்ன போயிற்று? நீ பிராமணனா?" என்று யாரும் கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டதாகவும் சொல்கிறார். இந்த இடம் மிக மிக முக்கியம்.

திருச்சி மாநாட்டில் ஈ.வெ.ரா முன் பேசிய உரையை இந்த இடத்தில் அவர் நீளமாக நினைவு கூர்கிறார். அது இங்கே தேவையில்லாதது. பிராமணச் சங்க மாநாட்டில் பேசியதை தொடரும் முன் அப்போது எழுந்த மன ஓட்டத்தைச் சொல்கிறார். தனித் தமிழ் இயக்கத்தினர் எழுத்தாளர் சங்கத்தில் நுழைந்து ஆக்கிரமித்த போது அதை எதிர்த்ததையும் அதற்காக "பார்ப்பன அடிதாங்கி", "இவனும் ஒரு அக்ரஹாரம் தான்' என்றும் வசைப் படப்பட்ட போது "'இல்லை' என்று சொல்லி ஓடாமல்" இருந்தததையும், அப்போதெல்லாம் ''நீ பிராமணனா?' என்றுக கேள்வி எழவில்லை என்றும் நினைத்துக் கொண்டாராம்.

(சுய புராணம்: நான் என்றுமே என்னை எழுத்தாளன் என்றெல்லாம் எண்ணிக் கொள்வதில்லை. அதெல்லாம் என் தகுதிக்கு மிக மிக அதிகம். ஆனால் மேலே சொன்னதோடு கொஞ்சம் தொடர்புடைய செய்தி. இணையத்திலும், சமூக வலைத் தளத்திலும் பிராமணத் துவேஷத்தையும், ஈ.வெ.ராவையும் மிக மிகக் கடுமையாக விமர்சித்து தொடர்ச்சியாக எழுதும் போதெல்லாம் என்னை நோக்கி, 'நீ என்ன எழுதினாலும் அவர்கள் உன்னைப் பிராமணனாக ஏற்க மாட்டார்கள்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பிராமண எழுத்தாளரும் கிண்டலாக அதை வெளிப்படவையாகவே எழுதினார். அவர்கள் என்னை ஏற்க வேண்டுமென்று எதையும் எழுதுவதில்லை ஆதலால் அப்படிச் சொல்பவர்களை நகைப்போடு கடந்து விடுவேன். யூதர்களைப் பற்றியும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட பேரழிவுப் பற்றியும் எழுதுயிருக்கிறேன். ஆஷ்விட்ஸ் போயிருக்கிறேன். அதற்காக நான் என்ன யூதனாகவா நினைக்கிறேன்? இல்லை. நேர்மையாக எழுத வேண்டும் என்பது தான் குறிக்கோள். தமிழ் பிராமணர்கள் பலரும் இன்று இந்துத்துவர்கள் அவர்களுக்கு நான் இந்துத்துவத்தை எதிர்த்து எழுதும் போதெல்லாம் ஈவெராவை விமர்சிக்கும் போது கேட்காத கேள்விகள் வரும். "நீ இந்துவா" என்பார்கள்)

பிராமணர்களை "பூணூலைப் பிடித்துக் கொண்டு" திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னதற்காக ராஜாஜியை கண்டித்ததாலேயே தன்னைப் பார்த்து " 'இதைச் சொல்ல நீ யார்? பிராமணனா?'" என்று கேட்பவர்களை அப்படிக் கேட்பது "என்ன பிராமணத் தர்மம்" என்கிறார். அது தான் வர்ணாசிரம தர்மம் என்பது ஏனோ ஜெயகாந்தன் என்கிற கம்யூனிஸ்டுக்குப் புரியவில்லை. இரண்டு பிராமண வீடுகள் அல்லது இவர் பிறந்த ஜாதி தவிர்த்த வேறெந்த வீட்டிலும் இவர் பெண் கேட்டுப் போயிருந்தால் அவருக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கக் கூடும்.

அதன் பிறகு ஜெயகாந்தன் பேசுவதெல்லாம் பெரும்பாலும் அங்கலாய்ப்பு தான். ஆதி சங்கரர் சண்டாளனை குரு என்றது, பாரதி கனகலிங்கத்துக்குப் பூணூல் போட்டது என்று வெறும் அங்கலாய்ப்புகள். பாரதி, காந்தி ஆகியோரின் எண்ணங்கள் நேர்மையானவை, இதயம் சுத்தம், ஆனால் அவர்கள் தலித்துகளைப் பற்றியும் அவர்களை மேம்படுத்துவது பற்றியும் கொண்டிருந்த எல்லாப் பார்வைகளையுமே அறிவு பூர்வமாக ஏற்க இயலாது. கனகலிங்கத்தின் தேவை பூணூல் அல்ல மனிதனாக மதிக்கப்படும் அடிப்படை மரியாதை தான்.

திருச்சி மாநாட்டில் தன்னை மறுத்துப் பேசிய 24 வயதே ஆன ஜெயகாந்தனை மிகப் பண்போடு ஈ.வெ.ரா நடத்தினார் என்பதைச் சொல்லிவிட்டு, "நீங்க பிராமணப் பிள்ளையா" என்று அவர் கேட்டதாகவும் இல்லை என்று சொன்னதும் "ரொம்பச் சந்தோஷம்" என்று ஈ.வெ.ரா சொன்னதாகவும் சொல்கிறார் ஜெயகாந்தன். அடுத்து அவர் எழுதுவது சுவாரசியமானதும் முக்கியமானதும்.

எழுத்தாளனாக இருப்பதாலும் அவர் பேசும் விதத்தினாலும், தேசியம் மற்றும் பிராமண ஆதரவு, பிராமணராகப் பார்க்கப்பட்டார் ஜெயகாந்தன். பலர் அவரிடம் "நீங்கள் பிராமணரா" என்று கேட்டிருக்கிறார்கள். "எத்தனை சந்தர்ப்பங்களில், எத்தனை விதமான மனிதர்களால் இதே கேள்வி என்னை நோக்கித் திரும்பத் திரும்பக் கேட்கப் பட்டிருக்கிறது" என்கிறார்.

குலங்களும், தொழில்களும் நெகிழ்வுத் தன்மையோடு சரமாரியாகப் பல நூற்றாண்டுகளாக ஏற்றமும் இறக்கமும் பெற்றிருந்தால் அந்தக் கேள்வி வந்திருக்காது. ஆனால் நடந்தது அது இல்லையே. இதை ஏன் மீண்டும் மீண்டும் மழுப்புகிறார்கள்? இந்தியா போன்ற ஒரு பெரு நிலத்தில் ஒரு மிக நீண்ட வரலாறில் எந்த வழக்கமும் மாறாமலேயே 100 சதவீதம் தேசம் முழுதும் பின்பற்றப்பட்டிருக்க முடியாது. ஆங்காங்கே சில மாறுதல்களும் சில மாற்றங்களும் இருந்தன. ஆனால் பொத்தாம் பொதுவாக நெகிழ்வுத் தன்மை இருந்தது என்பது அதீதம். அப்படிப்பட்ட நெகிழுத் தன்மையில்லாமல் பல நூற்றாண்டுகளாக நீடித்ததே வர்ணாசிரமத்தின் பெருமையும் கீமையும். இப்படியொரு சிக்கலான வரலாற்றில் பிராமணர்கள் மட்டுமே படித்தவர்கள் என்று நினைத்துக் கொள்வது முட்டாள் தனம். அப்படி நடக்கவில்லை. ஆனால் அதற்காக எல்லோரும் ஒருவர் தோள் மீது இன்னொருவர் கையைப் போட்டுக் கொண்டு சகஜமாக இருந்தார்கள் என்ற ரீதியில் பேசுவதும் சரியல்ல.

ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய சமீபத்திய விவாதத்தின் போது ராஜ்மோகன் காந்தி எழுதிய நூலை புரட்டினேன். ராஜாஜியின் மனைவி மிகச் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்த சிறுமி. இள வயதில் இறந்தும் விடுகிறார். அவர் அநேகமாக நடுநிலை பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். அவர் குடும்பத்தினரும் அப்படியே. ஆனால் அவருக்குத் தெரிகிறது யாசகமாகக் கொடுக்கும் போது பிராமணருக்கு அரிசியையும் மற்றவர்களுக்கு வரகு, கம்பு போன்றவை தான் என்று. அவருக்கு அந்த அறிவைக் கொடுத்தது எது?

21-ஆம் நூற்றாண்டில் ஒரு முதலியார், மருத்துவர், பொறியியல் படித்த தன் பெண்ணுக்கு வரக் கூடிய முதலியார் பையன் மூன்று தலைமுறைக்கு எந்தக் கலப்படமுமில்லாத முதலியாராக இருக்க வேண்டும் என்று சிநேக பாவத்தோடு சிரித்துக் கொண்டே சொன்னார் என்னிடம். வேறொரு நண்பர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அவரைக் காண தலித் ஒருவர் வீட்டுக்கு வந்து விட்டுப் போன பின்பு அவர் உறவினர் கேட்டாராம், "அவனையெல்லாம் முன் வாசல் வழியாகவா அனுமதித்தாய்". இதெல்லாம் எங்கோ 8-ஆம், 10-ஆம் நூற்றாண்டில் அல்ல இன்று நடந்தவை.

வெள்ளாளரும் மறவரும் கிறித்தவர்களான பின் மதம் மாறிய தலித்துகள் மதம் மாறிவிட்டதாலேயே புதிய உரிமைகளைக் கோரிய போது நீதி மன்றத்துக்கே போய் அவர்களுக்கு அந்த உரிமைகள் இல்லை என்று, இந்து மத வழக்கங்களை மேற்கோள் காட்டி, வென்றனர். இன்றும் கிறித்தவர்களிடையே தலித்துகளின் உரிமைகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது உண்மை. தலித்துகளிடையேவும் இந்த ஏற்றத் தாழ்வுண்டு. அம்பேத்கர் அழகாகச் சொன்னார், "A progressive order of reverance and a graded order of contempt" என்று. இப்படி ஒரு படி நிலை தத்துவம் இவ்வளவு வேரூன்றி இவ்வளவு பரவலாக இத்தனை நூற்றாண்டுகளாக இருப்பது வேறெந்த கலாசாரத்திலும் கிடையாது என்றே நினைக்கிறேன்.

எங்கள் வீடு மற்றும் இந்து உறவினர்கள் வீடுகளில் "சாதம்" என்றே சொல்வார்கள். "சோறு" என்று சொல்பவர்களை அவர்கள் பார்க்கும் பார்வைச் சொல்லும் வர்ணாசிரமத்தின் நெகிழ்வுத்தன்மையின் அலாதி வரலாறை. குழம்பை சாதத்தில் பிசையும் முறையில் கூடச் சாதிய எள்ளல் இருக்கும். "தொம்பன் குடிசை மாதிரி" என்ற சாதிய வசை மிகச் சாதாரணமாக வீசப்படும். அமெரிக்காவில் 35 வருடங்களாக வாழ்ந்து மிக உயரத்தை எட்டிய என் உறவினர் 2015-இல் இந்தியா போய் விட்டு வந்து வருத்தத்தோடு சொன்னது "நம் சமூகத்தில் சாதிய எள்ளல் என்பது சிறிதும் குற்ற உணர்வில்லாமல் மிக மிகச் சகஜமாகப் பேசப்படுகிறது" என்றார்.

வர்ணாசிரமம் என்பது வெறும் பொருளியல் ரீதியான பாகுபாடு அல்ல. காந்தி முதல் இன்று அநேக இந்தியரும் மிக எளிதாகச் சொல்லும் வசனம் "இதெல்லாம் பிறப்புலேயே இருக்கணுங்க". ஜெயகாந்தனை பிராமணராக ஏற்க மறுத்ததும் அதனால் தான். என் பிராமண அலுவலக நண்பர் புலால் உண்பார், துப்பாக்கி சுடுவார், கராத்தேயும் பயில்கிறார். காந்தி வர்ணம் பற்றிச் சொல்கிறார்:

"Varna means pre-determination of the choice of man's profession. The law of varna is that a man shall follow the profession of his ancestors for earning his livelihood. Varna therefore is in a way the law of heredity. Varna is not a thing that is superimposed on Hindus, but men who were trustees for their welfare discovered the law for them. It is not a human invention, but an immutable law of nature—the statement of tendency that is ever present and at work like Newton's law of gravitation. Just as the law of gravitation existed even before it was discovered so did the law of varna. It was given to the Hindus to discover that law. By their discovery and application of certain laws of nature, the people of the West have easily increased their material possessions. Similarly, Hindus by their discovery of this irresistible social tendency have been able to achieve in the spiritual field what no other nation in the world has achieved.Varna has nothing to do with caste.

Down with the monster of caste that masquerades in the guise of varna. It is this travesty of varna that has degraded Hinduism and India. Our failure to follow the law of varna is largely responsible both for our economic and spiritual ruin. It is one cause of unemployment and impoverishment, and it is responsible for untouchability and defections from our faith.

The Rishis after incessant experiment and research arrived at this fourfold division, that of teaching, of defending, of wealth-producing, and of manual service.

In ancient times there were automatic trade guilds, and it was an unwritten law to support all the members of the profession. A hundred years ago, a carpenter's son never wanted to become a lawyer. Today he does, because he finds the profession the easiest way to steal money. "

காந்தியின் வாழ் நாள் போராட்டம் அவர் இந்து மதம் என்று புரிந்துக் கொண்டதையும் அவர் முன்னெடுக்க நினைத்த சீர் திருத்தத்தையும் ஒன்றொடொன்று, முரன்பட்டாலும், இசைந்து போகச் செய்ய நினைத்துத் தத்தளித்தது. மேலேயிருக்கும் மேற்கோள் முட்டாள் தனமானது. புவி ஈர்ப்பு விசையென்பது இயற்கையில் பொதிந்த ஒன்று என்பதற்கும் வருணத்திற்கும் முட்டாள் தனமாக முடிச்சுப் போடுகிறார். இதில் கொடுமை இவர் பிறந்த பனியா குல தர்மத்தின் படி இவர் வெறும் வியாபாரம் செய்திருக்க வேண்டும். இப்படிப் பேசிய ஒருவரை அம்பேத்கர் மிகுந்த எதிர் உணர்வோடும் சந்தேகத்தோடும் பார்த்ததில் ஆச்சர்யமென்ன?

அப்பட்டமான முட்டாள் தனங்கள் அந்த மேற்கோளில் இருக்கிறது. ரிஷிகள் ஆராய்ச்சி செய்து வர்ணாசிரமத்தை கண்டு பிடித்தார்கள் என்கிறார் காந்தி. எந்த விதமான ஆராய்ச்சியும் யாரும் செய்ததாகத் சான்று கிடையாது. ஒரு தொழில் புரியும் வர்க்கத்தின் உறுப்பினர்கள் எல்லோராலும் பாதுகாக்கப்பட்டார் என்பது எழுதாத விதி என்கிறார். சான்று? தெரியாது. நூறு ஆண்டுகளுக்கு முன் தச்சு வேலைச் செய்பவனின் மகன் வக்கீலாக விரும்பியதில்லை ஆனால் இன்றோ அதிகக் காசு சம்பாதிக்க அதுவே வழி என்பதால் செய்கிறான் என்கிறார். நொந்து கொள்வதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இவர் ஏன் வக்கீலுக்குப் படித்தார்? ராஜகோபாலச்சாரியும் இதே மாதிரி முடி திருத்துபவரின் மகன் படிப்பதற்குப் பட்டனம் போய் விட்டால் கிராமத்தில் யார் முடி வெட்டுவார்கள் என்று உண்மையான கவலையோடு கேட்டார். இவரைத் தான் இன்று பல பிராமணர்கள் சந்தைப் பொருளாதாரத்தின் பிதா என்று கொண்டாடுகிறார்கள். உண்மையில் வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுகிறார்கள்.

இந்தப் பிராமணச் சங்க உரையை நிகழ்த்திப் பல ஆண்டுகள் கழித்து இன்னொரு உரையிலும் வர்ணாசிரமத்தைப் போற்றுகிறார் ஜெயகாந்தன். உழவுச் செய்வோரை உயர் நிலையில் வைத்த குறள்களை மேற்கோள் காட்டி நாம் வர்ணாசிரமத்தை ஒப்புக் கொண்டால் தான் உழவுச் செய்வோரை, அத்தொழில் செய்ததற்காகவே, வந்தனைச் செய்ய முடியும் என்கிறார். திருக்குறள் எழுதப்பட்ட காலம் வேறு இன்றைய நிலை வேறு. இறைச்சி வியாபாரம் செய்பவன் நமக்காக உழைக்கவில்லை மாறாகத் தனக்குத் தெரிந்ததைச் செய்கிறான் அவனுக்கு வேறு தொழில் செய்யும் வாய்ப்பும் அதனால் அதிகப் பணமும் வந்தால் அதைத் தான் செய்வான் என்றார் முதலாளித்துவத்தின் தந்தை எனப்படும் ஆடம் ஸ்மித். "நாங்கள் சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நீங்கலள் சோற்றில் கை வைக்க முடியாது" என்று தமிழ் சினிமா ஹீரோ பட்டனத்தில் இருந்து வந்திருக்கும் ஹீரோயினிடம் வாய்ச் சவடால் அடிப்பார். ஹீரோயின் குட்டை ஸ்கர்ட் போட்டிருக்க வேண்டும் காமிரா லோ ஆங்கிளில் இருக்க வேண்டும் என்பது சினிமா விதி. கோயில் அர்ச்சகரின் பிள்ளையும் சரி விவசாயியின் பிளையும் சரி தங்களுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும்.

பாரதி பிராமணர்கள் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் சொல்வார் அர்ச்சகர் வேலைப் பார்க்கும் பிராமணர்களுக்கு அக்கிராஹரத்தில் வீடு கிடைப்பது கஷ்டம் என்று. அவர்களுக்கே வர்ணாசிரமம் அந்த அளவு தான் உதவியது.

5th BCE-இல் ரோமின் பாட்டாளிகள் அதிகாரப் பங்களிப்புக்குக் கிளர்ச்சி செய்கிறார்கள். 494-287 BCE காலத்தில் நிறைய வேலை நிறுத்தங்கள், கிளர்ச்சிகள் ஆகியவற்றின் பலனாக அதிகார மையங்களும், பாதிரிமார் வேலைகளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாட்டாளிகளுக்குத் திறக்கப்பட்டதோடு அவர்கள் இரண்டாம் நிலை குடி மக்கள் என்பது இல்லாமல் ஆனது என்கிறார் வரலாற்றாய்வாளர் மேரி பியர்ட். இந்தியாவில் இப்படியான எந்த உரிமைப் போராட்டங்களும் நிகழாததைத் தான் நீலகண்ட சாஸ்திரி வர்ணாசிரமத்தினால் எந்த உரசலும் சமூக அடுக்குகளுக்குள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை என்கிறார். அப்படி உரசல் வரவில்லை என்பதும் உண்மை அந்த உரசலை உண்டாக்கும் அறிவுத் தளத்தை மழுங்கடித்ததும் வர்ணாசிரமமே என்பதும் உண்மை. "உனக்கு இது விதிக்கப்பட்டது. இது தான் விதி. இது கடவுளின் விதி. நூற்றாண்டுகளின் விதி" என்று சொல்லி அதைப் பிராமண-சத்திரிய எனும் மிக வலிமையான கூட்டணி கொண்டு நிலை நிறுத்தியதும் உண்மை. அமைதி நிலவியதா என்றால் ஆமாம். அந்த அமைதியின் விலை என்பது தனி மனித உரிமைகள் பற்றி முன்னெடுப்புகள் இல்லாத சமூகமாக இருந்ததா என்றால் அதுவும் உண்மையே. நன்மையைப் பேசுபவர்கள் அதற்குக் கொடுக்கப்பட்ட விலையையும் பேச வேண்டும். தனி மனிதன் என்பதும் தனி மனிதனின் உரிமைகள் என்பதும் இன்றும் இந்திய ஞான மரபுக்கு அந்நியமான ஒன்றே. தயவு செய்து அங்கொன்றும் இங்கொன்றுமாக உதாரணங்களை எடுத்துக் கொண்டு வந்து எனக்கு மறுப்பு எழுதாதீர்கள்.

தன் உரையிலேயே ஜெயகாந்தன் சொல்கிறார், "மேற்றிசை அர்த்தப்படி உள்ள தனி மனித சுதந்திரம் நமது சமூகத் தர்மத்துக்குப் புறம்பானது". "அந்தரங்கங்கள் புனிதமானவை" எழுதியவர் ஆயிற்றே. அது தத்துவார்த்தமான புரிதலின் மேல் சொன்ன துல்லியமான கருத்து. அதற்கு அடுத்த வரியிலேயே வரலாற்றுப் புரிதல் இல்லாமல் சொல்கிறார், "இன்றைய முதலாளித்துவச் சமூக அமைப்பு முறைகளும், வியாபாரச் சீரழிவுகளும், நிலப் பிரபுத்துவக் கொடுமையும் ஹிந்து தர்மத்துக்குப் புறம்பானவை".

வர்ணாசிரமம் சுரண்டல் அற்ற முறை என்கிறார் ஜெயகாந்தன். அவர் இலக்கியம் பயின்றவர் ஆனால் வரலாறு அறியாதவர். சாஸ்திரப்படி சொத்து வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட தலித்துகளை நோக்கி "உங்களை வணங்குகிறேன்" என்றார் காந்தி. அம்பேத்கர் "ஏன் அந்த யோசனையை அவருக்குப் பணம் அளிக்கும் பிர்லாவுக்கும் பஜாஜுக்கும் சொல்லலாமே" என்றார். செட்டியார்களைப் பற்றி அற்புதமான புத்தகம், "Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars" by David West Rudner. செட்டியார்கள் எப்படித் தங்கள் ஜாதியினருக்கு ஒரு வட்டி விகிதமும் வேற்று ஜாதியினருக்கு அதிக வட்டி விகிதமும் வைத்திருந்தார்கள் என்பதை அட்டவனை ஒன்று சொல்லும். இந்தியாவில் வால்மார்ட் போன்று பன்னாட்டு நிறுவனங்கள் அங்காடித் தொழிலில் இறங்குவதற்கு முக்கியமான எதிர்ப்பு நாடார் சமூகமும் அவர்களைப் போன்றவர்களிடமிருந்தும் தான் வந்தன. வர்ணாசிரமம் சுரண்டல் அற்றது என்று சொன்னதற்காகக் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயகாந்தனை நீக்கியிருக்கலாம் ஆனால் அவர்கள் அதை வேறு காரணங்களுக்குச் செய்தார்கள்.

மீண்டும் மீண்டும் எல்லா ஜாதியினரும் தங்கள் தொழிலில் அல்லது தங்கள் பரம்பரை உரிமைகளில் மற்றவர்கள் நுழைவதை விரும்புவதில்லை. இதைத் தான் வர்ணாசிரமம் சாதித்தது. யூத வெறுப்பு, யூதர்களின் பகிஷ்கரிப்பு, அடிமைத்தனம், கறுப்பினத்தவரின் ஒதுக்குதல் ஆகிய எல்லாவற்றிலும் முயற்சி செய்தால் நெகிழ்வுத் தன்மையைக் காணலாம். ஆனால் இங்கே யாரும் அந்த மாதிரிச் செய்வதில்லை. வர்ணாசிரமம் ஜாதியத்தின் ஆணி வேர். வர்ணாசிரமம் ஜாதியத்தின் ஊற்றுக் கண். இந்து மதத்தில் பெருமைக் கொள்ளவும், இந்திய மரபுகளில் பெருமைக் கொள்ளவும் நிறைய இருக்கிறது ஆனால் இந்த வர்ணாசிரமத்துக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஆதரவு தேடுகிறார்கள்?

கடைசியாக ஒன்று. காந்தி, பாரதி, நேரு, ஜெயகாந்தன் ஆகியோர் என்றும் எனக்கு ஆதர்சமே. காந்தி தலித்துகளுக்காக செய்தது மகத்தானவை. பாரதி அவன் காலத்தை கடந்தவன். ஜெயகாந்தனின் அந்த உரையிலும் சரி அவர் திருச்சியில் ஈ.வெ.ராவை மறுத்த உரையிலும் அவர் மிளிறும் தருணங்கள் பல. ராஜாஜி ஜாதி வெறியர் அல்லர் அதற்கு அவர் ஆட்சியில் இயற்றப்பட்ட கோயில் நுழைவுச் சட்டங்களும் அவர் வாழ்வின் நிகழ்வுகளும் சாட்சி. இதுப் போன்ற பதிவுகள் பெரும்பாலும் வேறொருப் பார்வைக்கான எதிர் வினை அவ்வளவு தான். இவை முழுமையான மதிப்பீடுகள் கிடையாது. 

Sunday, March 11, 2018

Rajaji's Child Marriage and Further Thoughts on Rajaji and His Biographer . Thank You Kamaraj Nadar.

Thanks to a recent Facebook exchange on Rajaji's biography "Rajaji: A Life" by Rajmohan Gandhi I flipped through the book I've. The very first chapter relating to Rajaji's childhood and marriage both stunned and appalled me and set of a train of thoughts relating to Rajaji and Rajmohan Gandhi. This is a rambling post. Be forewarned.

Rajaji was married to one Alarmelu Managammal, known as Manga in 1897 (note, the biographer does not give the year I got it from wikipedia). Manga, Rajmohan writes, was a 'child-wife'. Manga was 10 years old, Rajaji was 18-19 years old. As was the custom Manga lived with her parents till she attained puberty. Meanwhile Rajaji passes his law exam in 1900. Then, aged 12 and apparently having reached puberty Manga comes to Rajaji. Manga, gave birth to their first child a "day after her 13th birthday".

At that precise passage I was stunned and appalled. My daughter is 12 today and we cuddle and pet her calling her 'baby'. She's still a child. Another reason that this appalled me was because I recently listened to a lecture by one N.L. Rajah, a Brahmin lawyer, waxing very appreciatively of how ancient Indian law was 'Dharmic' in nature and that modern law was 'civil'. Being a Brahmin lawyer who is in love with, what else, tradition and heritage he presented 'Dharmic' law as some benign elastic legal framework that was idyllic. Societies and cultures have always had such structures and India was no exception but the progress towards Civil law is the true progress. One can talk about history as a set of facts but one cannot twist history and speak of it like a lover pining for a heyday. I'm making a specific point of the caste of the speaker because, in my opinion, that is central to his worldview.

Having been appalled at that passage of Rajaji's marriage I did a further quick research on Gandhi, Nehru, Patel etc. Of course, none of this is new news but let's string the facts together and contrast it with another society to emphasize the differences.

Chakravarthy Rajagopalachari (Image courtesy wikipedia)

Gandhi and Kasturba were married in 1883 when Gandhi was 13 and Kasturba 14. First son Harilal was born in 1888 when Kasturba was 19. Jawaharlal and Kamala were married in 1916 when Jawaharlal was 27 and Kamala was 16. Indira Gandhi was born 1917 when Kamala was 17.

About Patel, here is Rajmohan Gandhi himself, "Vallabh must have been 17 or so at his own wedding. Jhaverba, the bride Ballabh's parents, uncles and aunts had chosen for him, was 12 or 13". Patel "seldom talked" about his wife says Rajmohan Gandhi. Jhaverba, like Kamala, died young.

Lal Bahadur Shastri and Lalita were married in 1928 when Shashtri was 24 and Lalita was 17. Rajendra Prasad was married when he was 12 years old. Rabindranath Tagore married Mrinalini Devi in 1883 when he was 22 and she was 10. Tagore not only had a child-wife but gave one of his daughters in a similar marriage. Bharathiar too had a child-wife. Tilak, we learn, was married when he was 16. I'm sure his wife was not 17, to say the least. Sarvapalli Radhakrishnan married Sivakamu in 1903, he was 16 and she was 10.

On a personal note, my maternal grandmother was married to my grandfather when she was a child. Her elder sister who had earlier married my grandfather had died leaving behind two children. So my grandmother was taken around during a festival and before she knew what was happening she was married off. Sadly, she became a widow in her early 20s and by the time she herself had had 5 children, 4 daughters and a boy. The youngest child was barely 6 months old. Two blessings she had. One was that my grandfather left behind considerable property and two was that she was not Brahmin but a Mudaliar. Her brother had in the meantime married a Christian under the DK self-respect marriage movement in the late 1930s. This brother ensured that the sister did not endure traditional horrors of widowhood that, while not as horrendous as Brahminical customs, were still horrible. Rajah happily talked of how widows were treated in Dharmic law without a word about the horrible state of widows until very recent times. My maternal grandmother, named Janaki, would in later years allude to her name and say "well anyone named Janaki has to suffer".

On and on and on the story goes. Many of these leaders, almost all, were upper caste, mostly Brahmins. To be fair to them most, except Tagore and Bal Gangadhar Tilak, decisively turned against child marriage in later years. The passage of reform bills relating to marriageable age for girls roiled the Hindu community much like how gay marriage bills are roiling the Christian societies of the west today. This is a comment not meant to say one religion or the other was blemish free and egalitarian. No. Not at all. No society is egalitarian to begin with. It is a journey. What I've distaste for is the jingoism that is coloring intellectual discourse in India today where anything past is presented as idyllic and everything in the present is traced back to extremely tenuous precedents of the past. I'll write a detailed critique of Rajah's address later.

Now, I contrasted the marriages of America's founding fathers.

Here's another fact to muse. We know more, much more, about Martha Washington than we do of Rajendra Prasad's wife. George Washington was married to Martha Dandridge in 1759, he was 27 and she was 28. Even more surprisingly, Martha was a widow and her husband had died only 2 years earlier. George Washington married a widow.

Thomas Jefferson and Martha Wayles were married in 1772. He was 29, she was 24 and a widow. Martha Wayles's was first married when she was 18 and widowed at 20.

The marriage of John and Abigail Adams is the stuff of legend. Their marital relationship has been studied a lot and Abigail holds a special position in the history of America's first ladies. He was 29 and she was 20 when they married in 1764.

Alexander Hamilton married Elizabeth Schuyler in 1780, he was nearly 25 and she was 23. Benjamin Franklin and Deborah Read married in 1730, he was 24 and she was 22 and a divorcee. Deborah had first married when she was 12 and separated from her husband at 17 in 1722.

It is interesting to note that these ladies all have pretty detailed wikipedia pages which only tells us that we know a good lot about them. While the Indian independence movement created a tectonic shift in how women were treated and charted a progressive course this short perspective gives us an idea of the place of women and the institution of marriage in that era in India. Barring Jawaharlal Nehru most Indian male leaders lacked a good relationship with women. Nehru loved women and women loved him back. Nehru loved women as mother, sister, daughter, friends and love interests too. Nehru, a westernized mind, was at ease with a woman who can share a swimming with him or a cigarette. To the prurient mind that is evidence of him womanizing and to the normal mind it is evidence of a man who related to fellow human beings.

Now, back to Rajmohan Gandhi as biographer and other observations.

Referring to the Brahmins, the caste to which Rajaji belonged, Rajmohan writes, "the quick minded Brahmins of South India". Ramachandra Guha writing about Gandhi going to England has this curious observation about the Brahmins and others. "Some brave Brahmins and Kshatriyas had also ventured overseas. The first valued textual learning (a sphere in which the West was clearly in the lead); the second were keen to acquire British manners and this ingratiate themselves with the overlord". What is it with these upper caste biographers of India that they, despite their education and the modern liberalism that surrounds them, could not help betraying their own caste prejudices? Ironically today Tamil Brahmins uniquely blame Nehru for being a westerner. Gandhi very eagerly aped the Englishman. Brahmins formed the bulwark of British administrative machinery thus earning the scorn of Brahmin and nationalist poet Bharathi. Bharathi mocked his fellow Brahmins for toadying up to the Englishman as lord.

So, how intelligent was this "quick-minded Brahmin" Rajaji. He failed in Tamil test. Interestingly that did not prevent him from graduating. Not too later Brahmin dominated Madras university syndicate would relegate study of Tamil to vernacular status. Rajaji passed in the 'second division' with 218/400 marks. Some quick mind that was. Later he passed the law exams in, lo behold, 'third division'. Put simply the quick-minded South Indian Brahmin was a below average student. I'm literally rubbing it in so it grates the minds of those who glibly pass through such passages and when pointed out cry 'nit picking'. Both Gandhi and Nehru too were very average students. Patel, was a better graduate and won a prize. Contrast this with the most academically accomplished leader of that era, Dr. B.R. Ambedkar. Gandhi, Nehru and Rajaji, their academic performances not withstanding were intellectual giants in later life.

I'm only trying to draw attention to biases of biographers. Rajmohan Gandhi and Ramachandra Guha, to be sure, are NOT bigots or casteist. They also lay out facts. A hagiography, which is what Rajmohan Gandhi's work is, is not propaganda. A hagiography misses opportunities for wider historical narratives that better contextualize the actions of the subject and that is what distinguishes a biography from hagiography. Hagiography will not contain blatant falsification or perversions of facts, if it did so it'd become propaganda or at worst a fiction. Guha and Gandhi are too decent for that.

When we read a book we bring to it a complex set of tools. Our own life experiences, our readings, our biases, our values all play a role in understanding the text. One can argue with my interpretations or even disagree but they've to establish a reasoning for doing that. Likewise I'd have to return such courtesy.

A common taunt I've seen Tamil Brahmin Hindutva employ towards Christians is "rice-converts". This is an interesting taunt. To the Tamil Brahmins who have been effectively marginalized as a political group in Tamil Nadu the advent of BJP provided a platform and a vent for long suppressed anger and habitual casteism. Unable to mock (or sometimes genuinely unwilling) other lower castes in Hinduism, their usual punching bags, they've now turned to mocking other religions, notably Christians, of whom a vast majority are Dalits. It is beyond the pale that they would employ such a loaded term for mocking. But the term has a history.

Manga, Rajmohan Gandhi writes, gave alms on Saturday, "Manga stored cereals for the purpose in tin vessels near the front door: rice for the Brahmins, and harder grain, rage or kambu for the others". Imagine that scene for a moment. She's not giving it personally. She just leave the vessels by the door. It's not only an honor system but a system reflective of, as Rajah would put it,  a 'Dharmic' system. I wonder if any lower caste man or woman would've had the temerity to pinch rice from the rice vessel or if a Brahmin would indeed have touched with his left foot the ragi vessels? What ensures that each pick their own? A centuries old 'Dharmic' system. This imagery was a realization only as I started typing the passage. This is why I always consider writing and debating as occasions that provide greater realizations.

Reading Mary Beard's SPQR and about slave revolts in ancient Rome I was reminded of K.A. Nilakanta Sastry's 'History of South India' where he'd have mused about the Varnashrama system and about the lack of friction while also acknowledging lack of records. Records, in India, were mostly written by Brahmins at the employ of Kshtariyas. Sure, one could make the case that Varnashrama kept the peace but there's a price for that peace and that often is forgotten or is intentionally white-washed.

The opening chapter on Rajaji dealing with early life also gives an idea of how advantageous it was to be a Brahmin. Attending a school in Bangalore Rajaji stand at a hostel for Brahmins. A lower caste boy could not only ill-afford schooling at a town that was not his home town he, I'm omitting 'she' because that was unthinkable, would not at all find places to stay. In college also he used a hostel run by one Biligiri Iyengar for "students from Mysore". The biographer did not give details as to how a Thorapalli born Iyengar stayed there. Possibly as a student coming from a Bangalore school he got in. The point being the network that he was able to tap simply because of an accident of birth and in no way connected whatsoever to any academic distinction which, of course, he showed nothing of. "Being Brahmin, being modern" by Ramesh Bairy goes into the advantages of being Brahmin in the Mysore state in great detail. Educational policies well into the 1950s were tilted to the advantage of Brahmins.

With that backdrop think of how Rajaji happily introduced the educational reform bill that eventually led to not only his downfall but to him being vilified, very unjustifiably, as a casteist Brahmin. Casteist Brahmin Rajaji surely was not. The opening chapter alone cites incidences of Rajaji standing up for Dalits and associating, much to the chagrin of his community, with Muslims. But it is also undeniable that Rajaji, a child of privilege, did not bring to the issue the understanding and compassion that Kamaraj, an illiterate non-Brahmin, did.

Rajaji's bill nonchalantly advised students coming from "occupational communities" to go home, when school is over for the day, to learn crafts from their father. The girl children were advised to learn from their mothers. The language reeks of arrogant Brahminism. Even in the face of mounting political opposition Rajaji, who became Chief Minister without facing an election and never understood the principles or spirit of democracy, dug in his heels and became even more obdurate. On this most pivotal event Rajmohan Gandhi completely fails as biographer because he's not one. Where Rajaji was more intent on balancing the budget and cheerfully sacrificing educational progress for the citizenry Kamaraj, shaped by his life, was more revolutionary. Notably, the panel set up by Kamaraj was headed by N.D. Sundaravadivelu, a non-Brahmin.

I had earlier written on Facebook about this.

According to the orders passed (see https://web.archive.org/…/ww…/cd50years/g/12/28/12280V01.htm and https://web.archive.org/…/ww…/cd50years/g/12/28/12281301.htm) school hours were to be shortened and the orders said that children could learn crafts from their fathers and girl children could help their mothers at home. The language in the orders is patriarchal, patronizing and rests on a very romantic notion of learning crafts. 
Rajmohan who had a privileged upbringing like his subject could not fathom why that order, passed by a devout Brahmin in a country like India, which even then, like today, was deeply mired into casteism, could be seen as casteist order. Failing to appreciate the opposition and to present the opposition as mere blind opposition is a failure of Rajmohan as biographer but then he's no biographer or historian. Let me make this clear, giving sources, adopting academic looking references, supplying quotes etc alone are not sufficient to make anyone a historian or a biographer. By that token this incognito blogger too could claim that status. I know my limits. 
What is worse Rajmohan Gandhi inserts language that the even the order did not intend. He writes, "school children would spend the two hours gifted to them in learning creative skills from parents, relations and neighbors". One, village craftsmen were anything but creative artists. This is chicanery that only an upper caste biographer talking about a upper caste subject, his own grandfather, could happily say. Referring to girls learning from mothers this biographer wannabe doesn't even realize that most of those mothers (and even in Brahmin households) were illiterate and could impart nothing of educational value to a girl child. Now contrast this with how Nehru treats his sisters. Nehru writes to his sisters letter after letter about books to read and he discusses with them as equals. That is the difference between a well intentioned man who nevertheless remained a Brahmin patriarch at heart and a truly progressive Brahmin who could break free of his mould.

As Tamil Nadu reeled under food rationing Rajaji advised people in a broadcast to 'pray for rains'. When Nehru visited a famine ravaged part of India the people, as usual, were cheering his name and he cried "I've failed you and I don't deserve this". Nehru sent letters to US and Russia pleading for help. Finally it was Indira Gandhi who, facing humiliating conditions that US stipulated for famine relief, launched Green Revolution and ended the sad cycle of famines in India. But then Nehru, unlike Rajaji, was a Brahmin only in name and to Nehru his caste and religion were accidents of birth that he did not put much stock in. This is not to say Nehru, as it is alleged today, was divorced from his heritage or the heritage of the country he was born in. Nehru's ashes, after his cremation, were sprinkled, per his instructions, upon the Himalayas and immersed in Ganges.

Oh and one final note. Let us not learn about Rajaji in order to pelt stones at Nehru or learn about Ambedkar to vilify Gandhi or read Gandhi to act sanctimonious about Ambedkar. Let us learn about these great men because they all deserve to be studied and learned about. Let us discover something of ourselves in that process, good and bad. Let there be passionate intellectual discourses with passion for just knowledge and facts, not bigotry.

Let us set the record straight on Rajaji against the decades old hate filled propaganda but let's do it honestly without white-washing his history or using him as foil to besmirch others, especially Jawaharlal Nehru.

References:


  1. Rajaji: A life - Rajmohan Gandhi
  2. Gandhi: Before India - Ramachandra Guha
  3. Patel: A life - Rajmohan Gandhi
  4. Radhakrishnan: A Biography - Sarvepalli Gopal
  5. Being Brahmin, Being Modern: Exploring the lives of Caste today - Ramesh Bairy
  6. https://en.wikipedia.org/wiki/George_Washington
  7. https://en.wikipedia.org/wiki/Martha_Washington
  8. https://en.wikipedia.org/wiki/Thomas_Jefferson
  9. https://en.wikipedia.org/wiki/Martha_Jefferson
  10. https://en.wikipedia.org/wiki/John_Adams
  11. https://en.wikipedia.org/wiki/Abigail_Adams
  12. https://en.wikipedia.org/wiki/Alexander_Hamilton
  13. https://en.wikipedia.org/wiki/Elizabeth_Schuyler_Hamilton
  14. https://en.wikipedia.org/wiki/Benjamin_Franklin
  15. https://en.wikipedia.org/wiki/Deborah_Read











Wednesday, March 7, 2018

கர்நாடக சங்கீதத்தின் பிராமணமயமாக்கலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும்

கர்நாடக சங்கீதத்தின் பிராமணமயமாக்கலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும்

எம்.எஸ். சுப்புலக்‌ஷ்மியின் நிறம் கறுப்பாக இருந்திருந்தாலோ, அவர் தன்னை பிராமணப் பெண்மணியாக முன்னிறுத்தாமல் இருந்திருந்தாலோ, பக்த சிரோன்மணியாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்திருந்தாலோ அவர் இன்று பிராமணர்களிடையே அடைந்திருக்கும் இன்றைய ஏகோபித்த ஏற்பையோ புகழையோ அடைந்திருப்பாரா என்று டி.எம்.கிருஷ்ணா கேள்வி எழுப்ப சர்ச்சை வெடித்தது. 

குறிப்பு: இக்கட்டுரை காலச்சுவடு பத்திரிக்கையில் பிப்ரவரி இதழில் முதலில் வெளிவந்தது. அவர்கள் அனுமதியோடு என் தளத்தில் வெளியிடப்படுகிறது. பிரசுரித்த அவர்களுக்கு நன்றிகள். குறிப்பாக என் தமிழை மெய்ப்புப் பார்த்த அந்தப் பொறுமைசாலிக்கு நன்றிகள். 

தமிழ் வடிவில் எப்படி காலச்சுவடுக்கு அளிக்கப்பட்டதோ அப்படியே இங்கு பதிவிட்டுள்ளேன். காரணம் இரண்டு. பத்திரிக்கைப் பிரதியும் இணையத்தில் வெளியிடப்படுவதும் ஒன்றாக இருக்க வேண்டும். மிகச் சொற்பமான திருத்தங்கள் செய்யப்படுள்ளன. இக்கட்டுரையில் சொன்னதைப் போல் இதன் விரிவான ஆங்கில வடிவம் https://contrarianworld.blogspot.com/2018/02/carnatic-music-and-bharata-natyam.html

சரி, அப்படியென்றால் ஏன் இங்கே வெளியிட வேண்டும். காலச்சுவடு இணையத் தளம் சில மாறுதல்களைச் செய்கிறது. முன்பு கட்டுரை வெளிவந்த 15- நாட்களில் எல்லோரும் படிக்கும் வண்ணம் இருக்கும் இப்போது அப்படியில்லை. இக்கட்டுரை நான் எழுதியவைகளிலேயே அதிக உழைப்பைக் கோரிய ஒன்று. தமிழில் படிப்பது சிலருக்குச் சுலபம். ஆங்கிலக் கட்டுரையை விட இது சுருக்கமானதும் கூட. ஆகவே தான் பதிப்பகத்தாரின் அனுமதி கிடைத்த பின்பே இங்கு வெளியிடுகிறேன்.

முன்னுரை

கிருஷ்ணாவும் அவருக்கு மறுப்பு எழுதிய பலரும் கர்நாடக சங்கீதமும் பரதமும் பிராமணமயமாக்கலின் பின்னனியையும், எம்.எஸ். சமகாலத்தில் எப்படிப் பார்க்கப் பட்டார் என்பனப் போன்றவற்றைத் தரவுகளோடு எழுதப்பட்ட முதன்மை ஆராய்ச்சியாளர்களின் பல்கலைக் கழக வெளியீடுகளைச் சுட்டிக் காட்டவில்லை. வரலாற்றெழுத்தில் முன் முடிவுகளுக்கு சாதகமானத் தரவுகளைத் தேடிப் போக கூடாது, மேலும் சாதகமான தரவுகள் கிடைத்தாலும் அக்கருத்துகள் தகுந்த ஆதாரங்களோடு வைக்கப் பட்டிருக்கின்றனவா, அவற்றை யாராவது மேலதிக ஆதாரங்களோடு மறுத்திருக்கின்றார்களா என்றெல்லாம் சீர் தூக்கிப் பார்த்து எழுதப் பட வேண்டும். அப்படியான முயற்சி இக்கட்டுரை. இக்கட்டுரையின் விரிவான வடிவம் மேலதிக தகவல்களுடன் என் தளத்தில் வெளியிடப்படும். அமண்டா வீட்மேன், லக்‌ஷ்மி சுப்ரமணியன், மில்டன் சிங்கர், முனைவர் கே. சதாசிவன், தாவேஷ் சோன்ஞி, பேராசிரியர் நம்பி ஆரூரன், ஆகியோரின் நூல்களை வைத்து எழுதப்பட்டது இக்கட்டுரை. 

இந்து பத்திரிக்கையின் இலக்கிய விழாவில் உரையாடிய சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன் ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழிலைச் செய்து பொருள் ஈட்டுவதாகவும் தனக்கு சங்கீதம் அப்படியே என்கிறார். மேலும் சபையோரின் மூலம் தான் உற்சாகம் பெறுவதாகவும் சொல்கிறார். தான் சங்கீதம் கற்க உற்சாகம் அளித்தது நவராத்திரியின் போது வீடுகளில் பாடினால் அதிகமாக கிடைத்த சுண்டல் என்கிறார். இவற்றையெல்லாம் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு குதூகலமாகப் பேசுகிறார். அவர் பேச்சில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் இது எதையும் எம்.எஸ் மட்டுமல்ல இன்றைய பிராமண பெண் பாடகர்கள் கூட எளிதில் பேசி விட முடியாது. அது தான் கிருஷ்ணாவின் விமர்சனத்தின் மையம்.



எம்.எஸ். சுப்புலக்‌ஷ்மியின் தோற்றமும் அதன் அரசியலும்

 எம்.எஸ் பற்றி இந்திரா மேனன் சொல்கிறார், “அவர் உலகத் தலைவர்களோடு ஆளுமையாக மென்மையாகவும் கவுரமாகவும் வலம் வந்தாலும் வீட்டில் அவர் சராசரி வீட்டுப் பெண். வீட்டில் அவர் பூஜை அறைக்கு மாலை கோர்த்துக் கொண்டு, கோலம் போட்டுக் கொண்டிருப்பார். மேடையிலோ அவர் ஓர் ஈர்க்கும் புண்ணகை அல்லது தூக்கிய புருவம் ஆகியவற்றால் கவர்கிறார், சபையோருக்காக அல்ல தெய்வத்துக்காக”. 

எம்.எஸ்ஸின் தோற்றம் கவனமாக வடிவமைக்கப் பட்டது என்கிறார் லக்‌ஷ்மி சுப்ரமணியன். பிராமணர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விழையும் பிம்பங்களுக்கு எம்.எஸ்ஸின் பாடலும் அதில் தோய்ந்த பக்தியும் முக்கியமான அங்கமாயின. ஆண்கள் மேடைகளில் ஜிப்பா, வேஷ்டி-சட்டை என்று விதவிதமாக  அணியலாம் ஆனால் கர்நாடக சங்கீத மேடைகளில் பெண்களுக்கான உடையும் அலங்காரமும் வரையறுக்கப்பட்டவை என்கிறார் வீட்மேன். இதை இன்றும் காணலாம். இது தற்செயல் அல்ல. பெண் என்பவள் பண்பாட்டின் சின்னமாகவும் அவள் உடை பண்பாட்டின் வெளிப்பாடாகவும் பார்க்கும் மரபின் நீட்சி இது. ருக்மினி தேவி தேவதாசிகளின் சதிர் அல்லது சின்ன மேளம் என்றழைக்கப்பட்ட நடனத்தை பரதம் என்று பெயர் மாற்றியதோடு செய்தது பரதநாட்டியத்தின் உடையை மாற்றியமைத்தது தான். பால சரஸ்வதி அந்த உடை மாற்றத்தை ஏற்கவில்லை. எம்.எஸ். மடிஸார் அணியலாமா என்று காஞ்சி பரமாச்சாரியாரிடம் கேட்கப் பட்டது. 

பெண் பாடகிகளின் குரலின் அரசியல்

எம்.எஸ்ஸின் குரல் சுதந்திரமாக ஒலித்தக் காலத்தையும் பின்னர் சபையோருக்கு தேவையான பக்தி ரசமிக்க குரலாக மாறியதை கிருஷ்ணா சுட்டிக் காட்டினார். எம்.எஸ். ‘ராமா நன்னு ப்ரோவரா’ பாடினால் அதில் இழையோடிய சோகமும் பக்தியும் அவர் வாழ்வின் கசப்பில் இருந்து வந்தவை அதனால் தான் அந்த குரலில் அப்படியொரு உணர்வுப் பெருக்கு என்பாராம் வீட்மேனின் சங்கீத ஆசிரியர். பெண் பாடகிகளின் குரல் பற்றி ஆண் விமர்சகர்கள் முன் வைத்த விமர்சனங்களை வீட்மேன் மேற்கோள் காட்டுகிறார்.

“பெண்கள் பாடும் போது அது அவர்களுக்கு இயற்கையாக வரும் குரலாக இருத்தல் அவசியம் என்று கருதப்பட்டது. இயற்கையான குரல் என்பதும் கற்புள்ள பெண் உடலும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப்பட்டன. 1950-களில் சங்கீதம் பாடும் பெண்களின் குரலும் சினிமா பாடல் பாடும் பெண்களின் குரலும் ‘இயற்கையான குரல்’, ‘செயற்கையான குரல்’ என்று தரம் பிரிக்கப்பட்டன”. எம்.எஸ்ஸின் குரலை புகழ்ந்து எழுதிய கல்கி கிருணமூர்த்தி லதா மங்கேஷ்கரின் குரலை ‘வசீகரமானது’ என்று குறிப்பிட்டு ரசிகர்கள் அதில் தங்கள் மனத்தை தொலைத்து விடலாகாது என்று எச்சரிக்கிறார். இங்கே ‘வசீகரமானது’ என்பது பாலியல் ரீதியாக கவர்ந்திழுப்பதை குறிப்பது என்கிறார் வீட்மேன், சரியாக. 

பெண் பாடகிகளின் குரலின் இயற்கைத் தன்மையும் புனிதத்துவமும் அவர்கள் சங்கீத மேடையைத் தவிர வேறேங்கும் வேறெந்த பிரச்சினையிலும் தங்கள் குரல் ஒலிக்காமல் இருக்கும் போது பாதுகாக்கப் படுவதாக கருதப்படுகிறது என்கிறார் வீட்மேன். பெங்களூர் நாகரத்தினம் அம்மாளும் வை.மு.கோதைநாயகியும் பொது விஷயங்கள் குறித்துச் சுதந்திரமாக கருத்துச் சொன்ன காலத்தில் எம்.எஸ்ஸும் பட்டம்மாளும் மௌனம் காத்தனர். இது இன்றும் தொடரும் பழக்கம். டி.எம்.கிருஷ்ணா, சித்திர வீணை ரவிக்கிரன் ஆகியோர் பத்திரிக்கைகளில் பல விஷயங்கள் குறித்து எழுதிகிறார்கள். ஆனால் பெண்கள்?

அருனா சாய்ராமோடு ஓர் உரையாடலில் வி.ஸ்றீராம் பிருந்தா பற்றி ஓர் ஆண் பாடகர், “தேனொழுக பாடுகிறாள் ஆனால் நாக்குல அரிவாள்மனையை வெச்சிருக்கா” என்றதை மேற்கோள் சொன்னார். ஒரு பெண்ணின் இடம் எது என்பதை ஆண்கள் வரையறுக்கும் தருணம் அது தான். பெண்கள், பிராமணர்கள் உட்பட, தமக்கென ஒரு குரலுடன் இருப்பதை ஆணாதிக்கம் அனுமதிப்பதில்லை.

தேவதாசிகளும் மியூஸிக் ஆகடமியும்

வீணை தனம்மாள், பிருந்தா மற்றும் பால சரஸ்வதியை சென்னை மியூஸிக் அகாடமியும் அவர்களிடம் பயின்ற பிராமண சங்கீத வித்வான்களையும் மேற்கோள் காட்டி அத்தகைய நிகழ்வுகள் கர்நாடக சங்கீதம் மற்றும் அதன் விற்பன்னர்களின் பன்முகத் தன்மைக்கும் ஓர் எடுத்துக் காட்டாகச் சொல்லப் படுகிறது. இந்த நிகழ்வுகளின் பின்னனியில் சிக்கலான வரலாறு உண்டு.

தேவதாசிகளின் வரலாறு வரலாறு அறியாதவர்களால் இப்போது பிரச்சாரம் செய்யப் படுகிறது. சோழர் காலம் முதல் நிலவி வந்த ஒரு வழக்கம் 20-ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. இடைப்பட்டக் காலத்தில் அம்மகளிர் மேன்மையும் கீழ்மையும் கலந்த வாழ்வையே வாழ்ந்தார்கள். தேவேஷ் சோன்ஞி மற்று முனைவர் சதாசிவத்தின் புத்தகங்கள் தேவதாசிகளின் பிற்கால வாழ்க்கைச் சிதைவையும் அவர்கள் வரலாற்றின் ஏற்றத் தாழ்வுகளையும் எடுத்துக் கூறும் முக்கியமான ஆவணங்கள். 

பிராமண ஆண்கள் ஆதிக்கத்தில் உருவான மியூஸிக் அகாடமி, ருக்மினி அருண்டேலின் கலாக்‌ஷேத்திரா, தேவதாசி ஒழிப்பு முயற்சிகளுக்கு ஊக்கமளித்த இசை வேளாளர்கள் என்ற முன்று தளங்களில் 1850-1947 வரையிலான சமூக மாற்றங்களை ஆராய்ந்தால் இந்த ‘பிருந்தாவை கவுரவித்தோம், பாலா சங்கீத கலாநிதி ஆனார்’ என்ற இறுமாப்பின் இன்னொரு பக்கம் புலனாகும்.

மியூஸிக் அகாடமி பிராமணர்கள் ஏற்க முடிந்த தேவதாசிகளைத் தமிழ் இசை நிர்வாக அமைப்புகள் முன்னிறுத்த விழையவில்லை. அந்த வித்தியாசத்தின் பின் ஓரு சமூகத்தின் அமைப்பு இருக்கிறது. தேவதாசிகள் தொன்றுத் தொட்டுக் கோயிலோடு தொடர்புடையவர்கள், கோயில்களில் அதிகாரம் பிராமணர்களிடம் இருந்தது, இருக்கிறது. அக்காலம் தொட்டே இவ்விருவரிடையேயும் சாஸ்திரம் அனுமதித்த உறவு இருந்தது என்கிறார் சதாசிவம். “ ‘கடவுளின் மனைவியரை’க் காமுறுவதிலோ, அவர்களைக் கிளர்ச்சியுறச் செய்வதிலோ அர்ச்சகர்களுக்கு எவ்விதமான தயக்கமோ, மனச்சான்றின் உறுத்தலோ கிடையாது”. மியூஸிக் அகாடமி பிராமணர்கள் அவர்கள் முன்னிறுத்திய தேவதாசிகளோடு உறவு கொண்டார்கள் என்பதல்ல இங்கே சொல்ல வருவது. மாறாக தேவதாசிகளோடு பழகுவது பிராமண ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று மற்றும் அது அவர்களுக்கு எவ்வித குலத் தாழ்ச்சியையும் கொடுத்துவிடாது என்கிற கருத்தும் உடந்தை. மேலும், கலைகளை பயிலுதல் அவற்றைப் பேணுதல் ஆகியவை தேவதாசிகள் குல மரபும் தர்மமும் என்று நிறுவப்பட்டதால் அவர்களோடு உறவாடுதல் வர்ணாஸ்ரம தர்மத்தைக் கைக்கொள்ளும் எந்த பிராமண ஆணுக்கும் எவ்வகையிலும் களங்கம் உண்டாக்காது. தேவதாசி ஒழிப்பை எதிர்த்த காங்கிரஸ் தலைவரும் பிராமணருமான ஶ்ரீனிவாச சாஸ்திரி அந்தச் சீர்திருத்த முயற்சி அத்தோடு நில்லாமல் பின்னர் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்று மாறுமோ என அச்சம் தெரிவித்தார்.

இந்த இடத்தில் குல தர்மத்தை மீறி கலைகளில் ஈடுப்பட்ட தம் குலப் பெண்களை அதே பிராமண இசை விற்பண்ணர்கள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதை ஒப்பு நோக்கினால் மேற்சொன்ன விவாதத்தின் கோணம் இன்னும் தெளிவாகும்.

எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யை சாருமதி ராமசந்திரன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஆண்கள் பெண் பாடகர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்க இருக்க விரும்புவதில்லை அல்லது தங்களுக்கு பக்க வாத்தியக்காரர்களாக இருக்கவும் விரும்புவதில்லை என்றுச் சொல்லி நீண்ட பட்டியலைத் தருகிறார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், லால்குடி ஜெயராமன், செம்மங்குடி ஶ்ரீனிவாச ஐயர், மதுரை மணி என்று நீள்கிறது அப்பட்டியல். பிராமணரான சரஸ்வதி பாய் ஹரிகதா செய்ய முற்பட்ட போது அவர் சந்தித்த சவால்கள் அநேகம்.

மருத்துவர் முத்துலக்‌ஷ்மி ரெட்டி முன்னெடுத்த தேவதாசிகள் ஒழிப்பு முயற்சிக்கு இசை வேளாளர்களைச் சேர்ந்த ஆண்கள் ஆதரவளித்தனர். தேவதாசிகள் தாயாதி வழி முறையும் அவர்கள் மீது படிந்த கறையும் தங்கள் மீதும் விழுவதாக நினைத்ததும் இசை வேளாளர் இனத்தின் ஆண்களுக்கு சவாலாக அமைந்தது. 1920-இல் இசை வேளாளர்கள் என்று ஒரு தொகுப்பு உருவாக்கப் பட்ட போது ‘அம்பட்டன் இசைக் கலைஞர்கள்’ என்றறியப்பட்டவர்கள் நாகஸ்வரம் மற்றும் நட்டுவனார்களோடும் இணைக்கப்பட்டது எதிர்ப்பைச் சந்தித்தது. இசையும் மிகச் சிக்கலான உள் மடிப்புகள் கொண்ட ஜாதியமும் இரண்டறக் கலந்தது என்பது இதன் மூலம் தெளிவாவதோடு ஒரு காலத்தில் இசை என்பது எப்படி பலத் தரப்பட்ட பிராமணரல்லாதார் மத்தியில் வேரூன்றியிருந்தது என்பதை உணர்த்துகிறது.

தனம், பிருந்தா, பாலா ஆகிய மூவரும் மீண்டும் மீண்டும் நிலை நிறுத்துப்படுவதே தேர்ந்தெடுக்கப்பட்டச் செயல் ஏனென்றால் இந்தக் கௌரவம் வேறெந்த தேவதாசிக்கும் அளிக்கப் படுவதில்லை. இதைத் தான் கிருஷ்ணா “எத்தனை பிருந்தாக்கள் கொண்டாடப் படாமல் மறக்கப்பட்டிருக்கலாம்” என்கிறார்.

தேவதாசிகள் மட்டுமல்ல அவர்களை ஆட்டுவிக்கும் பிள்ளை சமூகத்தைச் சார்ந்த நட்டுவனார்களையும் மேடையிலிருந்து விலக்கி குடும்பப் பெண்களுக்கு ஏற்றவாறு கலையை சீரமைப்பது என்று உறுதிக் கொண்டு அதில் பெரு வெற்றியும் கண்டவர் ருக்மினி அருண்டேல். அவர் முயற்சிகள் நடன மேடையை மட்டுமல்ல சங்கீத மேடையையும் பாதித்தது. இன்று டி.எம்.கிருஷ்ணா சங்கீதத்தின் சமஸ்கிருதமயமாக்கல் பற்றிப் பேசினால் சினம் கொள்ளும் யாரும் அதன் வரலாறு அறியாதவர்கள்.



அன்னி பெஸண்ட், பிராமண எதிர்ப்பு, தேசியம்

இன்று தமிழகத்தில் பரவியிருக்கும் பிராமண துவேஷத்தின் ஆணிவேர் அன்னி பெஸண்ட் முன்னெடுத்த அப்பட்டமான பிராமணீயம் தான். “வேறு யாரையும் விட உயர் ஜாதிக் குழுவினரிடையே ஒரு பிரத்யேக அந்தஸ்து அன்னி பெஸண்டுக்கு உண்டு ஏனென்றால் அவர் திட்டவட்டமாக பிராமணியத்துக்கு பாரபட்சமாய் இருந்தார்” என்கிறார் லக்‌ஷ்மி சுப்ரமணியன். அந்த பிராமணியத்துக்கு எதிர் விசையாக ஆரம்பிக்கப் பட்டது தான் பிராமணரல்லாதோர் சங்கம். 

பரதக் கலைக்கு நாட்டிய சாஸ்திரம் பரத முனிவர் என்கிற தொன்ம ஆளுமை (mythical) பங்களித்ததை விட பன்மடங்கு பங்காற்றியவர்கள் ‘தஞ்சை நால்வர்’ என்றறியப்பட்ட பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த பொன்னைய, சின்னையா, வடிவேலு ஆகியோர். வடிவேலு வயலின் வாசிப்பதிலும் வித்தகர். தியாகைய்யருக்கு வயலினை அறிமுகப் படுத்தியவர் வடிவேலு. கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை மேற்கத்திய குறியீடுகளோடு (notations) சுப்புராம தீட்சிதர் எழுதுவதற்கு முக்கியப் பங்களித்தவர் சின்னஸ்வாமி முதலியார் என்கிற கிறித்தவர். ஜுத்தூர் சுப்ரமணியன் செட்டியார் நாகஸ்வரக் கலைஞர்களுக்கென ஒரு வைப்பு நிதியை உருவாக்கினார். கிறித்தவர்களான ஆபிரஹாம் பண்டிதர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை முக்கியமானவர்கள். ராஜா அண்ணாமலைச் செட்டியார் இசைக் கல்லூரியை ஸ்தாபித்தார். வீணை தனம், பிருந்தா, பாலா ஆகியோரின் ஆசிரியர்களின் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர்.

தெற்கில் ருக்மினி அருண்டேலும் மியூஸிக் அகாடமியும் முன்னெடித்த சமஸ்கிருதமயமாக்கலை வடக்கே இந்துஸ்தான் இசையில் வி.என். பண்டார்க்கரும் பலுஸ்கரும் செய்தனர். இவ்விரண்டையும் ஒப்பு நோக்கினால் ‘சமஸ்கிருதமயமாக்கலின்’ தீவிரம் புரியும்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை ஒட்டி பண்பாட்டுத் தளத்தில் “நம் பாரம்பர்யம் எது? நம் பண்பாட்டின் வேர் எங்கிருக்கிறது? பண்பாடு செல்ல வேண்டிய திசை என்ன?” என்ற கேள்விகள் விஸ்வரூபமெடுத்தன. அவற்றுக்கான பதில்களை அளிக்க, அப்போது கல்வியில் முன்னனியில் அதிகம் இருந்தவர்களும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் அதிகம் இருந்தவர்களுமான, ஸ்மார்த்த பிராமணர்கள் மிகவும் ஊக்கத்தோடு முன் வந்தனர். கலைகளின் மூலங்களாக சாஸ்திரங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன, பிறகு அதன் விளைவாக கலைகள் யாரிடம் இருக்கலாம் என்பதும் முக்கியமான கேள்வியாயிற்று.

சென்னையில் பஜனை மரபுகள் காலூன்றிய காலத்தில் அங்கு காங்கிரஸ் மாநாடு 1927-இல் நடந்த போது அதையொட்டி ஓர் இசை மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டுக்காக வசூலிக்கப்பட்ட பணத்தின் மீதியில் ஆரம்பிக்கப்பட்டது மியூஸிக் அகாடமி.  தேசியமும் இசையும் பிணைக்கப்பட்டன. பின்னர் காந்தியின் கூடுகைகளில் கர்நாடக சங்கீதம் இடம் பெற ஆரம்பித்தது. 

மியூஸிக் அகாடமி, தியாகராஜர், பக்தி மார்க்கம், கலாக்‌ஷேத்திரா, இந்துஸ்தானி இசை

மியூஸிக் அகாடமி கர்நாடக இசைக்கு என்று மரபுகளை உருவாக்கத் தொடங்கியது. இம்முயற்சியில் அவர்கள் ஸ்தாபன ரீதியாகச் செய்தவை மெச்சத்தக்கவை ஆனால் அதன் விளைவாக நடந்தவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1930-களில் தான் ‘சங்கீத மும்மூர்த்திகள்’ என்றச் சொற்றொடர் புழக்கத்தில் வந்தது. அம்மும்மூர்த்திகளில் முக்கியமானவராக தியாகராஜர் உருவெடுத்தார். அது வரை தாளத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ராகத்துக்கு இடம் மாறியது. ராகம் முக்கியமான உடன் அதுவரை இசை மேடையில் பிரதானமாக இருந்த இசைக் கருவிகளும் அதை இசைத்த இசை வேளாளர்களும் புறந்தள்ளப் பட்டனர். 1927-இல் நடந்த இசை கூடுகையில் மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கொன்னக்கோல் வாத்தியக்காரர்கள் பங்குப் பெற்று தத்தம் இசைக் கருவிகளை இசைத்துக் காண்பித்தனர். ஆனால் பின்னர் மியூஸிக் அகாடமி நிறுவப்பட்ட போது கர்நாடக சங்கீத மேடைக்கு மிருதங்கம் மட்டுமேப் போதும் என்று முடிவுச் செய்யப்பட்டது.

பின்னாளில் பிராமணப் பெண்கள் மேடையேறியபோது அவர்களோடு இசை வேளாளர்கள் மேடையில் அமர்வது குறைய ஆரம்பித்தது. தியாகராஜரின் பக்தி விதந்தோதப்பட்டது. ‘நிதி சால சுகமா’ என்று பாடிய தியாகராஜரும் அவர் கொண்ட பக்தியுமே கலையின் பண்பாட்டுக் குறிக்கோளாக அடையாளம் கொள்ளப்பட்டன. மியூஸிக் அகாடமயைத் தொடர்ந்து ஆரம்பிக்கப் பட்ட சபாக்கள் பலவும் அவர்கள் ரசிகர்களின் ஜாதிக்கேற்ப இருப்பிடத்தை மற்றிக் கொண்டதும் நடந்தது. 

“தியாகராஜரை சாதாரண பக்தியையும் உயரிய கல்வியறிவையும் ஒருங்கினைத்து செல்வங்களையும் புகழையும் தேடாமல் நிராகரித்த மேதையாக பார்ப்பதன் மூலம் தங்களைப் பற்றி தங்களுக்கிருக்கும் பிம்பத்தை உறுதிச் செய்துக் கொண்டனர் பிராமணர்கள்”. “பார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய கலிகாலம் ஆதலால் வேர்ப்ப வேர்ப்ப பொருள் சேர்ப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டனன்” என்று பாரதி தன் தந்தைப் பற்றி எழுதியது இங்கே சுட்டத் தக்கது. எம்.எஸ் பணம் வாங்காமல் பாடும் நிலையில் இருப்பதே தன் விருப்பம் என்றும் அரசாங்கம் கலைஞர்களின் வாழ்வியலைப் பார்த்துக் கொண்டால் அப்படி இருக்கலாம் என்றும் சதாசிவம் கூறியதாக படித்திருக்கிறேன். 

பிராமணர்கள் பொது வெளியில் தங்களுகென்று ஓர் தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொள்ள இசை உதவியது. இசையை ரசிப்பதையும் இசையோடு தொடர்புபடுத்திக் கொள்வதையும் பிராமணர்கள் தங்களுக்கும் தங்கள் சமூகத்திற்கும் ஒரு பிரத்யேகத் தன்மையை கொடுப்பதாக நினைத்தார்கள். இதைத் தான் கிருஷ்ணா பிராமணர்கள் எம்.எஸ்ஸின் இசையை ரசிக்கும் போது  அதை இசை என்ற ஒன்றையும் தாண்டி ஒரு பண்பாட்டுத் தொடர்புபடுத்தலையும் சேர்த்தே, இன்னும் சொல்லப் போனால், அதனாலேயே ரசிக்கிறார்கள் என்றார். 

மியூஸிக் அகடமி படிப்படியாகச் செய்ததை ருக்மினி அருண்டேல் அதிரடியாகச் செய்தார் ஏனென்றால் அவர் குறிக்கோள் தன்னைப் போன்ற பிராமணப் பெண்கள் ஏறத்தக்க மேடையாக நடன மேடை இருக்க வேண்டும் அதற்காக நடனம் என்பதன் இலக்கணத்தையும் மேடையின் வழக்கங்களையும் மாற்றுவதே வழியென்று அறிந்தார்.

ஒரு விஜயதசமி நாளன்று ருக்மினி தேவி சொன்னார் “பாரம்பர்ய நடன ஆசிரியர்களிடம் இருந்து நம் கலையை பிரித்து விட்டோம். அவர்கள் ஒரு சிறு குழுவினர். வேரு யாரும் அவர்கள் வேலையைச் செய்ய முடியாது என்று நம்பியவர்கள். இது ஒழிக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டேன். பாரம்பர்ய குலத்தின் மகளிர் தான் நடனமாட முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் இப்போதோ நல்லக் குடும்பத்துப் பெண்கள் அற்புதமாக நடனமாடுகிறார்கள். அடுத்ததாக நிகழ்ந்தது நல்ல குடும்பத்தில் இருந்து நட்டுவனார்கள் பயிற்றுவிக்கப்பட்டது. இந்த விஜயதசமி தினத்தன்று அவர்கள் நமக்கு இனித் தேவையில்லை என்று நிரூபித்தது எனக்கு மகிழ்ச்சி”. குரூரமும், வன்மமும், மேட்டிமைத்தன்மையும் கலந்த சொற்கள். இந்த நீண்ட மேற்கோளை குறிப்ப்டிட்டுவிட்டு மேத்யூ ஆலென் விக்கித்துப் போகிறார் “அறிவில் சிறந்தப் பெண்மணி ஒரு சுப தினத்தில் இப்படியாப் பேசுவார்” என்று.

சதிரை கோயில் வளாகத்தில் இருந்து பொது மேடைக்கு பரதம் என்று நாமகரணம் செய்து மேடையேற்றியவர் கோயிலை மேடையில் ஏற்றினார். நடராஜர் விக்கரகமும் மேடை ஏறியது. பால சரஸ்வதி வெறுத்த மாற்றங்களுள் இதுவும் ஒன்று. நடன விமர்சகர்கள் புதிய சொல்லாடல்களை பயன்படுத்தத் தொடங்கினர். “கலையின் மீது பற்றற்றக் காதல்” என்ற வார்த்தைகள், சதிரைப் பற்றி எழுதும் போது உபயோகிக்காத சொற்கள், விமர்சனங்களில் இடம் பெற ஆரம்பித்தன. 

எம்.எஸ்ஸுக்கு சதாசிவம் மீள் உருவாக்கத்தில் உதவியதுப் போல் ருக்மினி தேவி அருண்டேலுக்கு அவர் கணவரும் அன்னி பெஸண்டுக்குப் பின் தியொஸாபிக்கல் சொஸைட்டியின் தலைவரான ஜார்ஜ் அருண்டேல் முக்கியப் பங்காற்றினார். ருக்மினி தேவி நடனத்தில் அறிமுகப் படுத்திய மாற்றங்கள் தியோஸாபிக்கல் சொஸைட்டியோடு நெருங்கியத் தொடர்புக் கொண்டிருந்த பிராமண சமூகம் உதவியது. 

தெற்கே இம்மாற்றங்கள் நிகழும் போது வடக்கே இதே வழி முறைகளைக் கைக்கொண்டு இஸ்லாமியர் பெரும் பங்கு வகித்த இந்துஸ்தானி இசையை பட்காண்டேவும் பலுஸ்கரும் மாற்றினர். வேதத்தை எழுதி வைக்கக் கூடாது என்று வரையறுத்து வாய்மொழி வழியாகவே கற்பிக்கப்பட வேண்டும்  என்றுச் சொன்னவர்களுக்கு இஸ்லாமியரின் ‘கராணா’ முறை எரிச்சல் ஏற்படுத்தியது. இசையை முறைமைப் படுத்தப்பட்டக் கல்வியாக பயிற்றுவிக்க ஸ்தாபன ரீதியான முயற்சிகளைச் செய்தார் பட்காண்டே. பாரம்பர்ய சமூகத்தைச் சார்ந்தவர்கள் பற்றிய எரிச்சலும் எக்காளமும் ருக்மினி தேவியைப் போலவே பட்காண்டேவுக்கும் இருந்தது. இஸ்லாமிய இசை விற்பண்ணர்கள் படிப்பறிவில்லாதவர்கள், முன்னேற்றத்திற்கு தடைக் கற்கள் என்றார். அவர் பின் வந்த பலுஸ்கார் இன்னும் ஒரு படி மேலே போய் பாரம்பர்ய இசை அறிஞர்களின் நடத்தைச் சரியில்லை என்றார். இவ்விருவரும் தேச விடுதலை முயற்சியோடு தங்கள் முயற்சிகளை, தெற்கே நடந்ததைப் போலவே, பிணைத்தார்கள். அவர்களும் இந்துஸ்தானி இசையின் வரலாறை இந்து தொன்மங்களோடும் சாஸ்திரங்களோடும் இணைத்தார்கள்.  இத்தகைய முயற்சியைத் தான் எம்.என். ஶ்ரீனிவாஸ் போன்றவர்கள் ‘சமஸ்கிருதமயமாக்கல்’ என்கிறார்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமையை அறிவுப் பூர்வமாக ஆராயலாமா?

டி.எம்.கிருஷ்ணாவின் கருத்துக்கு எதிராக எழுதியவர்கள் கர்நாடக சங்கீதத்தை இந்து மதத்தின் விழுமியங்களில் இருந்து பிரிப்பது தகாது என்று கிருஷ்ணா கூறியதை மெய்ப்பிக்கும் விதமாக எழுதியதைப் பார்த்திருக்கிறேன். இதனால் தான் தியாகரஜர் விழா என்று க்ளீவேண்டில் நடக்கும் விழாவில் விஷாகா ஹரி தியாகராஜரை ராம பக்தராக முன்னிலைப் படுத்தி கதா காலட்சேபம் நடத்துகிறார். மேற்கத்திய செவ்வியல் இசையில் பாக் எழுதிய கோயில் இசையை (Mass in B minor) வெகு எளிதாக திருச்சபையின் குறியீடுகள் எதுவிமில்லாத மேடையில் இசைத்துப் பார்க்கலாம். தியாகராஜரின் பக்தியைப் பற்றிப் பேசலாகாது என்று சொல்லவில்லை ஆனால் அவரை பக்த சிரோன்மணியாக மட்டுமே குறுக்குவது தான் பிராமணீயம். 

மேற்சொன்னதோடு தொடர்புடையது இன்னொரு மறுப்பு. எம்.எஸ்ஸை அறிவுப் பூர்வமாக அனுகக் கூடாது என்கிறார்கள் சுதா ரகுநாதனும் ரவி கிரணும் மற்றவர்களும். பிராமணர்களுக்கும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட தத்துவப் புரிதலுக்கும் உள்ள முக்கியமான உறவை பௌத்தம், பிராமணியத்தை ஆராயும் யொஹான்ஸ் ப்ராங்க்ஹோஸ்ட் முன் வைக்கிறார். தத்துவத் தளத்தில் பௌத்தத்தோடு சமர் புரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிராமணர்கள் நியாய சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம் என்று தர்க்க ரீதியான தத்துவத் தளம் அமைத்தார்கள். அத்தகைய எதிர்ப்பு இல்லாத வேறெந்த தளத்திலும் அவர்கள் தர்க்க ரீதியானப் புரிதலை விரும்புவதில்லை என்கிறார். இன்னொரு காரணம், எதையும் பக்தி தளத்தில் வைப்பது பிராமணர்களை முதன்மைப் படுத்தும் என்று அதைச் செய்கிறார்கள். அதனால் தான் தியாகராஜரை ஓர் அறிவாசானாகப் பார்க்காமல், பார்க்க மறுத்து, பக்த சிரோன்மணியாகவே பார்க்கிறார்கள். இதையே எம்.எஸ் விஷயத்திலும் கடைப் பிடிக்கிறார்கள்.

மியூஸிக் அகாடமியும் தமிழ் இசையும்

பிராமணியம் அல்லது சமஸ்கிருதமயமாக்கல் என்று சொல்லும் போது மொழியும் அது சார்ந்த அரசியலும் முக்கியமானதாகிறது. கர்நாடக சங்கீத மேடைகளில் தமிழ் என்றுப் பேச்செடுத்தாலே ‘சங்கீதத்துக்கு மொழியில்லை’ என்பார்கள். வீட்மேன் தெளிவாகச் சொல்கிறார், “கர்நாடக சங்கீதத்தை செவ்வியல் இசை ஆக்கும் முயற்சி மொழியை விட இசையேப் பிரதானம் என்று நிறுவுவதை சார்ந்து இருந்தது. செவ்வியல் இசை என்பதில் மொழி, இசையோடு ஒப்பிட்டால், இரண்டாம் பட்சம். மேலும், மொழி தாய் மொழியோடு சம்பந்தமில்லாததாகவும் சிறப்பாக பயில வேண்டிய ஒன்றாகவும் புதிதாக கட்டமைக்கப்பட்டது. இசைக்கான வரையறைகளை வகுப்பவர்களாக பிராமணர்கள் இடம் பெறப் பெற தெலுங்கும் சமஸ்க்ருதமும் இசையில் முதன்மைப் படுத்தப்பட்டன. கர்நாடக சங்கீதம் தமீழில் இருந்து இலக்கிய மொழியாகவும் தாய் மொழியாகவும் துண்டிக்கப்பட்டது”. 

கர்நாடக சங்கீத உலகம் கை மாறிக் கொண்டிருந்தக் காலத்தில் தான் உலகின் மூத்த மொழியும் மிகுந்த நீண்டப் பாரம்பர்யமும் கொண்ட தமிழ் மொழி கல்வி நிலையங்களில் பிராந்திய மொழியாக (vernacular) பின்னுக்குத் தள்ளப்பட்டு சமஸ்கிருதமும் பிரெஞ்சும் முன்னிலைப் படுத்தப்பட்டன. பல்கலைக் கழக சிண்டிக்கேட்டில் அதிக உறுப்பினர்களான பிராமணர்களும், பிராமணர்கள் நிறுவிய இந்துப் பத்திரிக்கையும் கிட்டத் தட்ட தமிழ் விரோதப் போக்கினை கடைப் பிடித்தார்கள். ‘திராவிட மறுமலர்ச்சி’ எனும் நூலில் பேராசிரியர் நம்பி ஆரூரன் இதை அற்புதமாக ஆவணப் படுத்தியிருக்கிறார்.

தமிழ் இசைக் கோரிக்கை எழுந்த போது மியூஸிக் அகாடெமியும் அதன் பிராமண உறுப்பினர்களும் மிகவும் கோபாவேசமாக எதிர்க் கொண்டார்கள். எம்.எஸ். சுப்புலக்‌ஷ்மி தமிழ் இசை மாநாட்டில் பாடி பணம் திரட்டிக் கொடுத்தார் என்பதற்காக 4-வருடங்கள், டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் தூண்டுதலினால், மியூஸிக் அகாடமி எம்.எஸ்ஸை பகிஷ்காரம் செய்தது. பின்னர் அவர்களுக்கு பணம் திரட்ட வேண்டிய சூழல் வந்த போது எம்.எஸ்ஸின் தேவையை உணர்ந்து அத்தடையை மகிழ்ச்சியோடு நீக்கினார்கள். பால சரஸ்வதியின் துணைவர் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான பிரமுகரும் பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சருமான ஷன்முகம் செட்டி என்பது குறிப்பிடத் தக்கது. பாலாவும் தமிழ் இசையில் நாட்டம் கொண்டிருந்தார்.

ராஜா அண்ணாமலைச் செட்டியார் தமிழ் இசையைப் பரப்ப பண உதவிச் செய்த போது அகாடமியும், இந்துப் பத்திரிக்கையும் பணத்தைக் கொண்டு ஒரு வகை இசைக்கு ஆதரவுச் சேர்ப்பதைக் கண்டித்தனர். ஆனால் அதே செட்டியார் மியூஸிக் அகாடமிக்கு பண உதவி செய்த போது யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. சுதந்திர இந்தியாவில், அனைத்திந்திய வானொலி நிலையம் போன்ற கலாசார அமைப்புகளில் அதிகார பீடத்தில் அமர்ந்த பிராமணர்கள் கர்நாடக சங்கீதத்தை முன்னிறுத்தினார்கள். 

காலப் போக்கில் தமிழ் இசையை மேடையேற்ற பெரும்பாலும் பாரதி, ஊத்துக்காடு வெங்கடக் கவி, பாபனாசம் சிவன் என்றுக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் பாடல்கள் மட்டுமே இடம் பெற்றன. மறந்தும் பாரதிதாசன் பாடல்கள் இடம் பெறாது. ‘மொழி’, பிராங்க்ஹோர்ஸ்ட் எழுதுகிறார், ‘பிராமணர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று’. ரவி கிரணின் மனைவி, மங்கையர் மலருக்கு அளித்த பேட்டியில், தன் கணவருக்கு சில மொழிகளைத் தெரியும் என்றுச் சொல்லிவிட்டு சமஸ்கிருதத்தை மட்டும் குறிப்பிடுகிறார். 

சுப்புலட்சுமியின் நிறம்

நிறமும் பிராமணர்களுக்கு முக்கியம். ரிக் வேதம் சொல்கிறது, “வெண்மை நிறமுடையவர்கள் கறுப்பு நிறமுடையவர்களை தெற்கேத் தள்ளினார்கள்”. கறுப்பு நிறமான தன் மருமகளை “சூத்திர நிறத்தில் இருக்கிறாள்” என்றுச் சொன்ன பிராமண அம்மாள் என் நினைவுக்கு வருகிறார். பிராமணர்களுக்கு மட்டுமல்ல இந்தியர்களுக்கே, ஜாதி மதங்களைக் கடந்து, கறுப்பு நிறம் பற்றிய ஒவ்வாமை உண்டு. உலகிலேயே வெண்மையாக்கும் கிரீமை பல கோடி மக்கள் உபயோகிக்கும் தேசத்தில் வாழ்ந்துக் கொண்டு கிருஷ்ணா, “எம்.எஸ் கறுப்பு நிறமாயிருந்தால் ஏற்கப்பட்டிருப்பாரா” என்றுக் கேட்டதற்காக சினம் கொள்வது நகை முரன்.

முடிவுரை

இசையை மொழி, தேசியம், ஜாதி, மதம் என்று மிகச் சிக்கலான கூட்டணியின் பிண்ணனியில் புத்துருவாக்கம் செய்த காலத்தில் அதன் கட்டாயங்களுக்கு உட்பட்டே எம்.எஸ். சுப்புலக்‌ஷ்மி என்கிற மகா கலைஞர் கலையின் உச்சத்தைத் தொட்டார். கிருஷ்ணாவின் கேள்விகளுக்கு அர்த்தம் எம்.எஸ். சிகப்பாகவும், பிராமணியத்தைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்த காரணம் மட்டுமே அவரை உயர்த்தியது என்பதல்ல. அந்தக் கேள்விகளின் சாரம் “நம் இசை மரபு இன்று அந்த தளைகளில் இருந்து விடுபட்டதா? பெருவாரியான சமூகத்திடம் இருந்து மாறுப்பட்ட வேறு யாராவது எவ்வளவு எளிதில் இந்தக் கலையில் முன்னேற முடியுமா? அப்படி வேறுப்பட்டவர்கள் எளிதாகக் கலையை மட்டுமே உபாசிப்பவர்களாக வரவேற்கும் சூழல் இருக்கிறதா” என்றெல்லாம் சுய பரிசோதனையாக கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பதே அவர் அவா.

தமிழ் நாட்டில் இன்று மிக அருவருக்கத் தக்க வகையில் வேரூன்றியிருப்பது பிராமணத் துவேஷம். நாஜித்தனமான வெறியாகவே இது மாறிவிட்டது. கர்நாடக சங்கீதம் பிராமணர்கள் கைவசம் வந்திருக்காவிட்டால் இன்று பிராமணர்கள் நோக்கிச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் பிள்ளை சமூகத்தினர் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் ஏனென்றால் இங்கே எல்லா ஜாதியினரும் தத்தம் உரிமைகளை வேறெவெருக்கும் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ருக்மினி தேவியின் கசப்பில் நியாயமேயில்லை என்றுச் சொல்ல முடியாது. அதற்கு அவர் கண்டப் பரிகாரம் தான் வன்மம் நிறைந்தது. காந்தி என்றுமே தனித்து நிற்பது இதனால் தான். தன்னை சந்தித்த ஜஸ்டிஸ் கட்சியினரிடம் “நீங்கள் ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. மாறாக பிராமண அதிக்கத்திற்குப் பதில் உங்கள் ஆதிக்கம் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்” என்றார். அரசியல் தளத்தில் அந்த ஆரூடம் பலித்தது. பிராமண ஆதிக்கம் இடை நிலை ஜாதியினரின் ஆதிக்கத்திற்கு வழி விட்டது.

மற்ற எல்லாச் சமூகங்களையும் விட சுயப் பரிசோதனைச் செய்வது, சுய விமர்சனம் செய்வது, சீர் திருத்தங்களை மேற்கொள்வது ஆகியவற்றில் பிராமணர்கள் நிச்சயம் முன்னிலை வகிக்கிறார்கள். பாரதி முதல் கிருஷ்ண வரை பிராமண சமூகத்தில் கலகக் குரல்களுக்கு நீண்ட மரபுண்டு.

கிருஷ்ணாவின் விமர்சனம் பல பிராமணர்களை முகம் சுளிக்க வைத்தது. இதை ஏன் கிளறுவானேன் என்று சினந்தார்கள் சிலர். கடந்த காலம் என்பது முழுவதுமாக என்றுமே கடந்த காலமாகாது என்றார் வில்லியம் ஃபாக்னர். வரலாற்றறிவு எதிர் காலத்தை வடிவமைக்க மிக அத்தியாவசியமானது. சாதாரண அலுவலகம் கூட சிறுப்பான்மையினர் சங்கோஜம் இல்லாமல் சிகஜமாக கலந்து பணியாற்றினால் தான் தங்குத் தடையின்றி பலத் தரப்பட்ட பங்களிப்பு நிகழும் என்கிறார்கள். ஒரு பெரும் பண்பாட்டுத் தளத்தில் பல் வகையினரும் கலந்துக் கொள்ளும் வகையில் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே கிருஷ்ணாவின் விருப்பம். 

நூல் பட்டியல்:

  1. From the Tanjore Court to the Madras Music Academy: A social history of music in South India — Lakshmi Subramanian
  2. Bala Saraswati: Her Art and Life - Douglas M. Knight Jr.
  3. Unfinished Gestures: Devadasis, memory, and modernity in South India - Davesh Soneji
  4. When a Great Tradition Modernizes: An Anthropological Approach to Civilization - Milton Singer
  5. Singing the Classical, Voicing the Modern: The Postcolonial Politics of Music in South India — Amanda Weidman
  6. Nityasumangali: Devadasi Tradition in South India - Saskia Kersenboom
  7. தமிழகத்தில் தேவதாசிகள் - முனைவர் கே. சதாசிவன். (தமிழில்: கமலாலயன்)
  8. Tamil Renaissance and Dravidian Nationalism: K. Nambi Arooran
  9. The Politics of South India: 1920-1937 — Christopher John Baker
  10. Politics and Nationalist Awakening in South India, 1852-1891 — R. Suntheralingam
  11. Two Men and Music: Nationalism in the Making of an Indian Classical Tradition — Janaki Bakhle
  12. Aruna Sairam V. Sriram interview https://youtu.be/G2LfJLDinqc 
  13. Sanjay Subrahmanyan interview https://youtu.be/omMolRDT_uo 
  14. M.S. A Life in Music - T.J.S. George
  15. T.M. Krishna’s speech https://youtu.be/MRyhgog0RtA 
  16. M.S. banned from music academy https://blogs.timesofindia.indiatimes.com/tracking-indian-communities/when-ms-braved-a-ban-to-bring-tamil-centrestage/ 
  17. M.S. Subbulakshmi and Music Academy https://sriramv.wordpress.com/2010/10/28/ms-subbulakshmi-and-the-music-academy/ 
  18. Matthew Allen on Rukmini Devi http://acceleratedmotion.org/wordpress/wp-content/uploads/2014/12/rewriting_script.pdf 
  19. Saraswati Bhai http://www.thehindu.com/features/metroplus/she-paved-the-way/article6887087.ece 
  20. On Devadasis - Johannes Bronkhorst http://www.brill.com/sites/default/files/devadasis.pdf 
  21. Removal and re-introduction of percussion instruments in Carnatic Music - http://www.thehindu.com/features/friday-review/music/Crowning-glory-for-percussion-instruments/article16852558.ece 
22. New Mansions for music: Performance, Pedagogy and Criticism - Lakshmi Subramanian